search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி
    X

    சைக்கிள் போட்டியை போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் தொடங்கி வைத்தார்.

    மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி

    • மேலூர் அருகே மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடந்தது.
    • ரோட்டின் இருபுறமும் சைக்கிள் பந்தய ரசிகர்கள் போட்டிகளை கண்டு களித்தனர்.

    மேலூர்

    77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட சைக்கிளிங் கழகம் சார்பாக சைக்கிளிங் சாம்பியன்ஷிப் 2023 போட்டி மேலூர் நாவினிபட்டியில் நடைபெற்றது. மேலூர் அரசு கலைக்கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை தலைவர் பொன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின், மதுரை மாவட்ட செயலாளர் மற்றும் தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் சேர்மன் வல்லத்தரசன் முன்னிலை வகித்தார். மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் போட்டியை தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் தலைவர் மற்றும் மதுரை மாவட்ட தலைவர் ராஜா, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவர் வி.வி.ஆர். ராஜ் சத்யன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.மேலூர் தாலுகா ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் கெங்காதரன், மதுரை மாவட்ட சேர்மன் சின்னன், தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் துணைத் தலைவர் ஜான்சன் கலைச்செல்வன், மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன், மேலூர் டி.எஸ்.பி ஆர்லியஸ் ரொபோனி, சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முதல் 3 இடங்களை வென்றோருக்கு சான்றி தழ்களும், பதக்கங்களும், கோப்பை களும் வழங்கப்பட்டது. போட்டி தூரத்தை நிறைவு செய்யும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நடைபெற்ற போட்டியில் முதல் 2 இடங்களை வென்றவர் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் மதுரை மாவட்டத்தின் சார்பில் கலந்து கொள்கிறார்கள். சைக்கிள் பந்தயத்தை ரோட்டின் இருபுறமும் சைக்கிள் பந்தய ரசிகர்கள் போட்டிகளை கண்டு களித்தனர்.

    Next Story
    ×