search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாங்கண்ணியில், தேசிய அளவிலான சிலம்ப போட்டி
    X

    சிலம்ப போட்டி நடந்தது.

    வேளாங்கண்ணியில், தேசிய அளவிலான சிலம்ப போட்டி

    • 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • முடிவில் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கேடயம் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங் கண்ணியில் மாவட்டத்தில் முதன்முறையாக தனியார்பாரம்பரிய வீர சிலம்ப கழகம் சார்பில் 76 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. இதில் ஜூனியர், சப் ஜூனியர் ,சீனியர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா,பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் தனித்திறன் மற்றும் தொடு முறை, ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, மான்கொம்பு, சுருள்வாள், குத்துவரிசை உள்ளிட்ட போட்டிகள் நடுவர் மேற்பார்வையில் நடைபெற்றன. இதில் ஏராளமான சிறுவர்கள் உட்பட பலர் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அவர்கள் சர்வதேச அளவில் நடைபெறும் சிலம்பாட்ட போட்டிகளுக்கு தகுதி பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். நிகழ்ச்சியின் இறுதியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் கேடயம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×