search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்த தான முகாம்"

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரத்த தான முகாம் நடந்தது.
    • 96 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் பசும்பொன் தேவர் மேல்நிலைப்பள்ளி யில் அனைத்து இளைஞர் அமைப்பு கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மம்சாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கலா, ராஜபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மருத்துவர் கிரிஜா, தேவர் மகாசபை தலைவர் சித்தானந்தன், செயலாளர் காளிமுத்து, பசும்பொன் தேவர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வீரய்யா, சுசீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் 96 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் ஆகியோர் செய்தனர்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடைபெற்ற ரத்த தான முகாமிற்கு சுகாதார ஆய்வாளர் சுந்தரம் வரவேற்றார்.
    • திருமனுார் ஊராட்சி மன்ற தலைவர் கே.காளியப்பன் ரத்த தானம் செய்து முகாமை தொடங்கி வைத்தார்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த திருமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடைபெற்ற ரத்த தான முகாமிற்கு சுகாதார ஆய்வாளர் சுந்தரம் வரவேற்றார். மருத்துவ அலுவலர் தா.சிமி தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் சி.பொன்னம்பலம் முன்னிலையில், திருமனுார் ஊராட்சி மன்ற தலைவர் கே.காளியப்பன் ரத்த தானம் செய்து முகாமை தொடங்கி வைத்தார். சேலம்அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் ரவீந்திரன், ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு கருத்துரை வழங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனிசாமி, திருமனூர் அரிமா சங்க பொருளாளர் வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் முகாமில் கலந்து கொண்டனர். ரத்த தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • ஐ.எம்.ஏ., ரத்த வங்கி சார்பில் ரத்ததான முகாம் ஏ.வி.பி., பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • மாவட்ட திட்டத்தலைவர் அனந்தராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    திருப்பூர் : 

    திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., பள்ளி இன்டரேக்ட் கிளப், ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் மெட்டல் டவுன் மற்றும் ஐ.எம்.ஏ., ரத்த வங்கி சார்பில் ரத்ததான முகாம் ஏ.வி.பி., பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாமில் ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் மெட்டல் டவுன் தலைவர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார். ஏ.வி.பி. பள்ளி தாளாளர் கார்த்திகேயன் முகாமிற்கு தலைமை தாங்கியதோடு ரத்ததானத்தின் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினார். மாவட்ட திட்டத்தலைவர் அனந்தராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கவுரவ விருந்தினர்களாக மாவட்ட ரத்த தான முகாம் தலைவர் கமலா பாஸ்கர் மற்றும் ரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி கலந்து கொண்டனர்.

    ஏ.வி.பி., பூண்டி பள்ளி முதல்வர் பிரியா ராஜா, ரோட்டரி வி.என். முத்துராமலிங்கம், பிரேம் ஆனந்த், பிரகாஷ் வாழ்த்துரை வழங்கினர். முகாமில் ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் மெட்டல் டவுன் செயலாளர் ராமசந்திரன், பொருளாளர் சுகுமார் கலந்து கொண்டனர். பெற்றோர் மற்றும் தன்னார்வலர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். பள்ளி ஒருங்கிணைப்பாளர் அபிதாபானு,மேலாளர் ராமசாமி மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மாணவி அமிர்தவல்லி நன்றி கூறினார்.   

    • பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பணிக்குழு தலைவர் ஆடிட்டர் கல்யாணசுந்தரம் தொடங்கி வைத்தார்.
    • பின்னர் அவரும், கட்சியி னரோடு இணைந்து ரத்த தானம் செய்தார்.

    தொப்பூர்,

    பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாசின் திருமண நாளை முன்னிட்டு, பா.ம.க தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் சார்பில், தருமபுரி கலெக்டர் அலுவ லகம் எதிரே உள்ள, தனியார் ரத்த வங்கியில், ரத்ததான முகாம் நடைபெற்றது.

    முன்னதாக இந்த ரத்த தான முகாமை, பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பணிக்குழு தலைவர் ஆடிட்டர் கல்யாணசுந்தரம் தொடங்கி வைத்தார். பின்னர் அவரும், கட்சியி னரோடு இணைந்து ரத்த தானம் செய்தார்.

    தொடர்ந்து முகாமில் ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுர விக்கப்பட்டது. இதில் பா.ம.க நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கியதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களும் இன்னுயிர் காக்க ரத்த தானம் வழங்க வேண்டிய அவசியம் குறித்தும் தெரிவித்தனர்.

    • ரத்த தான முகாம் நடந்தது.
    • 20-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காரைக்குடி தலைமை மருத்துவமனை மற்றும் த.மு.மு.க. சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரமேஷ், நகராட்சி ஆணையாளர், காரைக்குடி தலைமை மருத்துவமனை மருத்துவர் அருள்தாஸ், தேவகோட்டை தலைமை மருத்துவமனை மருத்துவர் சிவதானு, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் அன்சாரி உசேன், அகிலன் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் தேவகோட்டை, காரைக்குடி மருத்துவமனைகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர். ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • மதுரை அருகே பாலமேட்டில் ரத்த தான முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு தனியார் மண்டபத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் ஏ.வி.பி. குழுமம் இணைந்து ரத்த தான முகாமை நடத்தியது. இந்த முகாமை ஏ.வி.பி. குழுமத்தின் நிறுவனர் டாக்டர் பார்த்திபன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரூராட்சி சேர்மன் சுமதி பாண்டியராஜன், முன்னிலை வகித்தார். ரத்த வங்கி மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், முகாமை ஒருங்கிணைத்தனர். இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.

    பின்னர் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் ரத்த தானம் வழங்குவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

    • இலவச சித்த மருத்துவம் மற்றும் ரத்ததான சிறப்பு முகாம் பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • கபிலர்மலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சித்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மனிதர்களுக்கு வரும் நோய்கள், சிகிச்சை பெறும் முறை, நோய்கள் வராமல் தடுப்பது குறித்து விளக்கி பேசினார்.

    பரமத்தி வேலூர்:

    6-வது தேசிய சித்த மருத்துவ நாளை கொண்டா டும் வகையில், பரமத்தி வேலூர் நண்பர்கள் குழு, அம்மையப்பர் அருட்பணி அறக்கட்டளை, நன்செய் இடையாறு சங்கர கந்தசாமி கண்டர் மேல்நிலைப்பள்ளி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, நாமக்கல் அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஆகியோர் இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவம் மற்றும் ரத்ததான சிறப்பு முகாம் பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமசாமி தலைமை வகித்தார். நண்பர்கள் குழு தலைவர் கேதாரநாதன் வரவேற்றார். வேலூர் நகர வர்த்தக தலைவர் சுந்தரம் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். பள்ளியின் செயலாளர் செல்வராசு ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார்.

    கபிலர்மலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சித்ரா சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு மனிதர்களுக்கு வரும் நோய்கள், சிகிச்சை பெறும் முறை, நோய்கள் வராமல் தடுப்பது குறித்து விளக்கி பேசினார். முகாமில் பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனை சித்த மருத்துவர் பர்வேஸ் பாபு தலைமையில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சிவகாமி (பரமத்தி ), சித்ரா(கபிலர்மலை), கோகிலா (நல்லூர்), நாமக்கல் அரசு மருத்துவமனை டாக்டர் பிரவீனா, நல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் கவிதா, சுகாதார மேற்பார்வையாளர் மணிவண்ணன் ஆகியோர்

    கொண்டகுழுவினர், முகாமில் கலந்து கொண்ட

    வர்களுக்கு பரிசோதனை களும், சிகிச்சைகளும் அளித்தனர்.

    அதேபோல் நாமக்கல் அரசு மருத்துவமனை டாக்டர் பிரவீனா தலைமை யிலான குழுவினர் ரத்த தான முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்தம் எடுத்தனர். இதில் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்தம் கொடுத்தனர். முடிவில் நண்பர்கள் குழு முன்னாள் தலைவர் சந்திரன் நன்றி கூறினார். முகாமில் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார்
    • ரத்ததானம் வழங்குவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில், ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கான ரத்ததான முகாம் இன்று நடந்தது. முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் ரத்ததானம் வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து நாகர்கோவில் டவுன் டி.எஸ்.பி. நவீன் குமார், வடசேரி இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஆயுதப்படை போலீசார் என 50-க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் வழங்கினார்கள்.

    ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் இருந்து வந்த டாக்டர் குழுவினர் ரத்தான முகாமில் பங்கேற்றனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறுகையில், இது மிக முக்கியமான நிகழ்வாகும். ரத்ததானம் வழங்குவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. போலீசார் தற்பொழுது ஆர்வமாக வந்து ரத்ததானம் வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.

    • 106 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது.
    • கல்லூரி மாணவர்கள், ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ரோட்டரி சங்கம், கிறிஸ்து அரசர் பொறியியல் கல்லூரி சார்பில் காரமடையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு 106 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி மாணவர்கள், ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சியில் ரோட்டரி காரமடை தலைவர் மகேஷ், சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன், உதவி ஆளுநர் சிவசதீஷ்குமார், செயலாளர் சௌமியாசதீஷ் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிறிஸ்து அரசர் பொறியியல் கல்லூரி நிர்வாகி சேவியர் மனோஜ், முதல்வர் டாக்டர் ஜெயக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் ரத்த தான முகாம் நடந்தது.
    • பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி, நாட்டு நலப்பணி திட்ட மாணவர் அமைப்பு மற்றும் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து கல்லூரி நிறுவனர் டாக்டர் இ.எம்.அப்துல்லா, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாமை நடத்தியது. தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தொடங்கி வைத்தார். இதில் 50-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் ரத்த தானம் வழங்கினர்.

    இதற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர் நாகநாதன் மற்றும் முதல்வர், பேராசிரியர்கள் செய்திருந்தனர். அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி அவரது 10 கட்டளைகளை கடைபிடிப்பதாக மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர். பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    • ரத்த தான முகாம் நடைபெற்றது
    • மேயர் தொடங்கிவைத்தார்

    கரூர்:

    கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நடத்திய ரத்த தான முகாம், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாநகர மேயர் கவிதா ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் அறிவழகன் தலைமையிலான குழுவினர் 58 யூனிட் ரத்தம் சேகரித்தனர். 

    • திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சி மாவட்ட கிளை மற்றும் ஸ்ரீரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய ரத்ததான முகாம் ஸ்ரீரங்கம் அரசு கலை கல்லூரியில் நடைபெற்றது.
    • முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் பேராசிரியர் சீனிவாசராகவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    திருச்சி :

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சி மாவட்ட கிளை மற்றும் ஸ்ரீரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய ரத்ததான முகாம் ஸ்ரீரங்கம் அரசு கலை கல்லூரியில் நடைபெற்றது.

    இந்த ரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் பேராசிரியர் சீனிவாசராகவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வெற்றிவேல், கல்லூரியின் முதல்வர் மலர்விழி,

    ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளை தலைவர் இன்ஜினியர் ராஜசேகர், யூத் ரெட் கிராஸ் திருச்சி மாவட்ட அமைப்பாளர் குணசேகரன், திருச்சி மாவட்ட ரத்த வங்கி அலுவலர் டாக்டர் வளர்மதி, பாலச்சந்தர், ஸ்ரீரங்கம் அரசு கலைக் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் உண்ணாமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் 100 மாணவ. மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ரத்ததானம் செய்தனர்.

    ×