என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரத்ததான முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.
திருமனூர் அரசு சுகாதார நிலையத்தில்ரத்த தான முகாம்
- அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடைபெற்ற ரத்த தான முகாமிற்கு சுகாதார ஆய்வாளர் சுந்தரம் வரவேற்றார்.
- திருமனுார் ஊராட்சி மன்ற தலைவர் கே.காளியப்பன் ரத்த தானம் செய்து முகாமை தொடங்கி வைத்தார்.
வாழப்பாடி:
வாழப்பாடி அடுத்த திருமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடைபெற்ற ரத்த தான முகாமிற்கு சுகாதார ஆய்வாளர் சுந்தரம் வரவேற்றார். மருத்துவ அலுவலர் தா.சிமி தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் சி.பொன்னம்பலம் முன்னிலையில், திருமனுார் ஊராட்சி மன்ற தலைவர் கே.காளியப்பன் ரத்த தானம் செய்து முகாமை தொடங்கி வைத்தார். சேலம்அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் ரவீந்திரன், ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு கருத்துரை வழங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனிசாமி, திருமனூர் அரிமா சங்க பொருளாளர் வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் முகாமில் கலந்து கொண்டனர். ரத்த தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
Next Story






