search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் இன்று போலீசாருக்கான ரத்த தான முகாம்
    X

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ரத்த தானம் வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவிலில் இன்று போலீசாருக்கான ரத்த தான முகாம்

    • போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார்
    • ரத்ததானம் வழங்குவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில், ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கான ரத்ததான முகாம் இன்று நடந்தது. முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் ரத்ததானம் வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து நாகர்கோவில் டவுன் டி.எஸ்.பி. நவீன் குமார், வடசேரி இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஆயுதப்படை போலீசார் என 50-க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் வழங்கினார்கள்.

    ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் இருந்து வந்த டாக்டர் குழுவினர் ரத்தான முகாமில் பங்கேற்றனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறுகையில், இது மிக முக்கியமான நிகழ்வாகும். ரத்ததானம் வழங்குவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. போலீசார் தற்பொழுது ஆர்வமாக வந்து ரத்ததானம் வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.

    Next Story
    ×