search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமத்துவ மக்கள் கட்சி"

    • கர்நாடகத்தில் உள்ள நடிகர்கள் நிர்பந்தத்திற்காக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
    • மக்களின் வேதனைகளை புரிந்து கொண்டு அரசு செயல்பட வேண்டும்.

    கே.கே.நகர்:

    சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு வலுவாக இருந்து ஒரு முடிவை எடுக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என கூறும் நேரத்தில் ஒரே நாட்டிற்குள் இருக்கும் காவிரி பிரச்சனையை தீர்க்க முடியாமல் இருப்பது வேடிக்கையானது.

    காவிரி விவகாரத்தில் அதிகமான தண்ணீர் இருக்கும்போது கர்நாடகா அரசு திறந்து விட்டு விடுகிறார்கள். ஆனால் முறைப்படி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசு கூறினால் வழங்க மறுத்து வருகிறார்கள்.

    நடிகர்கள் தற்போது எல்லாம் மாநிலங்களுக்கும் சென்று நடித்து வருகிறார்கள். எனவே அவர்கள் தான் இந்த விவகாரத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் என்று இல்லை. காவிரி பிரச்சனையை சரி செய்ய வேண்டியது அரசு தான்.

    கர்நாடகத்தில் உள்ள நடிகர்கள் நிர்பந்தத்திற்காக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். ஆனால் எல்லோரும் அப்படி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று இல்லை.

    இங்கிருக்கும் ஆட்சியாளர்களுக்கு சாதகமான அரசு கர்நாடகத்தில் இருந்தாலும் அவர்கள் தண்ணீர் கொடுப்பதாக இல்லை.

    2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தான் நாங்கள் அதிகம் பயணிக்கிறோம். அதற்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல் குறித்து வருகிற டிசம்பர் 9-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் எங்களுடைய கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் சேர்ந்து முடிவை அறிவிப்போம்.

    தேர்தல் சூடு பிடிக்க இன்னும் ஒன்று அல்லது 2 மாதங்கள் ஆகலாம் எனவே பொறுத்து இருந்து தான் பார்க்க முடியும்.

    பாராளுமன்ற தேர்தல் பண நாயகமாக தான் இருக்கும். எம்.பி. தேர்தலில் நின்றால் ரூ.100 கோடி வேண்டும் என்கிறார்கள். சட்டசபை தேர்தல் என்றால் ரூ.25 கோடி வேண்டும் என்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா என தெரியவில்லை.

    5 சதவீத வாகனங்களுக்கான வரியை உயர்த்தி இருப்பது வருத்தம் அளிக்கின்றது. மக்களின் வேதனைகளை புரிந்து கொண்டு அரசு செயல்பட வேண்டும்.

    தேர்தலில் தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் தான் போட்டி என அண்ணாமலை கூறி இருப்பது அவருடைய கருத்து. அதற்கு நான் பதில் அளிக்க வேண்டியதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களின் மீது காவல்துறை பிரிவு 306-ன் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
    • பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கான வழக்கு எண் சேர்க்கப்படவில்லை என அறிகிறேன்.

    சென்னை :

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு பயின்று வந்த மாணவி சுஜிர்தா (வயது 27) பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை தருவதாக எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

    மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களின் மீது காவல்துறை பிரிவு 306-ன் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கான வழக்கு எண் சேர்க்கப்படவில்லை என அறிகிறேன். காவல்துறை அதிகாரிகள் உடனடியாக மாணவியின் தற்கொலைக்கு காரணமாக இருந்தவர்களை கைது செய்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரவும், இனிமேல் இதுபோன்று எந்தவொரு மாணவிக்கும் துயரம் ஏற்படாத வகையில், நேர்மையான முறையில் விசாரணை நடப்பதற்கு, இவ்வழக்கினை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டு, உரிய நீதி பெற்றுத்தர வேண்டுமென தமிழக அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும், கல்லூரிக்கு படிக்கச் சென்ற மகளை இழந்து தீராத வேதனையில் வாடும், முதுநிலை மருத்துவ கல்லூரி மாணவியின் பெற்றோருக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் கோவில் நடை பராமரிப்பு பணிக்காக அடைக்கப்படும் என்ற அறிவிப்பு பக்தர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
    • தமிழக அரசு உடனடியாக பிரச்சனையில் தலையிட்டு திருவிழா பாதுகாப்புடன் நடைபெறுவதற்கு ஆவன செய்ய வேண்டும்.

    சென்னை:

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட காரையாறு வனப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா தொடங்கிய நிலையில் வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் கோவில் நடை பராமரிப்பு பணிக்காக அடைக்கப்படும் என்ற அறிவிப்பு பக்தர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    காப்பு கட்டி பக்தர்கள் விரதமிருக்கக் கூடிய சமயத்தில் நடை மூடப்படும் என்ற அறிவிப்பும், பக்தர்கள் தனியார் வாகனங்களில் வரக்கூடாது, அரசுப்பேருந்தில் வர வேண்டும் என பல வகையான வழிபாட்டு கட்டுப்பாடுகள் அப்பகுதி மக்களின் மத நம்பிக்கையில் குழப்பம் ஏற்படுவதாக அமைந்துள்ளது. இத்தகைய சூழல் முற்றிலும் நியாயமற்றது. தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு திருவிழா பாதுகாப்புடன் நடைபெறுவதற்கு ஆவன செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நடிகர் விஜய் மட்டும் அல்ல மற்ற நடிகர்கள், டாக்டர்கள், என்ஜினீயர்கள் என அனைவரும் அரசியலுக்கு வரலாம்.
    • மக்களுக்காக சேவை செய்யும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம்.

    சென்னை:

    சென்னை பல்லவன் இல்லம் அருகே உள்ள ஜிம்கானா கிளப் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை. எங்கள் இலக்கு 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான். அப்போது கட்சி நிர்வாகிகள் என்ன முடிவு எடுக்கிறார்களோ, அதன்படி செயல்படுவோம். இன்னும் கூட்டணி தொடர்பான எந்த முடிவும் எடுக்கவில்லை. எங்கள் கட்சி வலுவாகத்தான் இருக்கிறது. மக்கள் மாறவேண்டும் என்ற எண்ணத்தில் பயணிக்கிறோம். மக்கள் அறிவு, ஆற்றல், திறமை உள்ளவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறேன். ஜனநாயகம் தழைக்கவேண்டும் என்றால் ஓட்டுக்கு பணம் கொடுக்கக்கூடாது. பணமில்லாத அரசியலை உருவாக்க வேண்டும். மக்கள் எங்கள் பக்கம் திரும்பி பார்க்கும் காலம் வரும் என்று நம்பிக்கையோடு பயணிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து சரத்குமாரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- காமராஜரை பின்பற்றிதான் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார் என்று பா.ஜ.க.வினர் கூறிவருகிறார்களே...

    பதில்:- ஒருவர் விட்டுச்சென்ற பணியை தொடர்கிறார் என்றால், பெருந்தலைவர் காமராஜருக்குதான் அந்த புகழ் சேரும். பொற்கால ஆட்சி தந்த காமராஜரை முன்னோடியாக வைத்து ஒருவர் பின்பற்றுகிறார் என்றால் அது வரவேற்கத்தக்கது. அதில் தவறில்லை.

    கேள்வி:- நடிகர் விஜய் அரசியலுக்கு வர உள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?

    பதில்:- நடிகர் விஜய் மட்டும் அல்ல மற்ற நடிகர்கள், டாக்டர்கள், என்ஜினீயர்கள் என அனைவரும் அரசியலுக்கு வரலாம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறேன். குறிப்பிட்ட ஒருவர்தான் அரசியலுக்கு வரவேண்டும், வரவேண்டாம் என சொல்ல நான் தயாராக இல்லை.

    கேள்வி:- நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால், அவரோடு கூட்டணி வைப்பீர்களா?

    பதில்:- நாங்கள் தனித்துதான் போட்டியிடப்போகிறோம். யாருடனும் கூட்டணி இல்லை. மக்களுக்காக சேவை செய்யும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம். நல்லவர்கள், வல்லவர்கள், அறிவு, ஆற்றல், திறமை உள்ளவர்கள் ஆட்சி புரியவேண்டும்.

    இவ்வாறு சரத்குமார் பதில் அளித்தார்.

    • சமீபத்தில் சரத்குமார் நடித்திருந்த பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரம் கவனம் பெற்றது.
    • சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் பேசியுள்ளார்.

    தமிழில் புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், சூரியன், நாட்டாமை, சூர்யவம்சம், நட்புக்காக உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சரத்குமார். இவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். நடிகராக மட்டுமல்லாது சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவராகவும் உள்ளார்.


    சரத்குமார்

    சரத்குமார்

    இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் பேசிய சரத்குமார், தற்போது எனக்கு 69 வயதாகிறது; இன்னும் 150 வயது வரை உயிருடன் வாழ்வதற்கான வித்தையை கற்றுள்ளேன். அதனை 2026ல் என்னை முதல்வராக்கினால் சொல்வேன் என்று தெரிவித்துள்ளார்.

    • சமத்துவ மக்கள் கட்சி தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நாளை நடக்கிறது.
    • கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    மதுரை

    சமத்துவ மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர்கள் புறா மோகன் (மத்தி), பாலமேடு கார்த்திக் (வடக்கு) ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டத்தில் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மதுரையில் நாளை (28-ந்தேதி) மாலை 5 மணிக்கு பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் நடைபெறுகிறது.

    கூட்டத்திற்கு கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் சுந்தர் விளக்க வுரையாற்றுகிறார். மாநில துணை பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வரவேற்று பேசுகிறார். மாநில வர்த்தக அணி துணை செயலாளர் கதிரேசன், மாவட்ட செயலாளர்கள் பஞ்சு, சிவாஜி பூமிநாதன் ஆகியோர் தலைமை மற்றும் முன்னிலை வகிக்கிறார்கள். சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத் குமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    முதன்மை துணை பொதுச்செயலாளர் கணேசன், கொள்கை பரப்பு செயலாளர் விவேகானந்தன் உள்பட நிர்வாகிகள் விளக்கவுரையாற்றுகின்றனர். முடிவில் மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் ரவி நன்றி கூறுகிறார்.

    மதுரையில் நடைபெற உள்ள சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத் தில் கலந்து கொள்ள வருகை தரும் நிறுவ னத்தலைவர் சரத்குமாருக்கு கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மேலும் பொதுக் கூட்டத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து கார், வேன் மூலம் திரளான தொண்டர்கள் வருகை தர உள்ளனர்.

    இதையொட்டி கூட்ட ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டு வருகின்றன. எனவே சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத் திற்கு தலைமைக்கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • வட சென்னை மேற்கு மாவட்டச்செயலாளராக துரைசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச்செயலாளராக செயல்பட்டு வந்த ஜெகன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாநில பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்.

    சென்னை:

    சமத்துவ மக்கள் கட்சி பொதுச்செயலாளர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மகளிரணி துணைச்செயலாளர்களாக சேலம் மாவட்டத்தை சார்ந்த தனலட்சுமி, சென்னை மாவட்டத்தை சார்ந்த ஷீபா ஆகியோரும், வட சென்னை மேற்கு மாவட்டச்செயலாளராக துரைசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மேலும், ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச்செயலாளராக செயல்பட்டு வந்த ஜெகன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாநில பொதுக்குழு உறுப்பினராகவும், ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச்செயலாளராக யுவராஜும் நியமிக்கப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளராக சிவஞான குருநாதன் நியமிக்கப்படுகிறார்.
    • பாலமுருகன் சிவகங்கை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

    சென்னை:

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளராக செயலாற்றி வந்த பன்னீர்செல்வம் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு ராமநாத புரம் மேற்கு மாவட்ட அவைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளராக சிவஞான குருநாதன் நியமிக்கப்படுகிறார்.

    நெல்லை மாநகர் மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வந்த மாநில மாணவரணி துணைச் செயலாளர் நட்சத்திர வெற்றி நெல்லை மாநகர மாவட்ட பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அழகேசன் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

    சிவகங்கை வடக்கு மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்த மலைக்கண்ணன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, பாலமுருகன் சிவகங்கை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • வட சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ரெட்ரோஸ் முருகேசபாண்டியன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
    • தென் சென்னை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக எஸ்.ஜி.ராஜாவும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக ஏ.ஜெ.எஸ்.பாஸ்கரனும், திருவள்ளூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக ஏ.வேல்ராஜனும் நியமிக்கப்படுகிறார்கள்.

    சென்னை:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கட்சி பணிகளை திறன்பட செயல்படுத்தாத காரணத்தால், தென் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஏ.பாலகிருஷ்ணன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

    மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.வி.சிவராஜூ, தென் சென்னை மத்திய மாவட்டச் செயலாளர் ஆர்.நடராஜ்குமார், திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளர் சந்தனக்குமார் ஆகியோர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மாவட்ட பிரதிநிதிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.

    மேலும், வட சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ரெட்ரோஸ் முருகேசபாண்டியன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

    தென் சென்னை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக எஸ்.ஜி.ராஜாவும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக ஏ.ஜெ.எஸ்.பாஸ்கரனும், திருவள்ளூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக ஏ.வேல்ராஜனும் நியமிக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தை கட்சியின் சென்னை மண்டல நிலையச் செயலாளர் புரசை டி.நாகப்பனும், வட சென்னை மேற்கு மாவட்டத்தை கட்சியின் மாநில மாணவரணி துணைச் செயலாளர் கிஷோரும், தென் சென்னை மத்திய மாவட்டத்தை கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் டி.மகாலிங்கமும் மேற்பார்வை செய்வார்கள்.

    புதிய நிர்வாகிகளுக்கு சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டி.எஸ்.பி. நவீன் குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
    • கைது செய்யப்பட்ட நிர்வாகிகள் அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். போதை பொருட்களை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் இன்று தமிழக முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    நாகர்கோவிலில் போராட்டம் நடத்துவதற்கு சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு திரண்டனர். போராட்டத்திற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் கால்டுவின் தலைமை தாங்கினார். பொறுப்பாளர் செண்பகவல்லி முன்னிலை வகித்தார்.

    மாநில கலை இலக்கிய துணை செயலாளர் அமலன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மேற்கு மாவட்ட செயலாளர் டார்வின் தாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் முருகன், ஜெபஸ்டின், தெற்கு மண்டல தலைவர் நலன் குமார், மகளிர் அணி செயலாளர் சந்திரா, தொண்டரணி செயலாளர் ராஜேஷ் மற்றும் ரதீஷ், எபனேசர், பாபு, செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் போதை பொருளை தடை செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. கோரிக்கை பதாகைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டி.எஸ்.பி. நவீன் குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கு மேற்பட்ட சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நிர்வாகிகள் அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    • மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் அறிக்கை
    • தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடக்கிறது

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி செயலாளர் அரசன் பொன்ராஜ் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

    தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உத்தரவுபடி நாளை (3-ந்தேதி) உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. குமரி மாவட்டத்தில் எனது தலைமையில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

    குமரி மாவட்டத்தை பொருத்தமட்டில் கஞ்சா, குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவை புழக்கங்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறது.இதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகக்கூடிய நிலையில் உள்ளது. மாணவர்களும் இந்த பழக்கத்திற்கு அடிமை யாகி வருவதால் அவர்களது வாழ்க்கை சீரழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    போதை மாத்திரை, போதை ஊசியால் தொழி லாளர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே போதைப் பொருட்களை கட்டுப்படுத்த துரித நடவ டிக்கை எடுக்க வேண்டும், இளைஞர் சமுதாயத்தை போதை பழக்கத்தில் இருந்து காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த போராட்டம் நடக்கிறது.

    சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நடைபெறும் இந்த போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • சமத்துவ மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்றத் தொகுதி செயலாளர்கள், பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை திருச்சியில் நடைபெறுகிறது.
    • இதில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான ஆர். சரத்குமார், முதன்மை துணைப் பொதுச்செயலாளரும் மாநில மகளிர் அணி செயலாளருமான ராதிகா சரத்குமார் ஆகியோர் தலைமை தாங்கி ஆலோசனைகள் வழங்குகிறார்கள்

    திருச்சி,

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்றத் தொகுதி செயலாளர்கள், பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை (4-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் திருச்சி காஜாமலை எஸ்.ஆர்.எம். ஓட்டல் அரங்கில் நடைபெறுகிறது.

    இதில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான ஆர். சரத்குமார், முதன்மை துணைப் பொதுச்செயலாளரும் மாநில மகளிர் அணி செயலாளருமான ராதிகா சரத்குமார் ஆகியோர் தலைமை தாங்கி ஆலோசனைகள் வழங்குகிறார்கள்.

    இந்த உயர் மட்ட குழு கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் அடுத்து வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக விவாதிக்கிறார்கள். இதில் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளரும் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளருமான என். சுந்தர், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் ஜி. ஈஸ்வரன், டி. மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வசிக்கிறார்கள்.

    முன்னதாக திருச்சி மண்டல செயலாளர் சி. எம்.சின்னசாமி வரவேற்று பேசுகிறார். முடிவில் மாநகர் மாவட்ட துணை செயலாளர் எம். எஸ். துரை பாலகிருஷ்ணன் நன்றி கூறுகிறார். கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டி.குணசேகரன் செய்து வருகிறார்.

    ×