search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    150 வயது வரை வாழும் வித்தை.. என்னை முதல்வராக்கினால் சொல்வேன்.. சரத்குமார் தடாலடி
    X

    150 வயது வரை வாழும் வித்தை.. என்னை முதல்வராக்கினால் சொல்வேன்.. சரத்குமார் தடாலடி

    • சமீபத்தில் சரத்குமார் நடித்திருந்த பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரம் கவனம் பெற்றது.
    • சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் பேசியுள்ளார்.

    தமிழில் புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், சூரியன், நாட்டாமை, சூர்யவம்சம், நட்புக்காக உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சரத்குமார். இவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். நடிகராக மட்டுமல்லாது சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவராகவும் உள்ளார்.


    சரத்குமார்

    இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் பேசிய சரத்குமார், தற்போது எனக்கு 69 வயதாகிறது; இன்னும் 150 வயது வரை உயிருடன் வாழ்வதற்கான வித்தையை கற்றுள்ளேன். அதனை 2026ல் என்னை முதல்வராக்கினால் சொல்வேன் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×