search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சமத்துவ மக்கள் கட்சியில் நிர்வாகிகள் பொறுப்பு மாற்றம்- சரத்குமார் அறிவிப்பு
    X

    சமத்துவ மக்கள் கட்சியில் நிர்வாகிகள் பொறுப்பு மாற்றம்- சரத்குமார் அறிவிப்பு

    • வட சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ரெட்ரோஸ் முருகேசபாண்டியன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
    • தென் சென்னை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக எஸ்.ஜி.ராஜாவும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக ஏ.ஜெ.எஸ்.பாஸ்கரனும், திருவள்ளூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக ஏ.வேல்ராஜனும் நியமிக்கப்படுகிறார்கள்.

    சென்னை:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கட்சி பணிகளை திறன்பட செயல்படுத்தாத காரணத்தால், தென் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஏ.பாலகிருஷ்ணன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

    மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.வி.சிவராஜூ, தென் சென்னை மத்திய மாவட்டச் செயலாளர் ஆர்.நடராஜ்குமார், திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளர் சந்தனக்குமார் ஆகியோர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மாவட்ட பிரதிநிதிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.

    மேலும், வட சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ரெட்ரோஸ் முருகேசபாண்டியன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

    தென் சென்னை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக எஸ்.ஜி.ராஜாவும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக ஏ.ஜெ.எஸ்.பாஸ்கரனும், திருவள்ளூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக ஏ.வேல்ராஜனும் நியமிக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தை கட்சியின் சென்னை மண்டல நிலையச் செயலாளர் புரசை டி.நாகப்பனும், வட சென்னை மேற்கு மாவட்டத்தை கட்சியின் மாநில மாணவரணி துணைச் செயலாளர் கிஷோரும், தென் சென்னை மத்திய மாவட்டத்தை கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் டி.மகாலிங்கமும் மேற்பார்வை செய்வார்கள்.

    புதிய நிர்வாகிகளுக்கு சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×