search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் நாளை சமத்துவ மக்கள் கட்சி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
    X

    திருச்சியில் நாளை சமத்துவ மக்கள் கட்சி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

    • சமத்துவ மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்றத் தொகுதி செயலாளர்கள், பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை திருச்சியில் நடைபெறுகிறது.
    • இதில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான ஆர். சரத்குமார், முதன்மை துணைப் பொதுச்செயலாளரும் மாநில மகளிர் அணி செயலாளருமான ராதிகா சரத்குமார் ஆகியோர் தலைமை தாங்கி ஆலோசனைகள் வழங்குகிறார்கள்

    திருச்சி,

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்றத் தொகுதி செயலாளர்கள், பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை (4-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் திருச்சி காஜாமலை எஸ்.ஆர்.எம். ஓட்டல் அரங்கில் நடைபெறுகிறது.

    இதில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான ஆர். சரத்குமார், முதன்மை துணைப் பொதுச்செயலாளரும் மாநில மகளிர் அணி செயலாளருமான ராதிகா சரத்குமார் ஆகியோர் தலைமை தாங்கி ஆலோசனைகள் வழங்குகிறார்கள்.

    இந்த உயர் மட்ட குழு கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் அடுத்து வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக விவாதிக்கிறார்கள். இதில் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளரும் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளருமான என். சுந்தர், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் ஜி. ஈஸ்வரன், டி. மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வசிக்கிறார்கள்.

    முன்னதாக திருச்சி மண்டல செயலாளர் சி. எம்.சின்னசாமி வரவேற்று பேசுகிறார். முடிவில் மாநகர் மாவட்ட துணை செயலாளர் எம். எஸ். துரை பாலகிருஷ்ணன் நன்றி கூறுகிறார். கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டி.குணசேகரன் செய்து வருகிறார்.

    Next Story
    ×