search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோஷ்டி மோதல்"

    • கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்ட நிர்வாகிகள் சிலர் வாக்குவாதம்.
    • காங்கிரஸ் தலைமை அலுவலத்தில் கலவரம் போன்ற சூழல் உருவானது.

    சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று கோஷ்டி மோதல் ஏற்பட்டது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் 300 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியை, கட்சி நிர்வாகிகள் சிலர் முற்றுகையிட்டனர். அப்போது அங்கிருந்த இரண்டு பேர் கன்னத்தில் அடித்த அழகிரி வெளியேறுமாறு கூறினார். இந்த முற்றுகையின் போது இருதரப்பு நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டது. 


    இதையடுத்து ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கிக் கொண்டனர். காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியே சாலையிலும் இந்த மோதல் தொடர்ந்தது. இதில் ஒருவருக்கு தலையிலும், ஒருவருக்கு முகத்திலும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இந்த மோதலால் அங்கு கலவரம் போன்ற சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனுக்கு போலீசார் வரவழைக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

    • 6 பேர் கைது, 30 பேர் மீது வழக்கு
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை,

    கலசப்பாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் திருவிழாவில் காளை மாடு விடும் நிகழ்ச்சியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலின் காரணமாக போலீசார் வழக்கு பதிவு செய்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இது சம்பந்தமாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக அவ்வப்போது பல்வேறு பிரச்சினைகள் இருதரப்பினர் இடையே ஏற்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையின் போது ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் ஒரு தரப்பினர் வீட்டிற்கு முன்பு பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும் போது கெங்கவரம் பகுதியை சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனை அடுத்து மீண்டும் இரு தரப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதில் ஒரு தரப்பினருக்கு படுகாயம் ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

    சம்பவத்தால் ஆதமங்கலம் புதூர் பகுதி சேர்ந்த பொதுமக்கள் தகராருக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி திடீரென நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து கடலாடி போலீசார் மற்றும் திருவண்ணாமலை ஏடிஎஸ்பி ஸ்டீபன், போளூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஆயுதப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர் இதனை தொடர்ந்து இரு தரப்பினர் இடையே கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 30க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதில் தற்போது இரு தரப்பினர்களிடமிருந்து சசிகுமார், சிதம்பரம், கவியரசு, மற்றும் தினேஷ், அருண், அஜித்குமார் ஆகிய 6 பேரை கடலாடி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தலைமறைவாக உள்ள மற்ற நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின்படி ஆதமங்கலம் புதூர் பகுதியில் பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    • திருச்சி அருகே ஏற்பட்ட திடீர் கோஷ்டி மோதலால் பதட்டத்தை தணிக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்
    • சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் லால்குடி டி.எஸ்.பி. சீதாராமன், இன்ஸ்பெக்டர் பிரபு, கல்லக்குடி சப் -இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் டால்மியாபுரம் அருகிலுள்ள கல்லக்குடி நடுத்தெருவில் வசித்து வருபவர் கங்காதரன் மகன் கார்த்திகேயன் மற்றும் அவரது தம்பி பால் என்கின்ற பாலசுப்ரமணியன்.

    இவர்கள் இருவரையும் அதே பகுதியைச் சார்ந்த காமராஜ், சேகர், கவியரசன், மணிகண்டன், பிரேம்குமார், கிருஷ்ணவேணி, விஜயா, ஹேமலதா, ராஜாங்கம் மற்றும் இரண்டு பேர் கொண்ட கும்பல் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று கார்த்திகேயனை சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் பலத்த காயம் அடைந்த கார்த்திகேயன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கார்த்திகேயனுக்கும் காமராஜ் குடும்பத்திற்கும் இடையே கடந்த 15 நாட்களுக்கு இறந்தவர் ஊர்வலம் சென்ற பொழுது வெடி வைத்ததில் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து கார்த்திகேயன் மற்றும் அவரது தம்பி இருவரும், காமராஜ் குடும்பத்தைச் சார்ந்த நண்பர்களிடம் எதற்கு என்னுடைய வீட்டுக்கு முன்னால் வெடி வைத்தீர்கள். இதனால் உடல் நலக்குறை காரணமாக இருந்த எனது அப்பா இறந்து விட்டார் என்று கூறி அவரை தாக்கியுள்ளனர்.

    அதனால் ஆத்திரமடைந்த காமராஜ் குடும்பத்தினர் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று கார்த்திகேயன் மற்றும் அவரது தம்பியை கத்தியால் குத்தி சரமாரியாக தாக்கியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

    ேமலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் காமராஜின் மனைவி கிருஷ்ணவேணியும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் லால்குடி டி.எஸ்.பி. சீதாராமன், இன்ஸ்பெக்டர் பிரபு, கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே சம்பவம் தொடர்பாக கல்லக்குடி கடைவீதியில் பிரியாணி கடை நடத்தி வரும் காமராஜின் கடையை அடித்து நொறுக்கி உள்ளனர்.

    இதனால் கல்லக்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • போலீசார் எச்சரிக்கை
    • இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு

    வேலூர்:

    வேலூர் தெற்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஓல்டு டவுன் பகுதியில் கடந்த 23-ந் தேதி பிற்பகல் சுமார் 2 மணியளவில், ஊர் நாட்டாண்மை தேர்ந்தெடுத்தது தொடர்பாக ஏற்கனவே இருந்த பிரச்சினையில் இருதரப்பினருக்கு இடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசி தாக்கிக்கொண்டனர்.

    இதில் அவர்களுக்கு லேசான காயங்கள் மட்டும் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் இருதரப்பினர் மீதும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், வழக்கில் தொடர்புடைய நபர்கள் குறித்து சம்பவ இடத்தில் பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அவர்கள் அனைவரையும் கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து தகவல்கள் யாருக்கேனும் கிடைத்தால் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கலாம். அப்பகுதியில் மேற்கொண்டு எவ்விதபிரச்சினை ஏற்படாமல் தவிர்க்க போலீசார் பணிய மர்த்தப்பட்டுள்ளனர்.

    இச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வீண் வதந்திகளை நம்பி மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்று கேட்டு க்கொள்ளப்படுகின்றது.

    • 6 பேர் குடிபோதையில் அன்பழகன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார்கள்.
    • தலித் வளவனை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது.

    கடலூர்:, அக்.25-

    கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 48). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தலித் வளவன் என்பவருக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று தலித்வளவன் உள்ளிட்ட 6 பேர் குடிபோதையில் அன்பழகன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டின் கதவு மற்றும் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் தலித் வளவனை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலித் வளவன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் தலித் வளவன், தமிழ், விக்கி உள்ளிட்ட 6 பேர் மீதும், தலித் வளவன் கொடுத்த புகாரின் பேரில் பால்ராஜ், திலீப், அஜித், சதீஷ் என மொத்தம் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்கடலூர் அருகே பில்லாலி தொட்டி சேர்ந்தவர் குரு (வயது 23) இவர் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் நத்தப்பட்டு கஷ்டம்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது குடிபோதையில் நின்று கொண்டிருந்த 3 நபர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து திடீரென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் குருவை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பாவாடைராயனை 3 பேர் தாக்கினர். இந்த மோதலில் குரு மற்றும் பாவாடைராயன் ஆகியோர் காயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனை சிகிச்சை சேர்க்கப்பட்டனர். இது குறித்து குரு கொடுத்த புகாரின் பேரில் நத்தப்பட்டு காலனியை சேர்ந்தவர்கள் பாவாடைராயன், அறிவழகன், முருகன் மற்றும் பாவாடைராயன் கொடுத்த புகாரின் பேரில் பில்லாலி தொட்டி சேர்ந்தவர்கள் குரு, வசந்தகுமார், சாலக்கரையை சேர்ந்த ராமு என 6 பேர் மீது நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வாக்குவாதம் ஏற்பட்டது.
    • 4-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் கடலூர் ரோடு பெரியார் நகர் பஸ் நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி இரண்டு கோஷ்டியினரும் ஒருவரை ஒருவர் மாறி தாக்கிக்கொண்டனர்.இந்நிலையில் அங்கு தகராறு செய்தவர்களில் ஒருவர் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் மற்றொ ருவர் மண்டையை அடித்து உடைத்துள்ளர். இதில் படுகாயமடைந்த அவர் விருத்தாசலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் இந்த மோதலில் 4-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்து வமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஒருவருக்கு ஒருவர் தடி, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.
    • மோதலில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே எலந்தம்பட்டு காலணியை சேர்ந்தவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கலியபெருமாள். இவரது மனைவி உமையாள் (வயது 56) இவர் நேற்று இறந்தார். அவரது இறுதி ஊர்வலம்நேற்று மாலை நடந்தது. இந்த ஊர்வலத்தின் போது மாலையை அதே ஊரை சேர்ந்த கார்த்தி (25) என்பவர், பரத் (25) என்பவர் கழுத்தில் போட்டுள்ளார். இதனால் இருவரு க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சவ ஊர்வலம் முடித்து விட்டு வந்து ஒருவருக்கு ஒருவர் தடி, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.

    இதில் பஞ்சாட்சரம் (55), பரத் (25), வடிவேல்(53), கார்த்தி (25) உள்பட 6 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்த அனை வரும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது குறித்து 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து, மோதலில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • பரத் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் தெருக்கூத்து நடைபெறும் பகுதி வழியாக வந்தார்.
    • வாய் தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே ஆண்டிக்குழி பகுதியில் நேற்று தெருக்கூத்து நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த பரத் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் தெருக்கூத்து நடைபெறும் பகுதி வழியாக வந்தார். வரும்போது தெருக்கூத்து பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது பரத் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. உடனே பொதுமக்கள் இது குறித்து பரத்திடம் கேட்டனர். ஆத்திரமடைந்த பரத் அவர்களை தகாத வார்த்தையால் திட்டினார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகறாக ஏற்பட்டது.

    இந்த வாய் தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இது குறித்து பரத் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜ், வடிவேல் ,ராஜேந்திரனை கைது செய்தனர் மேலும் இது சம்பந்தமாக 15 பேரையும் தேடி வருகின்றனர். இதேபோல் பொதுமக்கள் கோவிந்தன் அளித்த புகாரின் பேரில் பரத் தரப்பில் ஸ்ரீராம் கைது செய்யப்பட்டார். மேலும் பரத் மற்றும் இவரது தரப்பில் 15 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • முகாமில் வசித்து வரும் இரு தரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
    • படுகாயமடைந்த 6 பேரும் தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பெரும்பாலை அருகேயுள்ள நாகாவதி அணை பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.இந்த முகாமில் வசித்து வரும் இரு தரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இதன் காரணமாக முகாமில் வசிக்கும் கணேசன் (வயது 24),பாக்கியராஜ், வசீகரன்,செல்வராணி, பாலகிருஷ்ணன், ரமேஷ் ஆகியோர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் படுகாயமடைந்த 6 பேரும் தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இரு தரப்பிலும் தந்த புகார்கள் பேரில் பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • கடலூர் அருகே 2 கோஷ்டியினர் மோதல்- 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    • தந்தை கார்த்தி , சிவமூர்த்தி என்பவரிடம் சென்று கேட்டபோது கார்த்தியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் தமிழ் குச்சிபாளையம் சேர்ந்தவர் கார்த்தி. இவரது மகன் புகழேந்தி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் வான் பக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மாட்டுவண்டி சென்று கொண்டிருந்தபோது அதிலிருந்து நபர் மாடுகளை குச்சியால் அடித்துக் கொண்டிருந்த போது புகழேந்தி மீது பட்டது. இதனைப் புகழேந்தி கேட்டபோது மாட்டு வண்டியில் சென்றவர் திடீரென்று தாக்கினார். இதனை அறிந்த தந்தை கார்த்தி , சிவமூர்த்தி என்பவரிடம் சென்று கேட்டபோது கார்த்தியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    மேலும் இந்த தகராறில் சிவமூர்த்தியை, கார்த்தி தரப்பினர் தாக்கியதாக தெரிகிறது. இதில் கார்த்தி, புகழேந்தி மற்றும் சிவமூர்த்தி ஆகிய 3 பேர் காயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கார்த்தி கொடுத்த புகாரின் பேரில் பெரிய சோழவள்ளியை சேர்ந்த சிவமூர்த்தி, சத்தியமூர்த்தி, பக்கிரி, ரவிவர்மா ஆகிய 4 பேர் மீதும், சிவமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் டி.குச்சிப்பாளையம் சேர்ந்த ஜீவா, வினோத், புகழ், கார்த்தி என 8 பேர் மீது போலீசார் தனித்தனி புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோஷ்டி மோதல்; 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மதுபானம் அருந்தி, சிகரெட் புகைத்துக் கொண்டு இருந்தனர். இதனை கோபாலகிருஷ்ணன் தட்டி கேட்டார்.

    மதுரை

    மதுரை கீழவைத்தியநா தபுரத்தை சேர்ந்த செந்தில்வேல் மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 20). இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்தார்.

    அப்போது இதே பகுதியில் வசிக்கும் வேலு மகன் ரமேஷ் என்ற மொக்கையன் (22), நெப்போலியன் தெரு கிருஷ்ணமூர்த்தி மகன் பன்னீர் (19) ஆகிய 2 பேர், வீட்டின் அருகே மதுபானம் அருந்தி, சிகரெட் புகைத்துக் கொண்டு இருந்தனர். இதனை கோபாலகிருஷ்ணன் தட்டி கேட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேர் இரும்பு கம்பியால் கோபாலகிருஷ்ணனை தாக்கினர். இது தொடர்பாக கோபாலகிருஷ்ணன், செல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் என்ற மொக்கையன், பன்னீர் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    இதே வழக்கில் கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் செந்தில் வேலை கைது செய்தனர்.

    • மதுரை அருகே 4 பேர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர்.
    • திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    மதுரை

    திருப்பரங்குன்றம், தேவி நகரை சேர்ந்தவர் கண்ணன் (43). இவர் லாரி செட் நடத்தி வருகிறார். இவரது சகோதரர் மணிவண்ணன். இவர் பாலாஜி நகரில் வசிக்கும் திருமணமான பெண்ணுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி தொந்தரவு கொடுத்தாராம்.

    இந்த நிலையில் பாலாஜி நகர், காமராஜர் தெரு, ஜெயச்சந்திரன் என்ற கோட்டை காளை (58), அவரது மகன் மாயபாண்டியன் (28), தேவி நகர் இளையசாமி (43) மற்றும் கார்த்திக், விக்கி, அலெக்ஸ் உள்பட 6 பேர் லாரி செட்டுக்கு வந்து கண்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார் கண்ணாடி உடைத்து நொறுக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் பசுமலை, முனியாண்டிபுரம் மணிவண்ணன் வீட்டுக்கும் சென்று அங்கிருந்த மனைவி ஜெயலட்சுமியை (25) தாக்கினர். இதுகுறித்து திருநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெயச்சந்திரன், இளையசாமி, மாய பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர்.

    இதே வழக்கில் ஜெயசந்திரன் மகள் ரதி லட்சுமி (32) கொடுத்த புகாரின்பேரில், மணிவண்ணனை போலீசார் கைது செய்தனர்.

    ×