search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில் இறுதி ஊர்வலத்தில் கோஷ்டி மோதல்: 6 பேர் காயம்
    X

    பண்ருட்டியில் இறுதி ஊர்வலத்தில் கோஷ்டி மோதல்: 6 பேர் காயம்

    • ஒருவருக்கு ஒருவர் தடி, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.
    • மோதலில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே எலந்தம்பட்டு காலணியை சேர்ந்தவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கலியபெருமாள். இவரது மனைவி உமையாள் (வயது 56) இவர் நேற்று இறந்தார். அவரது இறுதி ஊர்வலம்நேற்று மாலை நடந்தது. இந்த ஊர்வலத்தின் போது மாலையை அதே ஊரை சேர்ந்த கார்த்தி (25) என்பவர், பரத் (25) என்பவர் கழுத்தில் போட்டுள்ளார். இதனால் இருவரு க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சவ ஊர்வலம் முடித்து விட்டு வந்து ஒருவருக்கு ஒருவர் தடி, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.

    இதில் பஞ்சாட்சரம் (55), பரத் (25), வடிவேல்(53), கார்த்தி (25) உள்பட 6 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்த அனை வரும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது குறித்து 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து, மோதலில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×