search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருத்தாசலம்  பஸ் நிறுத்தம் அருகே  2 தரப்பினர் பயங்கர மோதல்: பீர்பாட்டில் குத்து
    X

    விருத்தாசலம் பஸ் நிறுத்தம் அருகே 2 தரப்பினர் பயங்கர மோதல்: பீர்பாட்டில் குத்து

    • இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வாக்குவாதம் ஏற்பட்டது.
    • 4-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் கடலூர் ரோடு பெரியார் நகர் பஸ் நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி இரண்டு கோஷ்டியினரும் ஒருவரை ஒருவர் மாறி தாக்கிக்கொண்டனர்.இந்நிலையில் அங்கு தகராறு செய்தவர்களில் ஒருவர் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் மற்றொ ருவர் மண்டையை அடித்து உடைத்துள்ளர். இதில் படுகாயமடைந்த அவர் விருத்தாசலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் இந்த மோதலில் 4-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்து வமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×