search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாட்டில் குத்து"

    • வேலூர் கோட்டையில் துணிகரம்
    • செல்போனை பறிக்க முயற்சி

    வேலூர்:

    வேலூர் கோட்டைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் அங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சிக்கு செல்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று வேலூர் கோட்டை கொத்தளம் பகுதியில் சிலர் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தனர். அப்போது முள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த முபாரக் (வயது 34) என்பவர் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தவர்களில் ஒரு வாலிபரிடம் செல்போனை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

    மேலும் அந்த வாலிபரை முபாரக் கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. உடனே பொதுமக்கள் சத்தம் போடவும் முபாரக் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    அவரை கோட்டை நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த வேலூர் வடக்கு போலீஸ் நிலைய போலீஸ்காரர் தமிழரசன் பிடிக்க முயன்றார். அப்போது முபாராக் கையில் வைத்திருந்த உடைந்த கண்ணாடி பாட்டிலால் தமிழரசனை குத்தி விட்டு தப்பி ஓடினார். பின்னர் அவர் பழைய பஸ் நிலைய பகுதிக்கு சென்று அங்குள்ள வாகனங்களை சேதப்படுத்தி பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார். உடனே அவரை போலீஸ்காரர் பாலாஜி தடுக்க முயன்றார். அவரையும் முபாரக் பாட்டிலால் குத்தினார்.

    வாலிபர் கைது

    அதற்குள் அங்கு வந்த வேலூர் வடக்கு போலீஸ் நிலைய போலீசார் முபாரக்கை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். காயம் அடைந்த 2 போலீஸ்காரர்களையும் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து முபாரக்கை அண்ணா சாலையில் உள்ள மாஜிஸ்திரேட்டு குடியிருப்புக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

    அப்போது முபாரக் தப்பி ஓடினார். உடனே முபாரக்கை விரட்டி சென்று போலீசார் பிடித்தனர்.

    அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    போலீசார் விசாரணையில் முபாரக் போதையில் இருந்ததும் அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரையில் ரவுடி கொலையில் மது போதையில் நண்பர்கள் பீர் பாட்டிலால் குத்திக்கொன்றது அம்பலமானது.
    • இதில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை உலகனேரி செங்குன்றம் நகர் கன்னிமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் என்ற டோரா பாலா (வயது 29). இவர் மீது புதூர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்தநிலையில் நேற்று உத்தங்குடி வளர்நகர் பகுதியில் உள்ள முட்புதரில் டோரா பாலா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பாலாவின் வயிற்றில் பாட்டிலால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. எனவே அவர் கொலை செய்யப்பட்டது உறுதி யானது. இதையடுத்து கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த டோரா பாலா கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர் வினோத் என்பவருடன் மது அருந்தியுள்ளார். அப்போது டோரா பாலா, வினோத்தின் தாய் குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

    இதுகுறித்து வினோத் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் சமரசமாக சென்று விடலாம் என கூறி சம்பவத்தன்று இரவு டோரா பாலாவை மது குடிக்க அழைத்து உள்ளனர். வளர்நகர் பகுதியில் டோரா பாலா, வினோத் மற்றும் நண்பர்கள் ஜெகதீஸ்வரன், மேலூர் மாரி, புலி என்ற விஜயராகவன், மார்க்கெட் சூர்யா ஆகிய 6 பேர் சேர்ந்து மது குடித்துள்ளனர்.

    போதை தலைக்கேறிய நிலையில் மீண்டும் டோரா பாலா, வினோத்திடம் தகராறு செய்து அவரது தாயை இழிவாக பேசியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த வினோத், ஜெகதீஸ்வரன் உள்பட 5 பேர் பீர் பாட்டிலால் டோரா பாலாவை குத்திக்கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை அங்குள்ள முட்புதரில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

    மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜெகதீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட வினோத் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வாக்குவாதம் ஏற்பட்டது.
    • 4-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் கடலூர் ரோடு பெரியார் நகர் பஸ் நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி இரண்டு கோஷ்டியினரும் ஒருவரை ஒருவர் மாறி தாக்கிக்கொண்டனர்.இந்நிலையில் அங்கு தகராறு செய்தவர்களில் ஒருவர் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் மற்றொ ருவர் மண்டையை அடித்து உடைத்துள்ளர். இதில் படுகாயமடைந்த அவர் விருத்தாசலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் இந்த மோதலில் 4-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்து வமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
    • கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகேயுள்ள வீரப்பநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). ஆட்டோ டிரைவர்.

    இவர் தனது நண்பர்களான சந்திரன்,சரவணன் ஆகியோருடன் பழையபேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் அருகில் நின்று மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களிடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சந்திரனும்,சரவணனும் சேர்ந்து மதுபாட்டிலால் மணிகண்டனை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த தாக்குதல் சம்பவம் குறித்து மணிகண்டன் தந்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரன்,சரவணன் இருவரையும் கைது செய்தனர்.

    ×