search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே  கொடுக்கல், வாங்கல் தகராறில் ஆட்டோ டிரைவருக்கு பாட்டில் குத்து
    X

    கிருஷ்ணகிரி அருகே கொடுக்கல், வாங்கல் தகராறில் ஆட்டோ டிரைவருக்கு பாட்டில் குத்து

    • பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
    • கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகேயுள்ள வீரப்பநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). ஆட்டோ டிரைவர்.

    இவர் தனது நண்பர்களான சந்திரன்,சரவணன் ஆகியோருடன் பழையபேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் அருகில் நின்று மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களிடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சந்திரனும்,சரவணனும் சேர்ந்து மதுபாட்டிலால் மணிகண்டனை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த தாக்குதல் சம்பவம் குறித்து மணிகண்டன் தந்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரன்,சரவணன் இருவரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×