search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bottle punching"

    • இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வாக்குவாதம் ஏற்பட்டது.
    • 4-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் கடலூர் ரோடு பெரியார் நகர் பஸ் நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி இரண்டு கோஷ்டியினரும் ஒருவரை ஒருவர் மாறி தாக்கிக்கொண்டனர்.இந்நிலையில் அங்கு தகராறு செய்தவர்களில் ஒருவர் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் மற்றொ ருவர் மண்டையை அடித்து உடைத்துள்ளர். இதில் படுகாயமடைந்த அவர் விருத்தாசலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் இந்த மோதலில் 4-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்து வமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • காதல் விவகாரத்தில் தாக்கப்பட்ட விவசாயிக்கு தீவிர சிகிச்சை.
    • விவசாயியை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி மடத்து தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 42). விவசாயி.

    இவரை நேற்று இரவு 6 பேர் கும்பல் பீர்பாட்டிலால் குத்திவிட்டு தப்பி சென்றது. இதில் பாலசுப்பிரமணியம் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பாலகிருஷ்ணனின் உறவினர் பெண்ணை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்டபோது ஏற்பட்ட தகராறில் பாட்டில் குத்து விழுந்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவன் பாண்டி (28), வேல்முருகன் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×