search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லிடைக்குறிச்சி அருகே விவசாயிக்கு பாட்டில் குத்து- 2 வாலிபர்கள் கைது
    X

    கல்லிடைக்குறிச்சி அருகே விவசாயிக்கு பாட்டில் குத்து- 2 வாலிபர்கள் கைது

    • காதல் விவகாரத்தில் தாக்கப்பட்ட விவசாயிக்கு தீவிர சிகிச்சை.
    • விவசாயியை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி மடத்து தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 42). விவசாயி.

    இவரை நேற்று இரவு 6 பேர் கும்பல் பீர்பாட்டிலால் குத்திவிட்டு தப்பி சென்றது. இதில் பாலசுப்பிரமணியம் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பாலகிருஷ்ணனின் உறவினர் பெண்ணை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்டபோது ஏற்பட்ட தகராறில் பாட்டில் குத்து விழுந்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவன் பாண்டி (28), வேல்முருகன் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×