என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோஷ்டி மோதல்; 3 பேர் கைது
Byமாலை மலர்18 July 2022 9:26 AM GMT
- கோஷ்டி மோதல்; 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மதுபானம் அருந்தி, சிகரெட் புகைத்துக் கொண்டு இருந்தனர். இதனை கோபாலகிருஷ்ணன் தட்டி கேட்டார்.
மதுரை
மதுரை கீழவைத்தியநா தபுரத்தை சேர்ந்த செந்தில்வேல் மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 20). இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்தார்.
அப்போது இதே பகுதியில் வசிக்கும் வேலு மகன் ரமேஷ் என்ற மொக்கையன் (22), நெப்போலியன் தெரு கிருஷ்ணமூர்த்தி மகன் பன்னீர் (19) ஆகிய 2 பேர், வீட்டின் அருகே மதுபானம் அருந்தி, சிகரெட் புகைத்துக் கொண்டு இருந்தனர். இதனை கோபாலகிருஷ்ணன் தட்டி கேட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேர் இரும்பு கம்பியால் கோபாலகிருஷ்ணனை தாக்கினர். இது தொடர்பாக கோபாலகிருஷ்ணன், செல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் என்ற மொக்கையன், பன்னீர் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இதே வழக்கில் கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் செந்தில் வேலை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X