search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோஷ்டி மோதல்; 3 பேர் கைது
    X

    கோஷ்டி மோதல்; 3 பேர் கைது

    • கோஷ்டி மோதல்; 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மதுபானம் அருந்தி, சிகரெட் புகைத்துக் கொண்டு இருந்தனர். இதனை கோபாலகிருஷ்ணன் தட்டி கேட்டார்.

    மதுரை

    மதுரை கீழவைத்தியநா தபுரத்தை சேர்ந்த செந்தில்வேல் மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 20). இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்தார்.

    அப்போது இதே பகுதியில் வசிக்கும் வேலு மகன் ரமேஷ் என்ற மொக்கையன் (22), நெப்போலியன் தெரு கிருஷ்ணமூர்த்தி மகன் பன்னீர் (19) ஆகிய 2 பேர், வீட்டின் அருகே மதுபானம் அருந்தி, சிகரெட் புகைத்துக் கொண்டு இருந்தனர். இதனை கோபாலகிருஷ்ணன் தட்டி கேட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேர் இரும்பு கம்பியால் கோபாலகிருஷ்ணனை தாக்கினர். இது தொடர்பாக கோபாலகிருஷ்ணன், செல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் என்ற மொக்கையன், பன்னீர் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    இதே வழக்கில் கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் செந்தில் வேலை கைது செய்தனர்.

    Next Story
    ×