search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைப்பந்து"

    • கைப்பந்து போட்டியில் சென்னை-கோவை அணிகள் சாம்பியன் பட்டம் பெற்றது.
    • பதக்கங்களையும், சான்றிதழ்களையும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் நகர கைப்பந்து கழகத்தின் சார்பில் மாநில அளவிலான இளையோருக்கான யூத் சாம்பியன்ஷிப் கைப்பந்து போட்டிகள் கடந்த 6-ந் தேதி தொடங்கியது.

    21 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்த போட்டிகளில் விருதுநகர், சேலம், திருவாரூர், வேலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 35 மாவட்டங்களில் இருந்து 35 அணிகளை சேர்ந்த 420 ஆண்கள் மற்றும் 26 அணிகள் கலந்து கொண்டன.ராம்கோ ஊர்காவல் படை மைதானம் மற்றும் நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் உள்ள 5 ஆட்டக் களங்களில் 4 நாட்கள் பகல் இரவாக இந்த போட்டிகள் நடந்தன. லீக் முறையில் ஆண்களுக்கு 60 போட்டிகளும், பெண்களுக்கு 34 போட்டிகளும் நடந்தது.

    பெண்களுக்கான இறுதிப்போட்டியில் சென்னை அணியினர் 3 - 0 என்ற நேர் செட் கணக்கில் சேலம் அணியினரை வென்று முதலிடம் பிடித்தனர். 2-ம் இடத்தை சேலம் அணியினரும், 3 -ம் இடத்தை கிருஷ்ணகிரியும், 4-ம் இடத்தை மதுரை அணியினரும் பிடித்தனர்.

    ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் கோவை அணியினர் 3 - 1 என்ற புள்ளிக்கணக்கில் திருவாரூர் மாவட்ட அணியினரை தோற்கடித்தனர். சேலம் அணியினர் 3-வது இடத்தையும், தூத்துக்குடி அணியினர் 4-வது இடத்தையும் பிடித்தனர்.

    இறுதிப் போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்த அணியினருக்கு பரிசுக்கோப்பையுடன், பதக்கங்களையும், சான்றிதழ்களையும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர்.

    • இளையோர் கைப்பந்து போட்டி நடந்தது.
    • ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு கோப்பையுடன், சான்றிதழ்களும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானம் மற்றும் ராம்கோ ஊர்க்காவல் படை மைதானத்தில் மாநில அளவிலான இளையோருக்கான யூத் சாம்பியன்ஷிப் கைப்பந்து போட்டி தொடங்கியது. மாநில கைப்பந்து கழக தலைமைப் புரவலர் ஜெயமுருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு கைப்பந்து கழகத்தின் தலைவர் அர்ஜுன்துரை காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து பெண்கள் அணி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணமராஜபாளையம்நாடார் உறவின்முறை தலைவர் ஆதவன், செயலாளர் வெற்றிச்செல்வன், மாவட்ட கைப்பந்து கழகத்தின் செயலாளர் துரைசிங், மாவட்டத் தலைவர் செல்வ கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 4 நாட்கள் பகல் இரவாக இந்த போட்டிகள் நடைபெறுகிறது. முதல் இரண்டு நாட்கள் லீக் முறையிலும், 3 மற்றும் 4 வது நாளில் நாக் அவுட் முறையிலும் இறுதிப் போட்டிகள் நடைபெறுகிறது.

    தொடக்க ஆட்டத்தில் சென்னை, கோவை பெண்கள் அணியினர் மோதினர். இதில் சென்னை அணி வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு கோப்பையுடன், சான்றிதழ்களும் பரிசாக வழங்கப்பட உள்ளது. 

    • 26-வது தமிழ்நாடு மாநில அளவிலான கைப்பந்து போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
    • போட்டியில் செங்கல்பட்டு, பொள்ளாச்சி, ஈரோடு, சென்னை, திருச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட 6 கல்லூரி அணிகள் பங்கேற்றன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நாகை மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் மன்சூர் கைப்பந்து கழகம் இணைந்து நடத்தும் 26-வது தமிழ்நாடு மாநில அளவிலான கைப்பந்து போட்டி தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கலாராணி தலைமை தாங்கினார். நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் போட்டியை தொடக்கி வைத்து விளையாட்டு வீரர்களை வாழ்த்தினார். இப்போட்டியில் செங்கல்பட்டு, பொள்ளாச்சி, ஈரோடு, சென்னை, திருச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட 6 கல்லூரி அணிகள் பங்கேற்றன.

    இந்நிகழ்ச்சியில் திட்டச்சேரி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அப்துல் ரஷீத், கலைமகள் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் குடியரசு, திட்டச்சேரி நிர்வாக சபை தலைவர் அப்துல் நாசர், நாகை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மயிலாடுதுறை கைப்பந்து சங்க தலைவர் ராஜ்கமல், மயிலாடுதுறை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் பாபு, தலைவர் செந்தில்குமார், சர்வதேச கைப்பந்து வீரர் முகமது ரியாசுதீன் மற்றும் கைப்பந்து பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோட்டில் நடைபெறும் மண்டல அளவிலான கைப்பந்து போட்டிக்கு செல்லும்சேலம் வீரர்களுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது.
    • ஈரோடு மாவட்டம் நம்பியூரில் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் கோவை மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டி நடக்கிறது.

    சேலம்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூரில் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் கோவை மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டி நடக்கிறது. இதில் சேலம் மாவட்டத்தில் இருந்து கலந்துகொள்ளும் வீரர்களுக்கு வழியனுப்பு விழா நேற்று சேலத்தில் நடந்தது.

    சேலம் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல் வரவேற்று பேசினார்.

    தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கி, வீரர்களுக்கு பயணப்படி மற்றும் ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்து தெரிவித்து வழியனுப்பினார். இந்த நிகழ்ச்சியில் துணைத்தலைவர் அகிலாதேவி, ராஜாராம் இணைச் செயலாளர் வடிவேல், தொழிலதிபர் விஜயராஜ், வளர்ச்சி குழு தலைவர் வேங்கையன், நிர்வாகி நந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் மேற்கு மண்டல அளவிலான சீனியர் (ஆண்கள்) கைப்பந்து போட்டி நடைபெற்ற உள்ளது.
    • இத்தகவலை குமுதா பள்ளியின் தாளாளரும், கமிட்டி சேர்மனுமான கே.ஏ.ஜனகரத்தினம் தெரிவித்தார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் மேற்கு மண்டல அளவிலான சீனியர் (ஆண்கள்) கைப்பந்து போட்டி நடைபெற்ற உள்ளது.

    தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்கத்தால் நடத்தப்படும் மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து சீனியர் (ஆண்கள்) சேம்பியன்ஷிப் போட்டிகள் ஈரோடு, கோவை, தர்மபுரி, கரூர், நீலகிரி, நாமக்கல், சேலம், திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்ற அணிகள் பங்கேற்று விளையாட உள்ளனர் .

    ஈரோடு மாவட்ட கைப்பந்து சங்கத்தின் பரிந்துரைப்படி குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போட்டிகள் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி–க்கான ஏற்பாடுகளை பள்ளியின் செயலாளர் டாக்டர் அரவிந்தன், பள்ளியின் முதல்வர் மஞ்சுளா, துணைமுதல்வர் வசந்தி, உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் செய்து வருகின்றனர்.

    இத்தகவலை குமுதா பள்ளியின் தாளாளரும், கமிட்டி சேர்மனுமான கே.ஏ.ஜனகரத்தினம் தெரிவித்தார்.

    • போட்டியில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களை சார்ந்த 15 அணிகள் பங்கேற்றது.
    • பனவடலிச்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் போட்டியினை தொடங்கி வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் வட்டம் மேலநீலிதநல்லூரில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பாக தென் மண்டல அளவிலான மாவட்டங்களுக்கிடையேயான கைப்பந்து போட்டி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை சார்ந்த 15 அணிகள் பங்கு கொண்டன. போட்டியில் மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அணி முதல் இடத்தையும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜி.எஸ். கல்லூரி இரண்டாம் இடத்தையும்,

    பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மூன்றாம் இடத்தையும், நாகர்கோவில் தூய அல்போன்சா கல்லூரி அணி நான்காம் இடமும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

    பரிசளிப்பு விழாவில் நெல்லை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் சந்திரகுமார், தென்காசி மாவட்ட செயலர் ரமேஷ்குமார், கல்லூரி முதல்வர் ஹரிகெங்காராம் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக நடை பெற்ற தொடக்க விழாவில் பனவடலிச்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் கலந்து கொண்டு போட்டியினை தொடங்கி வைத்தார். போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முத்துக்குமார் செய்திருந்தார்.

    • சத்தியமங்கலம் காம தேனு கலை அறிவியல் கல்லூரியில் பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது.
    • கல்லூரி நிறுவனத்தலைவர் பெருமாள்சாமி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் காம தேனு கலை அறிவியல் கல்லூரியில் புதிய கைப்பந்து ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நடை பெற்றது.

    பாரதியார் பல்கலைக்கழக ஆட்சி குழு உறுப்பினரும் கல்லூரியின் செயலருமான அருந்ததி தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக காமதேனு கல்வி குழுமத்தின் நிறுவனர் பெருமாள்சாமி கலந்து கொண்டு புதிய ஆடுகளத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து "காமதேனு டிராபி 2022" என்ற பெயரில் பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி கள் நடைபெற்றது.

    இதில் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு கல்லூரிகளின் கைப்பந்து அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

    இறுதிப்போட்டிக்கு 4 அணிகள் தேர்வு பெற்றன. இதில் ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி முதல் இடத்தையும், கோவை ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அணி 2-ம் இடத்தையும், கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரி அணி 3-ம் இடத்தையும், கோவை குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 4-ம் இடத்தையும் பெற்றது.

    வெற்றி பெற்ற அணி களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை, 2-ம், 3-ம் மற்றும் 4-ம் பரிசுகள் முறையே ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

    கல்லூரி நிறு வனத்தலைவர் பெருமாள்சாமி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்லூரி செயலர் அருந்ததி, இணைச் செயலர் மலர்செல்வி, கல்லூரி முதல்வர் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் வாழ்த்தி பேசினர்.

    ×