என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இளையோர் கைப்பந்து போட்டி
- இளையோர் கைப்பந்து போட்டி நடந்தது.
- ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு கோப்பையுடன், சான்றிதழ்களும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
ராஜபாளையம்
ராஜபாளையம் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானம் மற்றும் ராம்கோ ஊர்க்காவல் படை மைதானத்தில் மாநில அளவிலான இளையோருக்கான யூத் சாம்பியன்ஷிப் கைப்பந்து போட்டி தொடங்கியது. மாநில கைப்பந்து கழக தலைமைப் புரவலர் ஜெயமுருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு கைப்பந்து கழகத்தின் தலைவர் அர்ஜுன்துரை காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து பெண்கள் அணி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணமராஜபாளையம்நாடார் உறவின்முறை தலைவர் ஆதவன், செயலாளர் வெற்றிச்செல்வன், மாவட்ட கைப்பந்து கழகத்தின் செயலாளர் துரைசிங், மாவட்டத் தலைவர் செல்வ கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 4 நாட்கள் பகல் இரவாக இந்த போட்டிகள் நடைபெறுகிறது. முதல் இரண்டு நாட்கள் லீக் முறையிலும், 3 மற்றும் 4 வது நாளில் நாக் அவுட் முறையிலும் இறுதிப் போட்டிகள் நடைபெறுகிறது.
தொடக்க ஆட்டத்தில் சென்னை, கோவை பெண்கள் அணியினர் மோதினர். இதில் சென்னை அணி வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு கோப்பையுடன், சான்றிதழ்களும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்