search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடையே"

    • பஸ் நிலையம் முன்பு பஸ்கள் வெளியே செல்ல முடியாமல் தனியார் பஸ்கள் குறுக்கே இருந்ததால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • இந்த சம்பவத்தால் சென்னிமலை பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னிமலை:

    ஈரோட்டிலிருந்து சென்னிமலை வழியாக 2 தனியார் பஸ்கள் பழனி செல்கிறது. இந்த தனியார் பஸ்கள் இன்று காலை பழனியில் எடுத்து சென்னி மலை வரும்பொழுது 2 பஸ் கண்டக்டர், டிரைவர் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    ஒரு தனியார் பஸ் பழனியில் இருந்து காலை 6.20 மணிக்கு எடுத்து சென்னிமலை பஸ் நிலையத்துக்கு 8.50-க்கு வரவேண்டும். அதேபோல் மற்றொரு பஸ் பழனியில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னிமலை பஸ் நிலையத்திற்கு 8.55 மணிக்கு வர வேண்டும்.

    ஆனால் இன்று காலை அந்த பஸ் 8:48 மணிக்கு சென்னிமலை பஸ் நிலையம் வந்துவிட்டது. அதன் பின்பு வந்த மற்றொரு பஸ் முன்கூட்டி வந்த பஸ் முன்பு குறுக்கே போட்டு எப்படி முன்பு வரலாம் என டிரைவர், கண்டக்டரிடம் இருவரும் தகராறு செய்தனர். காலை நேரமாதலால் பொதுமக்கள் அதிகளவில் இருந்ததால் பெரும் கூட்டம் கூடியது.

    பஸ் நிலையம் முன்பு பஸ்கள் வெளியே செல்ல முடியாமல் தனியார் பஸ்கள் குறுக்கே இருந்ததால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த சென்னிமலை போலீசார் 2 பஸ் டிரைவர், கண்டக்டர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் சென்னிமலை பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • சத்தியமங்கலம் காம தேனு கலை அறிவியல் கல்லூரியில் பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது.
    • கல்லூரி நிறுவனத்தலைவர் பெருமாள்சாமி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் காம தேனு கலை அறிவியல் கல்லூரியில் புதிய கைப்பந்து ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நடை பெற்றது.

    பாரதியார் பல்கலைக்கழக ஆட்சி குழு உறுப்பினரும் கல்லூரியின் செயலருமான அருந்ததி தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக காமதேனு கல்வி குழுமத்தின் நிறுவனர் பெருமாள்சாமி கலந்து கொண்டு புதிய ஆடுகளத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து "காமதேனு டிராபி 2022" என்ற பெயரில் பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி கள் நடைபெற்றது.

    இதில் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு கல்லூரிகளின் கைப்பந்து அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

    இறுதிப்போட்டிக்கு 4 அணிகள் தேர்வு பெற்றன. இதில் ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி முதல் இடத்தையும், கோவை ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அணி 2-ம் இடத்தையும், கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரி அணி 3-ம் இடத்தையும், கோவை குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 4-ம் இடத்தையும் பெற்றது.

    வெற்றி பெற்ற அணி களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை, 2-ம், 3-ம் மற்றும் 4-ம் பரிசுகள் முறையே ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

    கல்லூரி நிறு வனத்தலைவர் பெருமாள்சாமி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்லூரி செயலர் அருந்ததி, இணைச் செயலர் மலர்செல்வி, கல்லூரி முதல்வர் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் வாழ்த்தி பேசினர்.

    ×