search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளையோர்"

    • இளையோர் கைப்பந்து போட்டி நடந்தது.
    • ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு கோப்பையுடன், சான்றிதழ்களும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானம் மற்றும் ராம்கோ ஊர்க்காவல் படை மைதானத்தில் மாநில அளவிலான இளையோருக்கான யூத் சாம்பியன்ஷிப் கைப்பந்து போட்டி தொடங்கியது. மாநில கைப்பந்து கழக தலைமைப் புரவலர் ஜெயமுருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு கைப்பந்து கழகத்தின் தலைவர் அர்ஜுன்துரை காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து பெண்கள் அணி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணமராஜபாளையம்நாடார் உறவின்முறை தலைவர் ஆதவன், செயலாளர் வெற்றிச்செல்வன், மாவட்ட கைப்பந்து கழகத்தின் செயலாளர் துரைசிங், மாவட்டத் தலைவர் செல்வ கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 4 நாட்கள் பகல் இரவாக இந்த போட்டிகள் நடைபெறுகிறது. முதல் இரண்டு நாட்கள் லீக் முறையிலும், 3 மற்றும் 4 வது நாளில் நாக் அவுட் முறையிலும் இறுதிப் போட்டிகள் நடைபெறுகிறது.

    தொடக்க ஆட்டத்தில் சென்னை, கோவை பெண்கள் அணியினர் மோதினர். இதில் சென்னை அணி வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு கோப்பையுடன், சான்றிதழ்களும் பரிசாக வழங்கப்பட உள்ளது. 

    • பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அட்டை, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவைகளில் ஏதேனும் ஒன்று போட்டோவுடன் கட்டாயமாக இருக்க வேண்டும்.
    • ஒரிஜினல் கொண்டு வரவும் சரி பார்த்து விட்டு திரும்பி தரப்படும்.

    பூதலூர் :

    தஞ்சாவூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் திருச்செனம்பூண்டி தியாக இளவரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    48-வது இளையோர் சிறுமியர்களுக்கான தமிழ்நாடு மாநில அளவிலான கபடி சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 5.8.2022 முதல் 7.8.2022 வரை திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

    இதில் பங்குகொள்ளும் இளையோர், சிறுமியரின் வயது 4.9.2022 அன்றோ (அல்லது) அதற்கு பின்போ 20 வயதிற்குள் இருக்க வேண்டும். எடை 65 கிலோ அல்லது அதற்குள் இருக்க வேண்டும். அதேபோல, இளையோருக்கான 48-வது தமிழ்நாடு மாநில அளவிலான கபடி சாம்பியன்ஷிப் போட்டி 19.8.2022 முதல் 21.8.2022 வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறுகிறது.

    இதில் பங்குகொள்ளும் இளையோர் சிறுவர்களுக்கான வயது 20.11.2022 அன்றோ (அல்லது) அதற்கு பின்போ 20 வயதிற்குள் இருக்க வேண்டும். எடை 70 கிலோ அல்லது அதற்குள் இருக்க வேண்டும்.

    இப்போட்டிகளுக்கான தஞ்சை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு வருகிற 30-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு அன்னை சத்யா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

    மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் சிறுவர், சிறுமியர் ஆதார் கார்டு, பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அட்டை, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவைகளில் ஏதேனும் ஒன்று போட்டோவுடன் கட்டாயமாக இருக்க வேண்டும்.

    இவைகளில் ஒன்று ஒரிஜினல் கொண்டு வரவும் சரி பார்த்து விட்டு திரும்பி தரப்படும். போனபைட் சான்றிதழ் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×