search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில அளவிலான கைப்பந்து போட்டி- கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    கைப்பந்து போட்டியை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து வீரர்களை வாழ்த்தினார்.

    மாநில அளவிலான கைப்பந்து போட்டி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • 26-வது தமிழ்நாடு மாநில அளவிலான கைப்பந்து போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
    • போட்டியில் செங்கல்பட்டு, பொள்ளாச்சி, ஈரோடு, சென்னை, திருச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட 6 கல்லூரி அணிகள் பங்கேற்றன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நாகை மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் மன்சூர் கைப்பந்து கழகம் இணைந்து நடத்தும் 26-வது தமிழ்நாடு மாநில அளவிலான கைப்பந்து போட்டி தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கலாராணி தலைமை தாங்கினார். நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் போட்டியை தொடக்கி வைத்து விளையாட்டு வீரர்களை வாழ்த்தினார். இப்போட்டியில் செங்கல்பட்டு, பொள்ளாச்சி, ஈரோடு, சென்னை, திருச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட 6 கல்லூரி அணிகள் பங்கேற்றன.

    இந்நிகழ்ச்சியில் திட்டச்சேரி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அப்துல் ரஷீத், கலைமகள் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் குடியரசு, திட்டச்சேரி நிர்வாக சபை தலைவர் அப்துல் நாசர், நாகை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மயிலாடுதுறை கைப்பந்து சங்க தலைவர் ராஜ்கமல், மயிலாடுதுறை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் பாபு, தலைவர் செந்தில்குமார், சர்வதேச கைப்பந்து வீரர் முகமது ரியாசுதீன் மற்றும் கைப்பந்து பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×