search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைப்பந்து போட்டி"

    • போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
    • மாணவர்களுடன் சேர்ந்து கைப்பந்து விளையாடினார்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து விளையாட்டு போட்டி ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

    போட்டியை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களுக்கு அறிமுகப்படுத்தி போட்டியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    மாணவ மாணவிகள் இங்கு நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவது மட்டும் நோக்கம் அல்ல மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற வேண்டும், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும், அதற்கான பயிற்சியை தாங்கள் எடுத்து விளையாட வேண்டும் என்று கூறி வீரர்களுக்கு உற்சாகமூட்டினார். மாணவர்களுடன் கைப்பந்தும் விளையாடினார்.

    இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சேது ராஜன், கைப்பந்து கழக செயலாளர் அன்பரசன் உடன் இருந்தனர்.

    • கோவில்பட்டியில் விழிப்புணர்வு கைப்பந்து போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் கிழக்கு காவல் நிலையம் சார்பில், போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கைப்பந்து போட்டி நடந்தது. கோவில்பட்டி தனியார் கலைக் கல்லூரி வளாகத்தில் நடந்த இப்போட்டியில், எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி ஏ.பி.சி. அணிகள், வாரியர்ஸ் கைப்பந்து கழகம், காவல்துறை அணி, இலுப்பையூரணி தாமஸ் நகர் அணி ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டன. போட்டியின் தொடக்கமாக போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    இறுதி போட்டியில், வாரியர்ஸ் கைப்பந்து கழக அணியும், எஸ்.எஸ்.டி.எம். பி அணியும் மோதின. இதில் 15 - 13, 15 - 7 என்ற செட் கணக்கில் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. 2-வது இடத்தை எஸ்.எஸ்.டி.எம். 'பி' அணியும், 3-வது இடத்தை காவல்துறை அணியும் பெற்றன.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். இதில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாதவராஜா, தர்மராஜ், ரவீந்திரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • இளையான்குடியில் கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி நடந்தது.
    • போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் காளிதாசன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஹாஜா நஜ்முதீன், ஐஸ்வர்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கு இடையேயான கைப்பந்து போட்டி நடந்தது. ஆண்கள் மற்றும் மகளிருக்கான இருபிரிவிலும் காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி அணி முதலிடம் பெற்றது. ஆண்கள் பிரிவில் இளையான்குடி, சாகிர் உசேன் கல்லூரி அணி 2-ம் இடமும், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரி அணி3-ம் இடமும், காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரி அணி 4-ம் இடமும் பெற்றது.

    மகளிர் பிரிவில் காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரி அணி 2-ம் இடமும், தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி அணி 3-ம் இடமும், இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி அணி 4-ம் இடமும் பெற்றது. நிறைவு விழாவில் கல்லூரி ஆட்சிக்குழு பொருளாளர் அப்துல் அகமது, ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் சலீம், முதல்வர் அப்பாஸ் மந்திரி, சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா ஆகியோர் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு வழங்கினர். இதில் அழகப்பா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் செல்வம், இணைஒருங்கிணைப்பாளர் அசோக் உள்ளிட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் காளிதாசன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஹாஜா நஜ்முதீன், ஐஸ்வர்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கைப்பந்து போட்டிகள் 2 நாட்கள் நடந்தது.
    • முதல், 2-ம், 3-ம் நிலைக்கு ரொக்க பரிசாக சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரிகள் சார்பில் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கைப்பந்து போட்டிகள் 2 நாட்கள் நடந்தது.

    கல்வி நிறுவனங்களின் தாளாளர் பெருமாள் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் வள்ளி பெருமாள், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை கல்லூரி முதல்வர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் கிருஷ்ணகரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேரலாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆண்கள் கைப்பந்து போட்டியையும், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரி ஆங்கில துறை தலைவர் கல்பனா பெண்களுக்கான கைப்பந்து போட்டியையும் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பர்கூர் துணை போலிஸ் சூப்பிரண்டு மனோகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கினார்.

    ஆண்கள் பிரிவில் தொப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி முதல் பரிசையும், அரசம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 2-ம் பரிசையும், ஓசூர் ஆர்.வி. ஆண்கள் பள்ளி அணி 3-ம் பரிசையும் பெற்றனர். பெண்கள் பிரிவு போட்டியில் ஓசூர் ஆர்.வி. பெண்கள் பள்ளி அணி முதல் பரிசையும், ஓசூர் ஜான் போஸ்கோ பள்ளி அணி 2-ம் பரிசையும், புதுப்பேட்டை அரசு பெண்கள் பள்ளி அணி 3-ம் பரிசையும் பெற்றனர். ஆண்கள் அணிக்கு தலா ரூ.10 ஆயிரம், ரூ.7,500, ரூ.5 ஆயிரம் முறையே முதல், 2-ம், 3-ம் நிலைக்கு ரொக்க பரிசாக சான்றிதழ்கள், கோப்பை வழங்கப்பட்டது.

    பெண்கள் அணிக்கு தலா ரூ. 7 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் முறையே முதல், 2-ம், 3-ம் நிலைக்கு ரொக்க பரிசாக சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்பட்டது.

    இதில் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், பேராசிரியர்கள், துறை தலைவர்கள். மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டை உடற்கல்வி இயக்குனர் திருப்பதி, நிர்வாக அலுவலர் சுரேஷ் செய்திருந்தனர்.  

    • மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கைப்பந்து போட்டிகள் 2 நாட்கள் நடந்தது.
    • முதல், 2-ம், 3-ம் நிலைக்கு ரொக்க பரிசாக சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரிகள் சார்பில் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கைப்பந்து போட்டிகள் 2 நாட்கள் நடந்தது.

    கல்வி நிறுவனங்களின் தாளாளர் பெருமாள் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் வள்ளி பெருமாள், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை கல்லூரி முதல்வர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் கிருஷ்ணகரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேரலாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆண்கள் கைப்பந்து போட்டியையும், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரி ஆங்கில துறை தலைவர் கல்பனா பெண்களுக்கான கைப்பந்து போட்டியையும் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பர்கூர் துணை போலிஸ் சூப்பிரண்டு மனோகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கினார்.

    ஆண்கள் பிரிவில் தொப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி முதல் பரிசையும், அரசம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 2-ம் பரிசையும், ஓசூர் ஆர்.வி. ஆண்கள் பள்ளி அணி 3-ம் பரிசையும் பெற்றனர். பெண்கள் பிரிவு போட்டியில் ஓசூர் ஆர்.வி. பெண்கள் பள்ளி அணி முதல் பரிசையும், ஓசூர் ஜான் போஸ்கோ பள்ளி அணி 2-ம் பரிசையும், புதுப்பேட்டை அரசு பெண்கள் பள்ளி அணி 3-ம் பரிசையும் பெற்றனர். ஆண்கள் அணிக்கு தலா ரூ.10 ஆயிரம், ரூ.7,500, ரூ.5 ஆயிரம் முறையே முதல், 2-ம், 3-ம் நிலைக்கு ரொக்க பரிசாக சான்றிதழ்கள், கோப்பை வழங்கப்பட்டது.

    பெண்கள் அணிக்கு தலா ரூ. 7 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் முறையே முதல், 2-ம், 3-ம் நிலைக்கு ரொக்க பரிசாக சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்பட்டது.

    இதில் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், பேராசிரியர்கள், துறை தலைவர்கள். மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டை உடற்கல்வி இயக்குனர் திருப்பதி, நிர்வாக அலுவலர் சுரேஷ் செய்திருந்தனர்.  

    • முதலாவதாக வந்த சென்னை அணிக்கு முதல் பரிசாக 20000ரூபாய் வழங்கப்பட்டது.
    • லீக் மற்றும் நாகௌட் முறையில் நடைபெற்றது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி காந்திமைதானத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோத்தகிரி கைப்பந்து கழகம் சார்பில் 11-வது மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.இந்த கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு, கேரளா, சென்னை, கோவை என பல மாநில மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான கைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.

    இந்த கைப்பந்தாட்ட போட்டி லீக் மற்றும் நாகௌட் முறையில் நடைபெற்றது. இந்த கைப்பந்தாட்ட காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டி பகல் நேரங்களில் நடைபெற்றது. இறுதிப்போட்டியானது நேற்று இரவு நடந்தது. இதில் சென்னை அணியும், நெல்லை கண்ணன் அணியும் மோதின. இந்த போட்டிக்ஷயில் 19-24 என்ற நேர் செட் கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்றது. முதலாவதாக வந்த சென்னை அணிக்கு முதல் பரிசாக 20000ரூபாயும், நெல்லை கண்ணன் அணிக்கு 2-ம் பரிசாக 15000 ரூபாயும் அணிக்கு 3-ம் விவி பிரதர்ஸ் அணி 3பரிசாக 10000 ரூபாயும், 4-ம் பரிசாக ஆல்வின் பிரதர்ஸ் அணிக்கு 7000 ரூபாயும் வழங்கப்பட்டது.

    • மதுரை காமராசர் பல்கலைக்கழக அனைத்து மண்டலங்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டிகள் அமெரிக்கன் கல்லூரியில் நடந்தது.
    • இந்த கல்லூரி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    மதுரை

    மதுரை காமராசர் பல்கலைக்கழக அனைத்து மண்டலங்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டிகள் அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்றது. லீக் முறையில் நடைபெற்ற போட்டிகளில் அனைத்து போட்டிகளிலும் அமெரிக்கன் கல்லூரி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. 2 வெற்றிகளை பெற்ற திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி 2-ம் இடத்தையும், ஒரு வெற்றி பெற்ற விருதுநகர் வி.எச்.என். எஸ்.என். கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றது.

    சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்கன் கல்லூரி மாணவர்களை கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், துணை முதல்வர் மார்ட்டின் டேவிட், நிதிக்காப்பாளர் பியூலா ரூபி கமலம், உடற்கல்வி இயக்குனர் பாலகிருஷ்ணன், மதுரை காமராசர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் பாராட்டினர்.

    • மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு அலங்காநல்லூர் விவசாயி மகள் தேர்வு செய்யப்பட்டார்.
    • இந்த மாணவி நாகர்கோவிலில் உள்ள விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வருகிறார்.

    அலங்காநல்லூர்

    தேசிய அளவிலான சப்-ஜூனியர் கையுந்து பந்து போட்டி வருகிற 3-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை டெல்லியில் நடக்கிறது. இதில் தமிழக அணிக்கான அணித்தேர்வு தேவகோட்டையில் நடந்தது. சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்டனர்.

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜா மகள் பிளஸ்-1 மாணவி ராகவி (16) கலந்து கொண்டு தமிழக அணிக்காக தேர்வாகி உள்ளார். இந்த மாணவி நாகர்கோவிலில் உள்ள விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வருகிறார். 

    • ஜெயலலிதா பிறந்தநாள் கைப்பந்து போட்டியை முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
    • அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், இந்தியன் ஸ்போர்ட்ஸ் அகடாமி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. இளைஞர் பாசறை மாவட்ட துணை செயலாளர் சந்தனமூர்த்தி ஏற்பாட்டில் காளை யார்கோவில் ஒன்றியம் மறவமங்கலம் அரசு மேல்நி லைப்பள்ளி மைதானத்தில் கைபந்து போட்டி நடந்தது.முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் தலைமை தாங்கி ேபாட்டியை தொடங்கி வைத்தார்.

    காளையார்கோவில் ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, ஸ்டீபன்அருள்சாமி, இளைஞரணி துணை செயலாளர் கருணாகரன், மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு.முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சரவணன், பாசறை மாவட்ட இணை செயலாளர் மோசஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் இந்தியன் ஸ்போர்ட்ஸ் அகடாமி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணா பல்கலைக்கழகத்தின் 8-வது மண்டல கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்துபோட்டி (பெண்கள் பிரிவு) கடந்த 19-ந் தேதி நடைபெற்றது.
    • இதில் அண்ணா பல்கலைக்–கழகத்தின் கீழ் உள்ள 8-வது மண்டலத்தை சேர்ந்த 6 கல்லூரிகள் பங்கேற்றன.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பி.ஜி.பி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 8-வது மண்டல கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்துபோட்டி (பெண்கள் பிரிவு) கடந்த 19-ந் தேதி நடைபெற்றது.

    பி.ஜி.பி. கல்விக் குழுமங்களின் தலைவர் பழனி ஜி.பெரியசாமி தலைமையில் கல்லூரி–யின் தாளாளர் கணபதி வரவேற்புரை ஆற்றினார். முதன்மையர் டாக்டர் பெரியசாமி சிறப்புரையாற்றினார்.

    பி.ஜி.பி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் கவிதா மற்றும் சிறப்பு விருந்தினர் பரமத்தி துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் ஆகியோர் கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்தனர்.

    இதில் அண்ணா பல்கலைக்–கழகத்தின் கீழ் உள்ள 8-வது மண்டலத்தை சேர்ந்த 6 கல்லூரிகள் பங்கேற்றன. முதல் போட்டியில் சேலம், ஏ.வி.எஸ். பொறியியல் கல்லூரி மற்றும் நாமக்கல் பாவை பொறியியல் கல்லூரிகள் மோதின. அதில் சேலம் ஏ.வி.எஸ். பொறியியல் கல்லூரி அணி வெற்றி பெற்றது.

    2-வது போட்டியில் சேலம், சோனா பொறியியல் கல்லூரி மற்றும் நாமக்கல் பி.ஜி.பி. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் மோதியதில் சேலம் சோனா பொறியியல் கல்லூரி அணி வெற்றி பெற்றது.

    3-வது போட்டியில் சேலம் ஏ.வி.எஸ். பொறியியல் கல்லூரி மற்றும் சேலம் அரசு பொறியியல் கல்லூரிகள் போட்டியிட்டன. அதில் ஏ.வி.எஸ். பொறியியல் கல்லூரி அணி அபார வெற்றி பெற்றது.

    4-வது போட்டியில் சோனா பொறியியல் கல்லூரி மற்றும் நாமக்கல் கொங்குநாடு பொறியியல் கல்லூரிகள் போட்டியிட்டதில் சோனா பொறியியல் கல்லூரி அணி அபார வெற்றி பெற்றனர்.

    இறுதிப்போட்டியில் சோனா பொறியியல் கல்லூரி மற்றும் சேலம், ஏ.வி.எஸ். பொறியியல் கல்லூரி 35-51 என்ற புள்ளி கணக்கில் சோனா பொறியியல் கல்லூரி அணி வெற்றி பெற்று முதல் இடத்தைப் பிடித்து கோப்பையை வென்றது. ஏ.வி.எஸ். பொறியியல் கல்லூரி 2-ம் இடம் பிடித்தது. விழாவில் பி.ஜி.பி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், உடற் கல்வி இயக்குனர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினார்கள்.

    • தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் பாலமேடு அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    • இதில் 10-ம் வகுப்பு பயிலும் 2 மாணவர்கள் இந்திய அளவிலான அணிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.

    அலங்காநல்லூர்

    சென்னையில் தேசிய அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் தென் மாவட்ட அணியில் பாலமேடு அருகே உள்ள வெள்ளையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 6 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் அவர்கள் சிறப்பாக விளையாடி அந்த அணி தங்கப்பதக்கம் பெற்றது. இதையடுத்து 6 மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா, உதவி தலைமை ஆசிரியர்கள் விஜித்ரா, முருகன், முதுநிலை ஆசிரியர் செந்தில், உடற்கல்வி ஆசிரியர்கள் மதுசிங், சத்தியசீலன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இளமாறன், பயிற்சியாளர் சதீஷ்ராஜா மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பாராட்டினர். இதில் 10-ம் வகுப்பு பயிலும் ஆறுமுகம், கவிபாலன் ஆகிய இருவரும் இந்திய அளவிலான அணிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.

    • தமிழ்நாடு , பஞ்சாப் அணிகளுக்கு சான்றிதழ் கோப்பைகள் வழங்கப்பட்டது.
    • ஆண்களுக்கான இறுதி போட்டி நடந்தது.

      அரவேணு,

    கோத்தகிரியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி அங்குள்ள ஜுட்ஷ் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், கேரளா, குஜராத், பஞ்சாப், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநில அணிகள் பங்கேற்றனர். இதில் ஆண்களுக்கான இறுதி போட்டி நடந்தது. இதனை நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவுத்தர் மற்றும் பள்ளி தாளாளர் தன்ராஜன் தொடங்கி வைத்தனர். இதில் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பஞ்சாப் அணி 25-23 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பஞ்சாப் அணி 25-19 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. 17 வயதுக்கு உட்பட்ட இறுதி போட்டியில் தமிழ்நாடு, பீகார் விளையாடியது. இதில் முதல் சுற்றில் தமிழ்நாடு அணி 25-18 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. பின்னர் தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு அணி 2-வது சுற்றில் 25-20 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் ெவன்றது. வெற்றி பெற்ற தமிழ்நாடு , பஞ்சாப் அணிகளுக்கு சான்றிதழ் கோப்பைகள் வழங்கப்பட்டது.

    ×