search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்களுக்கான கைப்பந்து போட்டி
    X

    பரமத்தி போலீஸ் துணை சூப்பிரண்டு கலையரசன் கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்த காட்சி.

    பெண்களுக்கான கைப்பந்து போட்டி

    • அண்ணா பல்கலைக்கழகத்தின் 8-வது மண்டல கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்துபோட்டி (பெண்கள் பிரிவு) கடந்த 19-ந் தேதி நடைபெற்றது.
    • இதில் அண்ணா பல்கலைக்–கழகத்தின் கீழ் உள்ள 8-வது மண்டலத்தை சேர்ந்த 6 கல்லூரிகள் பங்கேற்றன.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பி.ஜி.பி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 8-வது மண்டல கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்துபோட்டி (பெண்கள் பிரிவு) கடந்த 19-ந் தேதி நடைபெற்றது.

    பி.ஜி.பி. கல்விக் குழுமங்களின் தலைவர் பழனி ஜி.பெரியசாமி தலைமையில் கல்லூரி–யின் தாளாளர் கணபதி வரவேற்புரை ஆற்றினார். முதன்மையர் டாக்டர் பெரியசாமி சிறப்புரையாற்றினார்.

    பி.ஜி.பி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் கவிதா மற்றும் சிறப்பு விருந்தினர் பரமத்தி துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் ஆகியோர் கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்தனர்.

    இதில் அண்ணா பல்கலைக்–கழகத்தின் கீழ் உள்ள 8-வது மண்டலத்தை சேர்ந்த 6 கல்லூரிகள் பங்கேற்றன. முதல் போட்டியில் சேலம், ஏ.வி.எஸ். பொறியியல் கல்லூரி மற்றும் நாமக்கல் பாவை பொறியியல் கல்லூரிகள் மோதின. அதில் சேலம் ஏ.வி.எஸ். பொறியியல் கல்லூரி அணி வெற்றி பெற்றது.

    2-வது போட்டியில் சேலம், சோனா பொறியியல் கல்லூரி மற்றும் நாமக்கல் பி.ஜி.பி. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் மோதியதில் சேலம் சோனா பொறியியல் கல்லூரி அணி வெற்றி பெற்றது.

    3-வது போட்டியில் சேலம் ஏ.வி.எஸ். பொறியியல் கல்லூரி மற்றும் சேலம் அரசு பொறியியல் கல்லூரிகள் போட்டியிட்டன. அதில் ஏ.வி.எஸ். பொறியியல் கல்லூரி அணி அபார வெற்றி பெற்றது.

    4-வது போட்டியில் சோனா பொறியியல் கல்லூரி மற்றும் நாமக்கல் கொங்குநாடு பொறியியல் கல்லூரிகள் போட்டியிட்டதில் சோனா பொறியியல் கல்லூரி அணி அபார வெற்றி பெற்றனர்.

    இறுதிப்போட்டியில் சோனா பொறியியல் கல்லூரி மற்றும் சேலம், ஏ.வி.எஸ். பொறியியல் கல்லூரி 35-51 என்ற புள்ளி கணக்கில் சோனா பொறியியல் கல்லூரி அணி வெற்றி பெற்று முதல் இடத்தைப் பிடித்து கோப்பையை வென்றது. ஏ.வி.எஸ். பொறியியல் கல்லூரி 2-ம் இடம் பிடித்தது. விழாவில் பி.ஜி.பி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், உடற் கல்வி இயக்குனர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினார்கள்.

    Next Story
    ×