search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாமக்கல் 4 பேர் கைது"

    ‘எச்-1’ பி விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா வழங்கி வேலை பார்க்க அனுமதி வழங்கும் திட்டத்தை ரத்து செய்து விடக்கூடாது இரண்டு பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். #H4Visa #H1BVisa
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பதவி வகித்த காலத்தில் ‘எச்-1’ பி விசாவில் பணியாற்றுகிறவர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கும் (ஆண் என்றால் மனைவிக்கும், பெண் என்றால் கணவருக்கும்), அவர்களின் 21 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கும் ‘எச்-4’ விசா அளித்து, வேலை பார்க்கும் வாய்ப்பினை வழங்கினார்.

    இந்த திட்டத்தால், ‘எச்-1’ பி விசாவில் அமெரிக்காவில் வேலை பார்க்கிற ஆண்களின் மனைவிமாருக்கும், பெண்களின் கணவர்களுக்கும் அங்கேயே வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இது அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிற தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு வரமாக அமைந்தது.



    ஆனால் இந்த திட்டத்தை ரத்து செய்வதற்கு தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இதை கடந்த வாரம் அங்குள்ள கோர்ட்டில் உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்தது. இது தொடர்பாக 3 மாதங்களில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அப்போது கூறப்பட்டது. இது அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.இது தொடர்பாக அமெரிக்காவில் செல்வாக்குமிக்க ஜனநாயகக்கட்சி பெண் எம்.பி.க்களான கமலா ஹாரிஸ், கிர்ஸ்டன்ஸீ கில்லிபிராண்ட் ஆகியோர் உள்நாட்டு பாதுகாப்புத்துறை இயக்குனர் கிறிஸ்டியன் நீல்சனுக்கும், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யு.எஸ்.சி.ஐ.எஸ்.) பிரான்சிஸ் சிஸ்னாவுக்கும் ஒரு கடிதம் எழுதி உள்ளனர்.

    அந்தக் கடிதத்தில் அவர்கள் ‘எச்-1’ பி விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா வழங்கி வேலை பார்க்க அனுமதி வழங்கும் திட்டத்தை ரத்து செய்து விடக்கூடாது, அப்படிச்செய்தால் அது பெண்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என வலியுறுத்தி உள்ளனர்.  #H4Visa #H1BVisa
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஜெ6 பிளஸ் மற்றும் கேலக்ஸி ஜெ4 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியாகியுள்ளது. #GalaxyJ6 #GalaxyJ4



    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி ஜெ6 பிளஸ் மற்றும் கேலக்ஸி ஜெ4 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அறிவிக்கப்பட்டது. 

    இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்ட இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 6.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, குவாட் கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் இரண்டு ஸ்மார்ட்போன்களில் 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கேலக்ஸி ஜெ6 பிளஸ் மாடலின் வலதுபுறம் கைரேகை சென்சார், டூயல் பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.



    சாம்சங் கேலக்ஸி ஜெ6 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 1480x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்
    - அட்ரினோ 308 GPU
    - 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
    - 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி



    சாம்சங் கேலக்ஸி ஜெ4 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 1480x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்
    - அட்ரினோ 308 GPU
    - 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி
    - 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி ஜெ6 பிளஸ் விலை ரூ.15,990 என்றும் கேலக்ஸி ஜெ4 பிளஸ் விலை ரூ.10,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி ஜெ6 பிளஸ் மற்றும் கேலக்ஸி ஜெ4 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 25-ம் தேதி துவங்குகிறது. அமேசான், பிளிப்கார்ட், சாம்சங் ஆன்லைன் தளம் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும். 

    சாம்சங் கேலக்ஸி ஜெ6 பிளஸ் ஸ்மார்ட்போன் ரெட், பிளாக் மற்றும் புளு உள்ளிட்ட நிறங்களிலும், கேலக்ஸி ஜெ4 பிளஸ் மாடல் பிளாக், கோல்டு மற்றும் புளு போன்ற நிறங்களில் கிடைக்கிறது. #GalaxyJ6  #GalaxyJ4
    டிரம்ப் அரசின் எச் 4 விசாதாரர்களின் பணி அனுமதியை ரத்து செய்யும் நடவடிக்கையால் அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் இந்தியர்கள் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. #H4Visa #Trump #US
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் எச்.1பி விசாவில் பணிபுரிவோரின் கணவர் அல்லது மனைவி வேலை செய்ய முன்னாள் அதிபர் ஒபாமா அரசு அனுமதி வழங்கியது. அதற்காக ‘எச் 4’ விசா வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு ஏராளமான இந்தியர்கள் உள்பட வெளி நாட்டினர் பணி புரிகின்றனர்.

    இதை எதிர்த்து அமெரிக்காவை சேர்ந்த சேவ் ஜாப்ஸ் என்பவர் கொலம்பியாவில் உள்ள மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில் ஒபாமா அரசின் இத்தகைய கொள்கை முடிவால் அமெரிக்க தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது. எனவே அதை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

    இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 28, மே 22 மற்றும் ஆகஸ்டு 20-ந்தேதிகளில் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

    அப்போது உள்நாட்டு பாதுகாப்பு துறை ஆஜராகி விளக்கம் அளித்தது. அதில், ‘எச் 4’ விசாதார்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணி அனுமதி இன்னும் 3 மாதத்தில் ரத்து செய்யப்படும். இதற்கான புதிய சட்டம் இன்னும் 3 மாதத்தில் வெள்ளை மாளிகையின் பட்ஜெட் நிர்வாக அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்த விவகாரம் குறித்து டிரம்ப் அரசு ஏற்கனவே கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தது. அதில் கோர்ட்டு விரும்பினால் ‘எச்4’ விசாவை ரத்து செய்ய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளது.

    தற்போது எச் 4 விசாவை ரத்து செய்ய வகை செய்யும் புதிய சட்டம் இன்னும் 3 மாதத்தில் தயாராகி விடும் என கோர்ட்டில் பகிரங்கமாக அறிவித்துள்ளது. டிரம்ப் அரசின் இத்தகைய நடவடிக்கையால் அமெரிக்காவில் தங்கி ‘எச் 4’ விசாவில் பணிபுரிவோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    எச் 4 விசாவில் பணிபுரிய 1 லட்சத்து 26 ஆயிரத்து 853 விண்ணப்பங்களுக்கு அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை அனுமதி வழங்கியுள்ளது. இவர்களில் 93 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் 5 சதவீதம் பேர் சீனாவை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 2 சதவீதம் பேர் மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள். #H4Visa #Trump #US

    சாம்சங் நிறுவனத்தின் இரண்டு புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இவை ஆன்லைனில் லீக் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. #Samsung #smartphone



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ6 பிளஸ் மற்றும் கேலக்ஸி ஜெ4 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிவிக்கப்பட்டன. இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்ட இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 6.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, குவாட் கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

    ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் இரண்டு ஸ்மார்ட்போன்களில் 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கேலக்ஸி ஜெ6 பிளஸ் மாடலின் வலதுபுறம் கைரேகை சென்சார், டூயல் பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.



    சாம்சங் கேலக்ஸி ஜெ6 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 1480x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்
    - அட்ரினோ 308 GPU
    - 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
    - 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி



    சாம்சங் கேலக்ஸி ஜெ4 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 1480x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்
    - அட்ரினோ 308 GPU
    - 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி
    - 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி ஜெ6 பிளஸ் கிரே, பிளாக் மற்றும் ரெட் உள்ளிட்ட நிறங்களிலும், கேலக்ஸி ஜெ4 பிளஸ் மாடல் பிளாக், கோல்டு மற்றும் பின்க் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை விரைவில் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை புதிய டீசர் மூலம் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #galaxyj6 #smartphone



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ6 பிளஸ் மற்றும் கேலக்ஸி ஜெ4 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் சார்ந்த தகவலை புதிய டீசர்கள் மூலம் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    அதன்படி இரண்டு ஸ்மார்ட்போன்களும் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களிலும் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட இருக்கிறது. கேலக்ஸி ஜெ6 பிளஸ் மாடலில் கைரேகை சென்சார் பக்கவாட்டில் பொருத்தப்படுகிறது.

    சோனி மற்றும் மெய்சூ நிறுவன ஸ்மார்ட்போன்களில் இதுபோன்ற அமைப்பு வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் மாடலாக கேலக்ஸி ஜெ6 பிளஸ் இருக்கும். இத்துடன் கேலக்ஸி ஜெ6 பிளஸ் மாடலில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.



    இரண்டு சாம்சங் ஸ்மார்ட்போன்களிலும் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் இவை பிரகாசமான நிறங்கள் மற்றும் எமோட்டிஃபை அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜெ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் என்பதால் இவை ஆஃப்லைன் விற்பனை மையகங்களிலும் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று பெறத்தேவை இல்லை என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. #TNPSC
    சென்னை:

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குரூப்-4 ல் அடங்கிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ள அறிவுரைகள் அடங்கிய குறிப்பாணையின் நகலுடன் வருகிற 18-ந்தேதி வரை, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு இ-சேவை மையங்களில் மட்டுமே சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இந்த தெரிவுக்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய மாற்றுத்திறனாளிகள், மருத்துவக் குழுவிடமிருந்து உரிய மருத்துவச்சான்றிதழ் பெற்று பதிவேற்றம் செய்யவேண்டும் என குறிப்பிடப்படிருந்தது.

    தற்போது அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மாற்றுத்திறனாளிகளிடம் மருத்துவக் குழுவிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் இல்லை எனில் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையினை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனுடன் அவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டால் அப்போது மருத்துவக் குழுவிடமிருந்து உரிய மருத்துவச்சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கிறேன் என்ற உறுதிமொழிக் கடிதத்தினையும் எழுதி பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  #TNPSC
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ4 பிரைம் மற்றும் கேலக்ஸி ஜெ6 பிரைம் மாடல்கள் அந்நிறுவன வலைத்தளத்தில் லீக் ஆனதாக கூறப்படுகிறது. #smartphone
    சாம்சங் கேலக்ஸி ஜெ4 பிரைம் மற்றும் கேலக்ஸி ஜெ6 பிரைம் ஸ்மார்ட்போன்கள் அந்நிறுவனத்தின் வியட்நாம் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் SM-J415F/DS மற்றும் SM-J610F/DS என்ற மாடல் நம்பர்களை கொண்டுள்ளது.

    பட்ஜெட் விலையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் இரண்டு ஸ்மார்ட்போன்களும் சமீபத்தில் சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி ஜெ4 மற்றும் கேலக்ஸி ஜெ6 மாடல்களுடன் விற்பனையாகும் என கூறப்படுகிறது. இரண்டு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், குவால்காம் பிராசஸர்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.


    முன்னதாக இந்த ஸ்மார்ட்போன்கள் நெதர்லாந்து மற்றும் வியட்நாம் நாட்டு வலைத்தளங்களில் வெளியானது. ஏற்கனவே வெளியான சாம்சங் கேலக்ஸி ஜெ4 மாடலில் 5.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1280 பிக்சல் சூப்பர் AMOLED பேனல், 16:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கிறது.

    இத்துடன் குவாட்-கோர் சாம்சங் எக்சைனோஸ் 7570 சிப்செட், 2 ஜிபி / 3 ஜிபி ரேம், 16 ஜிபி / 32 ஜிபி மெமரி, புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    கேலக்ஸி ஜெ6 மாடலில் 5.6 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED பேனல், 18:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வடிவமைப்பு கொண்டுள்ளது. இதில் எக்சைனோஸ் 7870 பிராசஸர், 3 ஜிபி / 4 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #smartphone
    வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சிறப்பு பயிற்சி மூலம் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு வகுப்பில் பயின்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் கலெக்டர் பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றனர். 

    கோவை மண்டலத்தைச் சேர்ந்த, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று 35 மனுதாரர்கள் அண்மையில், வெளியிடப்பட்ட குரூப் 4 தேர்வில் வெற்றியடைந்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக நடத்தப்பட்ட பயிற்சிகளில் பங்கேற்று, ஆர்.திருநாவுக்கரசு என்ற மாணவர் மாநிலத்திலேயே, குரூப் 4 தேர்வில் தேர்வுகளில் தட்டச்சர் பணிக்காலியிடத்திற்கு முதலாவது மாணவராக தேர்ச்சியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோவை மண்டல வேலைவாய்ப்பு அலுவலகங்களிலேயே, அதிகமான எண்ணிக்கையில் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்தான் 35 நபர்கள் குரூப் 4 தேர்வில் தேர்வுகளில் தேர்ச்சியடைந்து பணிநியமன வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை கலெக்டர் பழனிசாமி பாராட்டினார். இந்த வெற்றியினை முதல் வெற்றியாக கருதி தொடர்ந்து நடைபெறும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் பங்கேற்று வெற்றி பெற வேண்டுமென அவர் அறிவுரை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, கோவை மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) லதா, கோவை மண்டலத்தைச் சேர்ந்த துணை இயக்குநர்கள் ஓ.எஸ்.ஞானசேகரன் மற்றும் ஜோதிமணி, உதவி இயக்குநர்கள், திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராதிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மெட்ரோ ரெயில் 4-வது வழித்தடப்பாதை ஆயிரம் விளக்கு- கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி வரை 12 கி.மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது. இதற்கான திட்ட வடிவமைப்பை நிபுணர் குழுவினர் தயாரித்துள்ளனர். #MetroTrain
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர் மட்ட பாதையிலும் திருமங்கலம்- சென்ட்ரல், சைதாப்பேட்டை- டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.

    பயணிகள், பொதுமக்கள் வரவேற்பை தொடர்ந்து மெட்ரோ ரெயில் திட்டம் சென்னை மாநகரம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

    2-வது கட்டமாக மாதவரம்- சிறுசேரிவரை ரூ.85 ஆயிரம் கோடி செலவில் 107 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 4-வது வழித்தட பாதை ஆயிரம்விளக்கு- மீனாட்சி கல்லூரி வரை 12 கி.மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் 12 சுரங்க ரெயில் நிலையங்கள் உருவாக்கப்படுகிறது.

    இதற்கான திட்ட வடிவமைப்பை நிபுணர் குழுவினர் தயாரித்துள்ளனர். டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. 6 ஆண்டுகளில் இப்பணிகள் நிறைவடையும். இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    2-வது கட்டமாக மாதவரம்- சிறுசேரி இடையே மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் ரூ.85 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இதில் 4-வது வழித்தடப்பாதை ஆயிரம் விளக்கு- கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி வரை 12 கி.மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது.

    இதற்கான திட்ட வடிவமைப்பை நிபுணர் குழுவினர் தயாரித்துள்ளனர். டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும். 6 ஆண்டுகளில் பணிகள் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain
    குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருகிற அக்டோபர் மாதம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர். #TNPSCExam #GroupIV
    சென்னை:

    சென்னையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் கே.நந்தகுமார், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.சுதன் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த பிப்ரவரி மாதம் 11-ந் தேதி நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு தான் இந்தியாவிலேயே அதிகம் பேர் எழுதிய தேர்வாக இருக்கும். அந்த தேர்வை 17 லட்சத்து 53 ஆயிரத்து 154 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு வித்தியாசமாக நடந்தது. தேர்வு எழுதியவர்களின் பெயர், பதிவு எண், புகைப்படம், தேர்வு நடைபெறும் இடம் உள்ளிட்ட விவரங்கள் உரியவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் பதிவு எண்ணை எழுத வேண்டியதில்லை. வெளிப்படையாக தேர்வு நடத்தி வருகிறோம்.

    கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கும் சேர்ந்து ஒரே தேர்வாக நடத்தியதால் அரசுக்கு ரூ.12 கோடி செலவு குறைந்துள்ளது. குரூப்-4 தேர்வு எழுதியவர்களில் 14 லட்சத்து 26 ஆயிரத்து 10 பேரின் மதிப்பெண்கள் மற்றும் ரேங்க் பட்டியல் நேற்று (நேற்று முன்தினம்) வெளியிடப்பட்டது.

    தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று ரேங்க் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் இ.மெயில் மூலமாக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு குறித்த தகவல்கள் அனுப்பப்படும். அவர்கள் வருகிற 16-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை அரசு இ-சேவை மையங்களுக்கு சென்று தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த சான்றிதழ்களை அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாக அதிகாரிகள் சரிபார்ப்பார்கள். இதனால் தேர்வு எழுதியவர்கள் சென்னை வருவது தவிர்க்கப்படும்.

    அதன்பின்னர் குரூப்-4 தேர்வுக்கான கலந்தாய்வு அக்டோபர் மாதம் நடைபெறும். ஒரு பணியிடத்திற்கு 3 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். குரூப்-4 தேர்வு அறிவிக்கும்போது 9 ஆயிரத்து 351 காலிப்பணியிடங்கள் தான் இருந்தன. ஆனால் தற்போது 11 ஆயிரத்து 280 காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே இந்த காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்ந்து எடுப்போம்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு வருகிற அக்டோபர் மாதம் வெளியிடப்படும், 2016-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-1 தேர்வு பற்றி கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

    நேர்முகத்தேர்வு உள்ள குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு வருகிற 15-ந் தேதிக்குள் வெளியிடப்படும். இதன்மூலம் 1,547 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளிப்படைத்தன்மையாக தேர்வை நடத்துகிறது.

    அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஏற்கனவே 27 கம்ப்யூட்டர் வழித்தேர்வுகள் நடத்தப்பட்டன. 50 ஆயிரம் பேருக்கு குறைவான தேர்வர்கள் பங்கேற்கும் தேர்வை கம்ப்யூட்டர் வழித்தேர்வாக நடத்த முடியும். அவ்வாறு தேர்வு நடத்தினால் விரைவாக முடிவு வெளியிடப்படும்.

    தேர்வாணைய பணிகள் அனைத்தும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.  #TNPSCExam #tamilnews
    17½ லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. #TNPSC #ExamResult
    சென்னை:

    தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவையர், வரைவாளர் , தட்டச்சர், சுருக்கெழுத்து-தட்டச்சர் என 9 ஆயிரத்து 351 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்முறையாக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டது.

    அதையொட்டி பலரும் விண்ணப்பித்தனர். இந்த தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி நடந்தது. தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் தேர்வு எழுதினர்.

    தேர்வு முடிவு எப்போது வெளி வரும் என்று தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    இந்தநிலையில் அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் ரேங்க் ஆகியவற்றை தனது இணையதளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிட்டது.

    இந்த ரேங்க் பட்டியலில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற திருநாவுக்கரசு 14-வது இடத்திலும், செல்வக்குமார் 33-வது இடத்திலும் கிருத்திகா 144-வது இடத்திலும் உள்ளனர்.  #TNPSC #ExamResult
    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் பலியான 4-வது பயணி யார் என்பது குறித்து தெரியவந்துள்ளது. #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident
    சென்னை:

    சென்னையில் மின்சார ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்த 4 பேர் ரெயில் நிலையத்தின் தடுப்பு சுவரில் மோதி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    கடற்கரை நிலையத்தில் இருந்து திருமால்பூர் சென்ற மின்சார ரெயிலில் வாசலில் தொங்கியபடி பயணம் செய்த பயணிகள் பரங்கிமலை நிலையத்துக்குள் ரெயில் செல்லும் போது பக்கவாட்டு சுவரில் மோதி உடல் சிதறி உயிர் இழந்த சம்பவம் ரெயில் பயணிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

    நேற்று காலையில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தில் கல்லூரி மாணவர் சிவக்குமார் (23), பள்ளி மாணவர் பரத் (17) மற்றும் நவீன் குமார் (20) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

    மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் ஒருவர் இறந்தார். அவர் பெயர் விவரம் தெரியாமல் இருந்தது. மேலும் 7 பேர் காயம் அடைந்தனர்.


    அவர்கள் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    படிக்கட்டு விபத்தில் 4 பேர் இறந்ததில் அடையாளம் தெரியாத ஒருவர் யார் என்று தற்போது அடையாளம் தெரிந்தது. அவரது பெயர் வேல்முருகன் (25).

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த அனந்தபுரம் சித்தரசூரைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகன் ஆவார். அவர் பிளம்பராக வேலை செய்துள்ளார். அவர் சென்னையில் தங்கி வேலை செய்து வந்திருக்கலாம் என்று தெரிகிறது. #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident
    ×