search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில் விபத்தில் பலியான 4-வது பயணி அடையாளம் தெரிந்தது
    X

    ரெயில் விபத்தில் பலியான 4-வது பயணி அடையாளம் தெரிந்தது

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் பலியான 4-வது பயணி யார் என்பது குறித்து தெரியவந்துள்ளது. #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident
    சென்னை:

    சென்னையில் மின்சார ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்த 4 பேர் ரெயில் நிலையத்தின் தடுப்பு சுவரில் மோதி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    கடற்கரை நிலையத்தில் இருந்து திருமால்பூர் சென்ற மின்சார ரெயிலில் வாசலில் தொங்கியபடி பயணம் செய்த பயணிகள் பரங்கிமலை நிலையத்துக்குள் ரெயில் செல்லும் போது பக்கவாட்டு சுவரில் மோதி உடல் சிதறி உயிர் இழந்த சம்பவம் ரெயில் பயணிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

    நேற்று காலையில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தில் கல்லூரி மாணவர் சிவக்குமார் (23), பள்ளி மாணவர் பரத் (17) மற்றும் நவீன் குமார் (20) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

    மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் ஒருவர் இறந்தார். அவர் பெயர் விவரம் தெரியாமல் இருந்தது. மேலும் 7 பேர் காயம் அடைந்தனர்.


    அவர்கள் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    படிக்கட்டு விபத்தில் 4 பேர் இறந்ததில் அடையாளம் தெரியாத ஒருவர் யார் என்று தற்போது அடையாளம் தெரிந்தது. அவரது பெயர் வேல்முருகன் (25).

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த அனந்தபுரம் சித்தரசூரைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகன் ஆவார். அவர் பிளம்பராக வேலை செய்துள்ளார். அவர் சென்னையில் தங்கி வேலை செய்து வந்திருக்கலாம் என்று தெரிகிறது. #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident
    Next Story
    ×