search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Group IV"

    • ஈரோடு மாவட்டத்தில் நாளை நடைபெறும் குரூப்-4 தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 201 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • தேர்வர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

    ஈரோடு:

    தமிழக தேர்வாணையம் மூலம் அரசு பதவிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (24-ந்தேதி)தமிழகம் முழுவதும் குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஈரோடு மாவட்டத்தில் நாளை நடைபெறும் குரூப்-4 தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 201 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் குரூப் 4 தேர்வை 63 ஆயிரத்து 16 தேர்வர்கள் எழுத உள்ளனர்.

    தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு அலுவலர்கள் 201 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் 43 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் 16 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை வீடியோவாக படம் பிடிக்க 208 ஒளிப்பதிவாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வு பாதுகாப்பு பணியில் 260 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    ஒவ்வொரு தேர்வர்களும் நாளை காலை சரியாக 8.30 மணிக்குள் அந்தந்த தேர்வு மையத்திற்கு சென்று விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 9 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தேர்வு சரியாக காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணிக்கு நிறைவடையும். அதன்பின் 12.30 மணி முதல் 12.45 மணி வரை தேர்வர்கள் தங்களது ஓஎம்ஆர் சீட்டை சரியாக பூர்த்தி செய்து உள்ளார்களா என்று பார்க்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 12.45 மணிக்கு பிறகு தேர்வர்கள் அறைய விட்டு வெளியே செல்ல வேண்டும்.

    தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறது.அதன்படி தேர்வர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

    முக கவசம் அணியாமல் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வில் கருப்பு நிற பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    தேர்வர்கள் ஹால் டிக்கெட் உடன் ஆதார், டிரைவிங் லைசென்ஸ் பாஸ்போர்ட் போன்ற ஏதாவது ஒரு அடையாள அட்டையை கண்டிப்பாக எடுத்து கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தேர்வு மையங்களில் நுழைவாயிலில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள் தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு தேர்வு நடைபெறும்.

    செல்போன், டிஜிட்டல் வாட்ச் கொண்டு வர அனுமதி இல்லை. இவ்வாறாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வு மையங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.

    தேர்வுக்குறிய வினாத்தாள்கள் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    17½ லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. #TNPSC #ExamResult
    சென்னை:

    தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவையர், வரைவாளர் , தட்டச்சர், சுருக்கெழுத்து-தட்டச்சர் என 9 ஆயிரத்து 351 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்முறையாக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டது.

    அதையொட்டி பலரும் விண்ணப்பித்தனர். இந்த தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி நடந்தது. தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் தேர்வு எழுதினர்.

    தேர்வு முடிவு எப்போது வெளி வரும் என்று தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    இந்தநிலையில் அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் ரேங்க் ஆகியவற்றை தனது இணையதளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிட்டது.

    இந்த ரேங்க் பட்டியலில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற திருநாவுக்கரசு 14-வது இடத்திலும், செல்வக்குமார் 33-வது இடத்திலும் கிருத்திகா 144-வது இடத்திலும் உள்ளனர்.  #TNPSC #ExamResult
    ×