search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Group4 Exam"

    • தேர்வு முடிந்து 8 மாதம் ஆகியும் முடிவுகள் வெளியாகாததால் சர்ச்சை எழுந்தது.
    • கடந்த சில தினங்களுக்கு முன் இதுகுறித்த ஹேஷ்டேக் டுவிட்டரில் வைரலானது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 7301 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 19 லட்சம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். வழக்கமாக 2 அல்லது 3 மாதங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகிவிடும். ஆனால் இந்த முறை 8 மாதமாகியும் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் சர்ச்சை எழுந்தது.

    சமூக வலைத்தளங்களில் பலரும் அதிருப்தி தெரிவித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் இதுகுறித்த ஹேஷ்டேக் ட்விட்டரில் வைரலானது. இதையடுத்து, இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

    அதன்படி இன்று பிற்பகல் குரூப்-4 தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பலரும் இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தேடுவதால் டிஎன்பிஎஸ்சி இணையதளம் முடங்கியது. நேரம் செல்லச் செல்ல இணையதளத்தின் வேகம் சீரடைந்து தேர்வு முடிவுகளை எளிதாக பார்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     தேர்வு முடிவுகளை அறிய கிளிக் செய்க: https://apply.tnpscexams.in/result-groupIV/S8NHJQ0fh7EUzbQK

    • தஞ்சை மாவட்டம் பூதலூரில் உள்ள ஒரு மையத்துக்கு 6 பெண்கள் உள்பட 15 பேர் 6 நிமிடம் தாமதமாக வந்தனர்.
    • இதனால் அவர்களை கண்காணிப்பாளர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கவில்லை.

    பூதலூர்:

    தமிழகத்தில் இன்று காலை டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு தொடங்கியது. தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பூதலூரில் உள்ள ஒரு மையத்துக்கு 6 பெண்கள் உள்பட 15 பேர் 6 நிமிடம் தாமதமாக வந்தனர். இதனால் அவர்களை கண்காணிப்பாளர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கவில்லை.

    தொலை தூரத்தில் இருந்து வந்ததால் சிறிது நேரம் தாமதமாகி விட்டது என அவர்கள் முறையிட்டு பார்த்தும் பயன் இல்லை. இதனால் அவர்கள் தேர்வு மையத்தின் வெளியே ஏமாற்றத்துடன் காத்திருந்தனர். தகவல் அறிந்த அவர்களின் பெற்றோரும் விரைந்து வந்து மைய கண்காணிப்பாளரிடம் பேசி பார்த்தனர். ஆனால் தாமதமாக வந்ததால் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என கூறினர்.

    இதனால் தேர்வகள் மற்றும் அவர்களது பெற்றோர் மையத்தின் வெளியே காத்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருகிற அக்டோபர் மாதம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர். #TNPSCExam #GroupIV
    சென்னை:

    சென்னையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் கே.நந்தகுமார், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.சுதன் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த பிப்ரவரி மாதம் 11-ந் தேதி நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு தான் இந்தியாவிலேயே அதிகம் பேர் எழுதிய தேர்வாக இருக்கும். அந்த தேர்வை 17 லட்சத்து 53 ஆயிரத்து 154 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு வித்தியாசமாக நடந்தது. தேர்வு எழுதியவர்களின் பெயர், பதிவு எண், புகைப்படம், தேர்வு நடைபெறும் இடம் உள்ளிட்ட விவரங்கள் உரியவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் பதிவு எண்ணை எழுத வேண்டியதில்லை. வெளிப்படையாக தேர்வு நடத்தி வருகிறோம்.

    கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கும் சேர்ந்து ஒரே தேர்வாக நடத்தியதால் அரசுக்கு ரூ.12 கோடி செலவு குறைந்துள்ளது. குரூப்-4 தேர்வு எழுதியவர்களில் 14 லட்சத்து 26 ஆயிரத்து 10 பேரின் மதிப்பெண்கள் மற்றும் ரேங்க் பட்டியல் நேற்று (நேற்று முன்தினம்) வெளியிடப்பட்டது.

    தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று ரேங்க் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் இ.மெயில் மூலமாக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு குறித்த தகவல்கள் அனுப்பப்படும். அவர்கள் வருகிற 16-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை அரசு இ-சேவை மையங்களுக்கு சென்று தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த சான்றிதழ்களை அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாக அதிகாரிகள் சரிபார்ப்பார்கள். இதனால் தேர்வு எழுதியவர்கள் சென்னை வருவது தவிர்க்கப்படும்.

    அதன்பின்னர் குரூப்-4 தேர்வுக்கான கலந்தாய்வு அக்டோபர் மாதம் நடைபெறும். ஒரு பணியிடத்திற்கு 3 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். குரூப்-4 தேர்வு அறிவிக்கும்போது 9 ஆயிரத்து 351 காலிப்பணியிடங்கள் தான் இருந்தன. ஆனால் தற்போது 11 ஆயிரத்து 280 காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே இந்த காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்ந்து எடுப்போம்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு வருகிற அக்டோபர் மாதம் வெளியிடப்படும், 2016-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-1 தேர்வு பற்றி கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

    நேர்முகத்தேர்வு உள்ள குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு வருகிற 15-ந் தேதிக்குள் வெளியிடப்படும். இதன்மூலம் 1,547 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளிப்படைத்தன்மையாக தேர்வை நடத்துகிறது.

    அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஏற்கனவே 27 கம்ப்யூட்டர் வழித்தேர்வுகள் நடத்தப்பட்டன. 50 ஆயிரம் பேருக்கு குறைவான தேர்வர்கள் பங்கேற்கும் தேர்வை கம்ப்யூட்டர் வழித்தேர்வாக நடத்த முடியும். அவ்வாறு தேர்வு நடத்தினால் விரைவாக முடிவு வெளியிடப்படும்.

    தேர்வாணைய பணிகள் அனைத்தும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.  #TNPSCExam #tamilnews
    ×