search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓலா எஸ்1 ப்ரோ"

    உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி விடுதியில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உளுந்தூர்பேட்டை:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபி. டிரைவர். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். 2-வது மகள் லாவண்யா (வயது 16).

    இவர் உளுந்தூர்பேட்டையை அடுத்த எ.குமாரமங்கலத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். அங்குள்ள தங்கும் விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.

    சனி, ஞாயிறு விடுமுறையில் வீட்டுக்கு வந்து செல்வார். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை பள்ளிக்கு சென்று, அங்கு அரையாண்டு தேர்வு எழுதினார்.

    தேர்வு முடிந்ததும் தனது அறைக்கு சென்ற மாணவி லாவண்யா மதிய உணவு சாப்பிட வரவில்லை. இதனால் அவரது தோழிகள் லாவண்யாவை தேடி அவரது அறைக்கு சென்றனர். அங்கு லாவண்யா மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது பற்றி பள்ளிக்கு மாணவிகள் தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் விடுதிக்கு விரைந்து வந்தனர். ஆசிரியர்கள் உதவியுடன் லாவண்யாவை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி லாவண்யா இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஷாகுல் அமீது வழக்குப்பதிவு செய்து மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
    பிளஸ்-1 மாணவர்கள் 3 பேர் திடீரென மாயமானார்கள். அவர்கள் கடத்தப்படார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி (வயது 16), முத்துக்குமார்(16) மற்றும் முகவூரை சேர்ந்த கார்த்திக் பெரியசாமி (16) ஆகியோர் பிளஸ்-1 படித்து வருகிறார்கள்.

    நண்பர்களான 3 பேரும் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றனர். மாலையில் வீடு திரும்பிய அவர்கள் வெளியே சென்றுவிட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றனர்.

    நீண்ட நேரமாகியும் கருப்பசாமி, முத்துக்குமார், கார்த்திக் பெரியசாமி ஆகியோர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த பெற்றோர்கள், தங்களது மகன்களை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். பலனில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து, மாணவர்கள் தாங்களாகவே எங்கேனும் சென்றார்களா? அல்லது கடத்தப்பட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை கள்ளந்திரி அருகிலுள்ள தொப்புளாம் பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் மகள் பிரியதர்ஷினி (வயது 16). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு நீண்ட காலமாக தீராத வயிற்றுவலி இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை.

    இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பிரியதர்ஷினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக பிரியதர்ஷினியின் தாயார் மீனா அப்பன்திருப்பதி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜ சேகரன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள வி.நடுவூரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (55). இவர் சம்பவத்தன்று மாலை ஆட்டுப்பட்டியில் கால்நடைகளுக்கு தீவனம் போட்டுக் கொண்டு இருந்தார்.

    அப்போது சுவர் இடிந்து விழுந்ததில் சுந்தர்ராஜ் படுகாயம் அடைந்தார். இதையடுத்து உறவினர்கள் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் பலனின்றி சுந்தர்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக சுந்தர்ராஜ் மகன் சுந்தர பாண்டி விக்கிரமங்கலம் போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் அய்யணன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

    மத்தூரில் பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபர் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் முனிர். இவரது மகள் முபினா (வயது16). இவர் மத்தூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி முபினா மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் முனிர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் முபினாவை தேடினர். ஆனால் எங்கும் தேடியும் அவர் கிடைக்க வில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த மாணவியின் தந்தை முனிர், அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் தனது மகள் முபினாவை கடத்தி சென்றிருக்கலாம் என்று மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பள்ளி மாணவி முபினா மற்றும் சிலம்பரசனை தேடி வந்தனர். அப்போது சிலம்பரசன் முபினாவை கடத்தி சென்று ராயக்கோட்டை பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக தெரியவந்தது. போலீசார் முபினாவை மீட்டு சிலம்பரசனை கைது செய்தனர்.
    பிளஸ்-1 மாணவி தங்கையுடன் மாயமாகி விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் எம்.மீனாட்சி புரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன்கள் சாலினி (வயது 17), மீனாட்சி (16).

    திருத்தங்கல்லில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சாலினி பிளஸ்-1 படித்து வருகிறார். அதே பள்ளியில் மீனாட்சி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    தீபாவளி பண்டிகைக்கு மறுநாள், பள்ளியில் சிறப்பு வகுப்பு இருப்பதாக சகோதரிகள் இருவரும் வீட்டில் கூறிச் சென்றனர். அதன் பிறகு அவர்கள் மாலையில் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் 2 பேர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து ஆமத்தூர் போலீசில், சகோதரிகளின் தாயார் குருவத்தாய் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அக்காள்-தங் கையை தேடி வருகின்றனர்.

    காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த பிளஸ்-1 மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    திருப்பரங்குன்றம் மேற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகள் ரேஷ்மா (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் ரேஷ்மா குறைவான மதிப்பெண் எடுத்து இருந்தார். எனவே பெற்றோர் அவரை கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த ரேஷ்மா எலி மருந்து குடித்து விட்டார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ரேஷ்மா பரிதாபமாக இறந்தார்.

    திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக தமிழக அரசு ரூ.1 கோடி செலவு செய்துள்ளது என்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. #Jayalalithaa #JayalalithaaFuneral
    மதுரை:

    மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் சையது தமீம், சமூக ஆர்வலர். இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்டு முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் பொது தகவல் தொடர்பு அதிகாரிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    அதில் அவர் ஜெயலலிதா எப்போது இறந்தார்? என்ற கேள்விக்கு 5-12-2016 அன்று ஜெயலலிதா இறந்தார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு தமிழக அரசு எவ்வளவு செலவு செய்தது? என்ற கேள்விக்கு தமிழக அரசு செலவு செய்யவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



    ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக தமிழக அரசு எவ்வளவு செலவு செய்தது? என்ற மற்றொரு கேள்விக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக ரூ.99 லட்சத்து 33 ஆயிரத்து 586 செலவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜெயலலிதா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவருக்கு தற்போது பென்சன் வழங்கப்படுகிறதா? அந்த பென்சன் தொகை யாருக்கு வழங்கப்படுகிறது? என்ற கேள்விக்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பென்சன் தொகை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் சட்டசபை செயலாளரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது குறித்து அவர் தான் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #Jayalalithaa #JayalalithaaFuneral
    அமெரிக்காவில் வழங்கப்படும் எச் 1 பி விசாவில் மிக முக்கியமான மாற்றங்களை செய்ய உள்ளோம் என அதிபர் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. #Trump #H1Bvisa
    வாஷிங்டன்:

    அமெரிக்க நாட்டில் இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டினர் தங்கி வேலை செய்வதற்கு, அந்த நாடு ‘எச்-1 பி’ விசா வழங்குகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் இடையே இந்த விசாவுக்கு எப்போதுமே பெரும் வரவேற்பு இருக்கிறது.
     
    2007-ம் ஆண்டு தொடங்கி 2017-ம் ஆண்டு வரையில், இந்தியாவில் இருந்து 22 லட்சம் பேர் இந்த விசாவுக்கு விண்ணப்பித்தனர் என்றால், அந்த விசாவுக்கு இந்தியர்கள் மத்தியில் உள்ள ஆர்வத்தை அறிந்து கொள்ள முடியும்.



    அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ம் தேதி டிரம்ப் ஜனாதிபதி பதவியை ஏற்ற பின்னர், ‘அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்’ என்ற கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்தி இருக்கிறார். இதன்காரணமாக அமெரிக்காவில் மற்ற நாட்டினர் பணியாற்றுவதை குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையில் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது.

    இதன் காரணமாக ‘எச்-1 பி’ விசா கேட்டு விண்ணப்பிக்கிற இந்தியர்களின் விண்ணப்பங்கள் முன்எப்போதும் இல்லாத வகையில் நிராகரிக்கப்படுகின்றன என கடந்த ஜூலையில் வெளியான ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.

    இந்நிலையில், எச்1 பி விசா பெறுவதற்கான வரையறைகளை, அமெரிக்க குடிபெயர்வுத்துறை  மாற்றியமைக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த மற்றும் மிகத்திறமையான வெளிநாட்டவர்கள் எச்1 பி விசா பெறும் வகையிலும், அமெரிக்க பணியாளர்கள் மற்றும் ஊதிய விகிதத்தைப் பாதுகாக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது என உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. #Trump #H1Bvisa
    உல்லாச வாழ்க்கைக்காக பைக்குகளை திருடி விற்ற பள்ளி மாணவன் மற்றும் வாலிபரை கைது செய்த போலீசார் 19 பைக்குகள் பறிமுதல் செய்தனர்.
    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த கலவை சென்னலேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 26). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    ஜெய்சங்கர் தன்னுடைய பைக்கை கலவை காளிஅம்மன் கோவில் தெருவில் உள்ள உறவினர் வையாபுரி என்பவரது வீட்டில் நிறுத்தி விட்டு வேலைக்கு செல்வது வழக்கம்.

    நேற்றுமுன்தினம் வழக்கம்போல் வையாபுரி வீட்டு வளாகத்தில் பைக்கை நிறுத்தி விட்டு ஜெய்சங்கர் வேலைக்கு சென்றுவிட்டார். நேற்று காலை திரும்பிவந்து பார்த்தார். அப்போது, பைக் திருடு போயிருந்தது.

    உடனடியாக கலவை போலீசில் புகார் அளித்தார். ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்தினர். கலவை பஸ்நிலையத்தில் திருடு போன ஜெய்சங்கரின் பைக் நிறுத்தப்பட்டிருந்தது.

    அங்கிருந்த பைக் திருடிய 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், பள்ளிகொண்டா வேப்பூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது பிளஸ்-1 மாணவன் என்பது தெரியவந்தது.

    மற்றொருவர், பள்ளிகொண்டா ஒலகாச்சி தென்னந்தோப்பு பகுதியை சேர்ந்த பொற்கொடி மகன் வைரம் என்கிற பிரபு (20) என்பது தெரியவந்தது.

    பிளஸ்-1 மாணவனின் பாட்டி வீடு கலவை அகரம் பகுதியில் உள்ளது. இங்கு, மாணவனும், அவருடைய நண்பர் பிரபுவும் அடிக்கடி சென்றனர்.

    அப்போது, ஆற்காடு மற்றும் கலவை பகுதிகளில் தொடர்ந்து பைக்குகளை திருடி பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம், வாழத்தோப்பு பகுதியில் பதுக்கியுள்ளனர்.

    திருடிய பைக்குகளை குறைந்த விலைக்கு விற்று, அந்த பணத்தில் உல்லாசமாக இருந்தனர். மது குடிப்பது, பெண்களுடன் சுற்றுவது என பணத்தை அள்ளிவீசி செலவழித்ததாக 2 பேரும் வாக்குமூலம் அளித்தனர்.

    இதையடுத்து, ஒரு பைக்கை பறிமுதல் செய்த போலீசார் மாணவன் உள்பட 2 பேரையும் கைது செய்தனர். பிறகு வெட்டுவானம், வாழத்தோப்பு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள வீடுகளில் சோதனையிட்டனர்.

    அங்கு 18 திருட்டு பைக்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கலவை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் மாணவன் உள்பட 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    மார்த்தாண்டத்தில் இரவில் படித்து கொண்டிருந்தபோது லேப்-டாப்பில் மின்சாரம் பாய்ந்து பிளஸ்-1 மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    மார்த்தாண்டம்:

    மார்த்தாண்டத்தை அடுத்த சிராயன்குழி, காட்டுவிளையை சேர்ந்தவர் பெனட். ராணுவ வீரர்.

    பெனட்டிற்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் மதுரையில் படித்து வருகிறார். மகள் பெஜின் (வயது 16). உண்ணாமலை கடை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்- 1 படித்து வந்தார்.

    தினமும் வீட்டில் இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பார். இதற்காக லேப்- டாப்பும் பயன்படுத்துவார்.

    வழக்கம் போல பெஜின் நேற்றிரவும் வீட்டில் படித்து கொண்டிருந்தார். அவர் அருகில் லேப்-டாப்பும் இருந்தது. அதனை சார்ஜரில் போட்டபடி பெஜின் படித்து கொண்டிருந்ததாக தெரிகிறது.

    இன்று காலை பெஜினின் அறை நீண்ட நேரம் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரது அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு பெஜின், லேப்-டாப்பில் தலைசாய்த்தபடி இறந்து கிடந்தார்.

    அதிர்ச்சி அடைந்த பெற்றோர் லேப்-டாப்பை அகற்றிவிட்டு பெஜினை மீட்க முயன்றனர். அப்போது லேப்-டாப்பில் மின்சாரம் பாய்ந்திருப்பது தெரியவந்தது.

    பெஜின் இரவில் படித்து முடித்த பின்பு லேப்-டாப்பை சார்ஜரில் இருந்து அகற்றவில்லை என்றும், இதில் மின்சாரம் பாய்ந்து அவர் இறந்திருக்கலாம் எனவும் தெரிகிறது. இதுபற்றி பெஜினின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெஜினின் தந்தை தற்போது காஷ்மீர் மாநிலத்தில் வேலை பார்த்து வருகிறார். மகள் இறந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நன்றாக படிக்கும் மாணவி, படித்து கொண்டிருந்த போதே இறந்து போன சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    திண்டுக்கல் அருகே திருமணத்திற்கு பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை செங்குறிச்சி சடையம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கும், அதேபகுதியை சேர்ந்த உறவினரான பிளஸ்-1 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இதுநாளடைவில் காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். ஆனால் உறவு முறையில் லட்சுமணன் அந்த பெண்ணுக்கு சித்தப்பா என்பதால் உறவினர்கள் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ஆனால் லட்சுமணன் அந்த பெண்ணை திருமணம் செய்வது என முடிவு செய்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவியை லட்சுமணன் திருமண ஆசை காட்டி கடத்திச்சென்றார். அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மாணவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் வடமதுரை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை கடத்திய லட்சுமணனை தேடி வருகின்றனர்.

    கண்ணமங்கலம் அருகே குடும்ப தகராறில் பிளஸ்-1 மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூர் காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் நிவேதா (வயது 15). இவர், கண்ணமங்கலத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    குடும்பத்தகராறு காரணமாக மனமுடைந்த மாணவி நள்ளிரவு வீட்டில் இருந்து வெளியேறி தன்னுடைய பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மேல் ஏறி படுத்துக் கொண்டார்.

    இன்று காலையில் அவரது அண்ணன் பள்ளிக்கு சென்று மாணவியை சமரசம் செய்து கீழே இறங்குமாறு வற்புறுத்தினார். அடம்பிடித்த மாணவி தற்கொலை செய்து கொள்வதற்காக நீர்த்தேக்க தொட்டியின் மேல் இருந்து கீழே குதித்தார்.

    இதில் இடுப்பு முறிவு ஏற்பட்டு மாணவி படுகாயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    ×