search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே திருமணத்திற்கு பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபர்
    X

    திண்டுக்கல் அருகே திருமணத்திற்கு பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபர்

    திண்டுக்கல் அருகே திருமணத்திற்கு பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை செங்குறிச்சி சடையம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கும், அதேபகுதியை சேர்ந்த உறவினரான பிளஸ்-1 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இதுநாளடைவில் காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். ஆனால் உறவு முறையில் லட்சுமணன் அந்த பெண்ணுக்கு சித்தப்பா என்பதால் உறவினர்கள் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ஆனால் லட்சுமணன் அந்த பெண்ணை திருமணம் செய்வது என முடிவு செய்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவியை லட்சுமணன் திருமண ஆசை காட்டி கடத்திச்சென்றார். அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மாணவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் வடமதுரை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை கடத்திய லட்சுமணனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×