search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs 1 crore"

    • அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் இந்த வாரம் கால்நடை சந்தை கூடியது.
    • ஏராளமான வியாபாரிகள் கால்நடைகள் வாங்க வந்திருந்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் இந்த வாரம் கால்நடை சந்தை கூடியது.

    இந்த கால்நடை சந்தைக்கு அந்தியூர், பர்கூர், கோபிசெட்டிபாளையம். பவானி அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் இருந்து மாடுகளும், எருமை மாடுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

    ஈரோடு மாவட்டம் மற்றும் கர்நாடக, கேரளா மாநிலத்திலிருந்து ஏராளமான வியாபாரிகள் கால்நடைகள் சந்தையில் கால்நடைகள் வாங்க வந்திருந்தனர்.

    சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்ட நிலையில், மாடுகள் ரூ. 3 ஆயிரத்தில் ரூ.45 ஆயிரம் வரையிலும், எருமை மாடுகள் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

    கடந்த 2 நாட்கள் நடை பெற்ற கால்நடை சந்தையில் சுமார் ரூ.1 கோடியே 40 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டது என வியாபாரிகள் கூறினர்.

    ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக தமிழக அரசு ரூ.1 கோடி செலவு செய்துள்ளது என்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. #Jayalalithaa #JayalalithaaFuneral
    மதுரை:

    மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் சையது தமீம், சமூக ஆர்வலர். இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்டு முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் பொது தகவல் தொடர்பு அதிகாரிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    அதில் அவர் ஜெயலலிதா எப்போது இறந்தார்? என்ற கேள்விக்கு 5-12-2016 அன்று ஜெயலலிதா இறந்தார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு தமிழக அரசு எவ்வளவு செலவு செய்தது? என்ற கேள்விக்கு தமிழக அரசு செலவு செய்யவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



    ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக தமிழக அரசு எவ்வளவு செலவு செய்தது? என்ற மற்றொரு கேள்விக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்காக ரூ.99 லட்சத்து 33 ஆயிரத்து 586 செலவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜெயலலிதா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவருக்கு தற்போது பென்சன் வழங்கப்படுகிறதா? அந்த பென்சன் தொகை யாருக்கு வழங்கப்படுகிறது? என்ற கேள்விக்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பென்சன் தொகை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் சட்டசபை செயலாளரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது குறித்து அவர் தான் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #Jayalalithaa #JayalalithaaFuneral
    ×