search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "40 lakhs"

    • அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் இந்த வாரம் கால்நடை சந்தை கூடியது.
    • ஏராளமான வியாபாரிகள் கால்நடைகள் வாங்க வந்திருந்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் இந்த வாரம் கால்நடை சந்தை கூடியது.

    இந்த கால்நடை சந்தைக்கு அந்தியூர், பர்கூர், கோபிசெட்டிபாளையம். பவானி அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் இருந்து மாடுகளும், எருமை மாடுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

    ஈரோடு மாவட்டம் மற்றும் கர்நாடக, கேரளா மாநிலத்திலிருந்து ஏராளமான வியாபாரிகள் கால்நடைகள் சந்தையில் கால்நடைகள் வாங்க வந்திருந்தனர்.

    சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்ட நிலையில், மாடுகள் ரூ. 3 ஆயிரத்தில் ரூ.45 ஆயிரம் வரையிலும், எருமை மாடுகள் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

    கடந்த 2 நாட்கள் நடை பெற்ற கால்நடை சந்தையில் சுமார் ரூ.1 கோடியே 40 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டது என வியாபாரிகள் கூறினர்.

    • தினமும் சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகிறது.
    • தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு முட்டைக்கு விலை நிர்ணயம் செய்கிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன. தினமும் சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு முட்டைக்கு விலை நிர்ணயம் செய்கிறது.

    கடந்த சில நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது முட்டையின் விலை 515 காசாக இருக்கிறது. சில்லறை விலை கடைகளில் ஒரு முட்டை 650 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த காலங்களில் முட்டையின் விலை உயரும் போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது பாதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது விலை உயர்ந்துள்ள நிலையிலும் வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. தினமும் 40 லட்சம் முட்டைகள் வரை வளைகுடா நாடுகளுக்கு நாமக்கல் பகுதியில் இருந்து ஏற்றுமதி ஆகிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் விலை உயர்ந்துள்ள நிலையிலும் வெளிநாடுகளுக்கு அதிக அளவு முட்டையை ஏற்றுமதி செய்யப்படுவதால் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வளைகுடா நாட்டில் உலக கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. உக்ரைன் போர் மற்றும் குளிர்காலம் என்பதால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து தற்போது முட்டை ஆர்டர் அதிகரித்து வருவதாக நாமக்கல் கோழிப் பண்ணை யாளர்கள் தெரிவித்தனர்.

    ×