search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டர் சட்டம்"

    • திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த அழகர்சாமி (வயது 53) என்பவரை தெற்கு போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 2¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
    • கோவை மத்திய சிறையில் உள்ள அழகர்சாமியிடம் ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் சர்மியான் சாகிப் வீதியில் உள்ள மதுக்கடை அருகே கடந்த ஜூலை மாதம் 14-ந் தேதி கஞ்சா விற்பனை செய்த திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த அழகர்சாமி (வயது 53) என்பவரை தெற்கு போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 2¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இவரது சொந்த ஊர் மதுரை ஆரப்பாளையம் ஆகும்.

    அழகர்சாமி மீது தெற்கு, அனுப்பர்பாளையம், சென்னை பூந்தமல்லி போலீஸ் நிலையங்களில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு ஆபத்தையும், பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்புக்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வருவதால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டார்.

    அதன்படி கோவை மத்திய சிறையில் உள்ள அழகர்சாமியிடம் ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 46 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    • ஆள் கடத்தல், 6 திருட்டு வழக்குகள் உட்பட, 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • போலீஸ் சூப்பிரண்டு சரோஜ் குமார் தாக்கூர் பரிந்துரை செய்ததையடுத்து, மாவட்ட கலெக்டர் சரயு, அகிலனை குண்டர் சட்டத் தில் கைது செய்ய உத்தர விட்டார்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அடுத்த அம்பேத் கர் காலனியை சேர்ந்தவர் அகிலன்(எ)அகில்(வயது26). இவர், கிருஷ்ணகிரியில் சேலம் மேம்பாலம் அருகில் உள்ள கார்வேபுரம் பகுதி யில் வசித்து வந்தார்.

    இவர் மீது கிருஷ்ணகிரி டவுன், தாலுகா, குருபரப் பள்ளி, ஓசூர் ஹட்கோ, சிப்காட், போலீஸ் ஸ்டேஷன் களில், 2 கொலை, 1 கொலை முயற்சி, 1 பெட்ரோல் குண்டு வீச்சு, ஆள் கடத்தல், 6 திருட்டு வழக்குகள் உட்பட, 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகில் பொது அமைதிக்கு குந்தகம் விளை விக்கும் வகையில் பொது மக்களை அச்சுறுத்திய அகி லனை கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டர் கபிலன் கைது செய்தார்.

    இவ்வழக்கில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அகி லனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ் குமார் தாக்கூர் பரிந்துரை செய்ததையடுத்து, மாவட்ட கலெக்டர் சரயு, அகிலனை குண்டர் சட்டத் தில் கைது செய்ய உத்தர விட்டார்.

    இதையடுத்து அதற்கான ஆணையை கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டர் கபிலன், சேலம் மத்திய சிறையில் வழங்கினார். ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அகிலனை, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    • ஏவிஎஸ் காா்டன் பகுதியில் திவாகரன் என்பவா் கடந்த ஜுன் 30 ந் தேதி நடந்து சென்றுள்ளாா்.
    • குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக 42 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திருமுருகன்பூண்டி அருகே வழிப்பறி வழக்கில் கைதான 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். இது குறித்து திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏவிஎஸ் காா்டன் பகுதியில் திவாகரன் என்பவா் கடந்த ஜுன் 30 ந் தேதி நடந்து சென்றுள்ளாா். அப்போது, அந்த வழியாக வந்த 3 போ் அவரைத் தடுத்து நிறுத்தி செல்போனை பறித்து கொண்டு தப்பிச் சென்றனா்.

    இது குறித்து திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் திவாகரன் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ராயபுரத்தைச் சோ்ந்த எபின் (19), சாமுண்டிபுரத்தை சோ்ந்த தமிழ்செல்வன் (20), பவானி சாகரை சோ்ந்த விமல்குமாா் (20) ஆகிய 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    இந்த 3 பேரும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவா்களை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டுள்ளாா்.

    இந்த உத்தரவுக்கான நகலை கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரிடமும் திருமுருகன்பூண்டி காவல்துறையினா் இரவு வழங்கினா். திருப்பூா் மாநகரில் நிகழாண்டு தொடா் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக 42 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
    • குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனை மற்றும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடு பவர்களை போலீ சார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் சர்ச் தெருவை சேர்ந்தவர் காஸ்டின் ராபின் என்ற லக்ஸ் (வயது 22). இவருடைய நண்பர் முருகன்குன்றம் பகுதியை சேர்ந்த ஜெப்ரின் (21). இவர்கள் மீது கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் போலீசாரின் எச்சரிக்கை யையும் மீறி காஸ்டின் ராபின், ஜெப்ரின் ஆகியோர் தொடர்ந்து குற்றச்செ யல்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் இவர்களது பெயர் குமரி மாவட்ட ரவுடிகள் பட்டியிலிலும் இடம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து காஸ்டின் ராபினையும், ஜெப்ரினை யும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி குண்டர் சட்டத்தின் கீழ் ரவுடிகளான காஸ்டின் ராபின், ஜெப்ரின் ஆகியோரை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார். குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

    • கொலை முயற்சியில் தொடர்புடைய 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் கண்காணித்து வந்தனர்.

    மதுரை

    மதுரை கீரைத்துரை மேலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் நிறைகுளத்தான். இவரது மகன் சதீஷ்குமார் (வயது24). இவர் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டி ருந்தார். அவரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    இதில் அவர் பொதுமக்க ளுக்கும், பொது அமைதிக் கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து நடந்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து சதீஷ் குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தென்மண்டல ஐ.ஜி.யும், மதுரை நகர் கூடுதல் பொறுப்பு போலீஸ் கமிஷனருமான நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து சதீஷ்கு மாரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

    காமராஜர்புரம் திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் மணிகண்டன் என்ற குட்டமணி (22). இவர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர். அவரை போலீசார் கண்காணித்து வந்தனர்.

    இதில் பொதுமக்க ளுக்கும், பொது அமை திக்கும் குந்தகம் விளை விக்கும் வகையில் செயல் பட்டு வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நரேந்திரன்நாயர் உத்தரவின் பேரில் போலீசார் மணி கண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    கீரைத்துரை மேல தோப்பு 3-வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் சரவணன் என்ற கோபி சரவணன். கொலை வழக்கில் சம்பந்தப் பட்ட இவர் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டார்.

    இதைத்தொடர்ந்து நரேந்திரன் நாயர் உத்தர வின்பேரில் போலீசார் சரவணனை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    மதுரையில் ஒரே நாளில் 3 வாலிபர்களை போலீசார் அதிரடியாக குண்டர் சட்டத் தில் கைது செய்துள்ளனர்.

    • துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கில் கைதானவர்கள் மீது நடவடிக்கை
    • கலெக்டர் உத்தரவு

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட் டம் தச்சம்பட்டு அருகே உள்ள தேவனூர் பகுதியைச் சேர்ந்த காசி மகன் அருள்கு மார் (வயது 37). இவரை 5 பேர் கொண்ட கும்பல் கடந்த மே மாதம் 31-ந் தேதி துப்பாக்கி யால் சுட்டும் கத்தியால்வெட் டியும் படுகொலை செய்தனர்.

    இது குறித்து தச்சம்பட்டு 'போலீசார் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அத்தியந்தல் பகுதியைச் சேர்ந்த மாமலை வாசன் (31), தச்சம்பட்டு அருகே உள்ள தேவனூர் பகு தியைச் சேர்ந்த இளங்கோ வன் (33), கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஆதிதிருவரங் கம் பகுதியைச் சேர்ந்த சூர்யா (22), உலகலாப்பாடியைச் சேர்ந்த சரத்குமார் (22), சங்க ராபுரம் டவுன் லோகநாதன் (வயது 32) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்த னர்.

    இவர்கள் குற்ற சம்பவங் களில் தொடர்ந்து ஈடுபடாத வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு கார்த் திகேயன் பரிந்துரைத்தார்.

    அதன் பேரில் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டதைய டுத்து அதற்குண்டான நகல் வேலூர் சிறையில் இருப்ப வர்களிடம் வழங்கப்பட்டது.

    • சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
    • ஜாமீனில் வெளியில் வரும் அவர், சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷச் சாராயம் குடித்து 15 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

    மரக்காணம் பாலகிருஷ்ணா தெருவில் வசிக்கும் விஜயகுமார் (வயது 23) தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பதும், ஜாமீனில் வெளியில் வரும் அவர், சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், விஜயகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு பரிந்துரைத்தார். கலெக்டரின் உத்தரவின் பேரில் மரக்காணம் போலீசார் விஜயகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • எஸ்.பி. எச்சரிக்கை
    • நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு

    வேலூர்:

    குற்றங்கள் தடுப்பது குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம், வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், எஸ்.பி. மணிவண் ணன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள எல்லா வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

    கோர்ட்டில் உள்ள வழக்குகளில் இறுதி விசாரணை அறிக்கையை, நிலுவையின்றி தாக்கல் செய்ய பட்டியல்களில் உள்ள ரவுடிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    ஜாமீனில் வெளியே வந்த பின்னரும் அவர்களின் அன்றாட செயல்பாடுகளை கண்காணித்து குற்றம் நடப்பதற்கு முன்னர் தடுக்க வேண்டும்.

    மக்கள் அளிக் கும் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். வேண்டும். போலீசாரின் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், டிஎஸ்பிக் கள் திருநாவுக்கரசு, பழனி, ராமமூர்த்தி, இருதயராஜ், மனோகரன் மற்றும் இன்ஸ் பெக்டர்கள் பங்கேற்றனர்.

    • கேரளா சென்று திரும்பும் சிறிய முதல் கனரக வாகனங்களில் மருத்துவக்கழிவுகளை ஏற்றி அனுப்பி விடுகின்றனர்.
    • கேரள கழிவுகளை கொண்டு வருபவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தென்காசி:

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக அமைந்துள்ள தென்காசி மாவட்டம் பல்வேறு சுற்றுலா தலங்களை உள்ளடக்கியதாக காணப்படுகிறது.

    புளியரை சோதனை சாவடியை கடந்து சென்றால் அண்டை மாநிலமான கேரளாவை சென்றடையலாம். அங்கு காய்கறிகள், மணல், ஜல்லி அனைத்தும் இந்த சோதனை சாவடி வழியாக தான் கொண்டு செல்லப்படும்.

    இந்நிலையில் கேரளாவில் மருத்துவக்கழிவுகள், குப்பை கழிவுகளை கொட்டு வதற்கு பல்வேறு விதி முறைகள் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், தென்காசி மாவட்டத்தில் இருந்து அங்கு சென்று திரும்பும் சிறிய முதல் கனரக வாகனங்களில் மருத்துவக்கழிவு களை ஏற்றி அனுப்பி விடுகின்றனர்.

    வாகனங்களின் டிரைவர்களும் பணத்திற்கு ஆசைப்பட்டு, மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்து தென்காசி மாவட்டத்தில் சாலையோரம் கொட்டி விட்டு சென்று விடுகின்றனர். கேரளாவில் இருந்து தென்காசி மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் புளியரை செக்போஸ்டில் முழுமை யாக சோதனை செய்யப் படாததே இந்த நிலைக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.

    இந்த மருத்துவ கழிவுகளை பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் கொட்டி செல்கின்றனர்.

    சமீபத்தில் கூட கேரளா மாநிலம் கோட்டயத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவு மருத்துவ கழிவுகள் மற்றும் மெத்தை கழிவுகளை கொண்டு வந்து ஆலங்குளம் அருகே கொட்டி எரித்து கொண்டிருந்த குற்றச் சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டு 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    எனவே தென்காசி மாவட்டத்திற்குள் தலை தூக்கி வரும் கேரளா கழிவுகளை முழுமையாக நிறுத்திட தென்காசி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள புளியரை செக்போஸ்டில் கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும். அங்கு வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும். கேரள கழிவுகளை கொண்டு வருபவர்கள் மற்றும் அதற்கு துணை புரியும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட விவசாயி கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

    • குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
    • அதன்பேரில் 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை செல்லூர் பாரதி தெரு ஜீவா ரோடு பழனி வேல் மகன் பூபதி ராகவேந்தி ரன். இவர் வழிப்பறி உள் பட்ட பல்வேறு குற்ற சம்ப வங்களில் தொடர்ந்து ஈடு பட்டு வந்தார். இதனால் இவருடைய குற்ற செயல் களை கட்டுப்படுத்த போலீஸ் கமிஷனர் நரேந்தி ரன் நாயர் உத்தரவின்பேரில் போலீசார் பூபதி ராகவேந்தி ரனை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    வாகைகுளம் பனங்காடி தென்றல் நகர் நீலச்சந்திரன் மகன் பார்த்தசாரதி 21. இவர் கொலை முயற்சி, கூட்டுக் கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களை ஈடு பட்டு வந்தார். தொடர்ந்து இவர் இந்தச்செயலில் ஈடுபட்டு வந்ததால் இவரை யும் போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் போலீ சார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    பி.டி.ஆர். மெயின் ரோடு இந்திரா நகரை சேர்ந்த ராமசாமி மகன் சதீஷ்குமார் என்ற குட்டீஸ். இவர் கொலை முயற்சி வழிப்பறி உட்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவரும் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில் இவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர் .மதுரையில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளனர்.

    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    • மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி அவரை 10-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்து உத்தரவிட்டார்.

    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டி சினிமா நகரை சேர்ந்தவர் பாண்டியன் (35), இவர் கடந்த மே மாதம் 28-ந்தேதி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்து சென்ற வீராணத்தை சேர்ந்த முருகன் என்பவரை வழி மறித்து மிரட்டி ரூ.450-ஐ பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், செவ்வாய்ப்பேட்டை, அன்னதானப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் புகுந்து திருடுதல், மோட்டார் சைக்கிள்கள் திருட்டு உள்பட தொடர் குற்றங்களில் ஈடுபட்டதும், பாண்டியன்மீது சேலம் மாநகர போலீஸ் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் இதனால் 9 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

    இந்நிலையில் பாண்டியன் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என டவுன் போலீசார் சேலம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.

    இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி அவரை 10-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்து உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு சேலம் சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.

    • குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார்
    • நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக் பப்பட்டனர்.

    நாகர்கோவில் :

    ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகரை சேர்ந்தவர் ஏசுதாசன் (வயது 58) செங்கல் சூளை அதிபர். இவரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக ஆரல் வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகரை சேர்ந்த அன்பு என்ற அன்பழகன் (36), விஜயன் (25) உள்பட 5 பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அன்பு, விஜயன் இருவர் மீதும் ஏற்கனவே பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் இவர்களது பெயர் இடம் பெற்று இருந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார்.அதனை ஏற்று கலெக்டர் ஸ்ரீதர் அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதையடுத்து அன்பு, விஜயன் இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

    ×