search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும்
    X

    தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும்

    • எஸ்.பி. எச்சரிக்கை
    • நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு

    வேலூர்:

    குற்றங்கள் தடுப்பது குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம், வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், எஸ்.பி. மணிவண் ணன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள எல்லா வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

    கோர்ட்டில் உள்ள வழக்குகளில் இறுதி விசாரணை அறிக்கையை, நிலுவையின்றி தாக்கல் செய்ய பட்டியல்களில் உள்ள ரவுடிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    ஜாமீனில் வெளியே வந்த பின்னரும் அவர்களின் அன்றாட செயல்பாடுகளை கண்காணித்து குற்றம் நடப்பதற்கு முன்னர் தடுக்க வேண்டும்.

    மக்கள் அளிக் கும் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். வேண்டும். போலீசாரின் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், டிஎஸ்பிக் கள் திருநாவுக்கரசு, பழனி, ராமமூர்த்தி, இருதயராஜ், மனோகரன் மற்றும் இன்ஸ் பெக்டர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×