5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கில் கைதானவர்கள் மீது நடவடிக்கைகலெக்டர் உத்தரவு
5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

வேங்கிக்கால்:

திருவண்ணாமலை மாவட் டம் தச்சம்பட்டு அருகே உள்ள தேவனூர் பகுதியைச் சேர்ந்த காசி மகன் அருள்கு மார் (வயது 37). இவரை 5 பேர் கொண்ட கும்பல் கடந்த மே மாதம் 31-ந் தேதி துப்பாக்கி யால் சுட்டும் கத்தியால்வெட் டியும் படுகொலை செய்தனர்.

இது குறித்து தச்சம்பட்டு 'போலீசார் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அத்தியந்தல் பகுதியைச் சேர்ந்த மாமலை வாசன் (31), தச்சம்பட்டு அருகே உள்ள தேவனூர் பகு தியைச் சேர்ந்த இளங்கோ வன் (33), கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஆதிதிருவரங் கம் பகுதியைச் சேர்ந்த சூர்யா (22), உலகலாப்பாடியைச் சேர்ந்த சரத்குமார் (22), சங்க ராபுரம் டவுன் லோகநாதன் (வயது 32) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்த னர்.

இவர்கள் குற்ற சம்பவங் களில் தொடர்ந்து ஈடுபடாத வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு கார்த் திகேயன் பரிந்துரைத்தார்.

அதன் பேரில் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டதைய டுத்து அதற்குண்டான நகல் வேலூர் சிறையில் இருப்ப வர்களிடம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com