search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் குற்றங்களில் ஈடுபட்ட வாலிபர்  மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
    X

    தொடர் குற்றங்களில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

    • ஆள் கடத்தல், 6 திருட்டு வழக்குகள் உட்பட, 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • போலீஸ் சூப்பிரண்டு சரோஜ் குமார் தாக்கூர் பரிந்துரை செய்ததையடுத்து, மாவட்ட கலெக்டர் சரயு, அகிலனை குண்டர் சட்டத் தில் கைது செய்ய உத்தர விட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அடுத்த அம்பேத் கர் காலனியை சேர்ந்தவர் அகிலன்(எ)அகில்(வயது26). இவர், கிருஷ்ணகிரியில் சேலம் மேம்பாலம் அருகில் உள்ள கார்வேபுரம் பகுதி யில் வசித்து வந்தார்.

    இவர் மீது கிருஷ்ணகிரி டவுன், தாலுகா, குருபரப் பள்ளி, ஓசூர் ஹட்கோ, சிப்காட், போலீஸ் ஸ்டேஷன் களில், 2 கொலை, 1 கொலை முயற்சி, 1 பெட்ரோல் குண்டு வீச்சு, ஆள் கடத்தல், 6 திருட்டு வழக்குகள் உட்பட, 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகில் பொது அமைதிக்கு குந்தகம் விளை விக்கும் வகையில் பொது மக்களை அச்சுறுத்திய அகி லனை கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டர் கபிலன் கைது செய்தார்.

    இவ்வழக்கில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அகி லனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ் குமார் தாக்கூர் பரிந்துரை செய்ததையடுத்து, மாவட்ட கலெக்டர் சரயு, அகிலனை குண்டர் சட்டத் தில் கைது செய்ய உத்தர விட்டார்.

    இதையடுத்து அதற்கான ஆணையை கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டர் கபிலன், சேலம் மத்திய சிறையில் வழங்கினார். ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அகிலனை, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    Next Story
    ×