குண்டர் சட்டத்தில் 3 வாலிபர்கள் கைது

கொலை முயற்சியில் தொடர்புடைய 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். போலீசார் கண்காணித்து வந்தனர்.
குண்டர் சட்டத்தில் 3 வாலிபர்கள் கைது
Published on

மதுரை

மதுரை கீரைத்துரை மேலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் நிறைகுளத்தான். இவரது மகன் சதீஷ்குமார் (வயது24). இவர் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டி ருந்தார். அவரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இதில் அவர் பொதுமக்க ளுக்கும், பொது அமைதிக் கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து நடந்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து சதீஷ் குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தென்மண்டல ஐ.ஜி.யும், மதுரை நகர் கூடுதல் பொறுப்பு போலீஸ் கமிஷனருமான நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து சதீஷ்கு மாரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

காமராஜர்புரம் திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் மணிகண்டன் என்ற குட்டமணி (22). இவர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர். அவரை போலீசார் கண்காணித்து வந்தனர்.

இதில் பொதுமக்க ளுக்கும், பொது அமை திக்கும் குந்தகம் விளை விக்கும் வகையில் செயல் பட்டு வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நரேந்திரன்நாயர் உத்தரவின் பேரில் போலீசார் மணி கண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

கீரைத்துரை மேல தோப்பு 3-வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் சரவணன் என்ற கோபி சரவணன். கொலை வழக்கில் சம்பந்தப் பட்ட இவர் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து நரேந்திரன் நாயர் உத்தர வின்பேரில் போலீசார் சரவணனை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

மதுரையில் ஒரே நாளில் 3 வாலிபர்களை போலீசார் அதிரடியாக குண்டர் சட்டத் தில் கைது செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com