search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடும்பம்"

    • முன்னாள் மாணவர்கள் தங்கள் மனைவி, பிள்ளைகளுடன் கலந்து கொண்டு பள்ளி நண்பர்களுடன் கலந்துரையாடினர்.
    • தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களின் பெருமைகள் குறித்து பேசினர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே நல்லூர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியில் 1989-ம்ஆண்டு படித்த முன்னாள் மாணவ ர்களின் மறு சந்திப்பு நிகழ்ச்சி ஆலங்குளம்-துத்திகுளம் சாலையிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    50 முன்னாள் மாணவர்கள்

    நிகழ்ச்சிக்கு டெல்லி ஐ.ஐ.டி. கணிதவியல் துறை பேராசிரியர் டாக்டர் தர்மராஜ் தலைமை தாங்கி னார். பேராசிரியர் லட்சுமண பாண்டியன், கோவை சித்த மருத்துவர் சண்முக பாண்டி யன், ஆசிரியர் சாமுவேல், விவசாயி மகிழம்பூ, சென்னை மாநகரா ட்சி நடுநிலைப்பள்ளி தலை மை ஆசிரியை கலா சாந்தகு மாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாண வர் ஜேம்ஸ் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் மனைவி, பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் உற்சாகமாக கலந்து கொண்டு தங்கள் பள்ளி நண்பர்களுடன் பழைய நினைவுகளையும், தற்போது பணியாற்றும் பணிகள் குறித்தும் பகிர்ந்து கலந்துரை யாடினர். மேலும் தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரிய ர்களின் பெருமைகள் குறித்து பேசினர்.

    நிகழ்ச்சி ஒருங்கிணை ப்பாளர்களாக தர்மராஜ், கலா சாந்தகுமாரி, மகேஷ், நாதன், ஜேம்ஸ், நமச்சிவாயம், லட்சுமண பாண்டியன் ஆகியோர் செயல்பட்டனர்.

    • உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி.
    • பருவநிலையை சமன்படுத்த மரங்களை நடுவதே சிறந்த தீர்வாகும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் பிரதான் பாபு தலைமை தாங்கினார்.

    பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

    நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் நகராட்சி பகுதியை சேர்ந்த 500 குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி பேசுகையில்:-

    பிளாஸ்டிக் கழிவுகளாலும், தொழிற்சாலை கழிவுகளாலும், காடுகள் அழிப்பினாலும் பூமியில் மண், நீர், காற்று பாதிக்கப்படுகிறது.

    இதனால் பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.

    எனவே, பருவநிலையை சமன்படுத்த மரங்களை நடுவதே சிறந்த தீர்வாகும் என்றார்.

    இதில் நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் கார்த்தி மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மீனவ குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • முடிவில் மன்டல துணை தாசில்தார் சதீஷ் நன்றி கூறினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, காலமநல்லூர் ஊராட்சி சின்னமேடு, மருதம்பள்ளம் ஊராட்சி சின்னங்குடி ஆகிய மீனவ கிராமம் பகுதிகளில் மீனவ குடும்பங்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்கினார். செம்பனார்கோவில் ஒன்றிய குழுதலைவர் நந்தினி ஸ்ரீதர், துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், தாசில்தார் புனிதா, செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட கலெக்டர் இரா.லலிதா மற்றும் பூம்புகார் எம்.எல்.ஏ.வும், மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயலா ளருமான நிவேதா எம்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சின்னமேடு மீனவ கிராம மக்கள் 149 குடும்பங்களுக்கும், சின்னங்குடி மீனவ கிராம மக்கள் 32 குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி பேசினர்.

    நிகழ்ச்சிகளில் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜி.என்.ரவி, தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், செம்பை மத்திய ஒன்றிய திமுக செயலாளர் அமுர்த.விஜயகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, சாந்தி, மருதம்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி மதியழகன் மற்றும் சின்னமேடு மீனவ கிராம பஞ்சாயத்தார் மதியழகன், கனக்குபிள்ளை, குழந்தைவேல், சின்னங்குடி மீனவ பஞ்சாயத்தார்கள், திமுக பிரதிநிதிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மன்டல துணை தாசில்தார் சதீஷ் நன்றி கூறினார்.

    • நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் கொண்டாட்டம்
    • குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் குடும்பத்தோடு இன்று பொங்கலிட்டு மகிழ்ந்தார். அவர் தமி ழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்திருந்தார். அவருடன் போலீஸ் அதிகாரிகள் குடும்பத்தினரும் பொங்க லிட்டு மகிழ்ந்தனர். பொங்கல் பொங்கி வரும் வேளையில் பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டு உற்சாகமடைந்தனர்.

    இதைத் தொடர்ந்து போலீஸ் துறையில் பணிபுரியும் காவலர்கள் குடும்பத்தினருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார். இதில் குழந்தைகள் ஏராளமானோர் ஆர்வமாக வந்து விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

    • புதிய வாழ்க்கையை தொடங்கும்போது, பல மாற்றங்களுக்கு தயாராக இருக்க வேண்டும்.
    • இளம் தம்பதியினருக்கு அத்தியாவசியமான நிதிசார் நடவடிக்கைகளை இங்கே பார்க்கலாம்.

    'திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்' என்பதில் ஆழமான அர்த்தம் அடங்கியுள்ளது. வெவ்வேறு வாழ்க்கைச் சூழ்நிலைகளில் வளர்ந்த இருவர், ஒன்றாக இணைந்து புதிய வாழ்க்கையை தொடங்கும்போது, பல மாற்றங்களுக்கு தயாராக இருக்க வேண்டும். அவற்றில் முக்கியமானது நிதி சம்பந்தமான நடவடிக்கைகள். பணம் செலவழிப்பதில் வெவ்வேறு வகையான பழக்கவழக்கங்களை கொண்ட இளம் தம்பதியினருக்கு அத்தியாவசியமான நிதிசார் நடவடிக்கைகளை இங்கே பார்க்கலாம்.

    சேமிப்பு : எதிர்காலத்திற்கான முதலீடாக உள்ள பாலிசிகள், வீடு-மனை வாங்குதல் மற்றும் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய இருவரும் ஒன்றாக இணைந்து திட்டமிட வேண்டும். பணி ஓய்வு காலத்துக்கான சேமிப்பு மற்றும் இதர முதலீட்டு வாய்ப்புகளை இருவரும் சேர்ந்து திட்டமிட்டு, சேமிப்புகளை இணைந்தோ அல்லது தனியாகவோ மேற்கொள்ளலாம். திருமணத்திற்கு பின்னர் கணவன் அல்லது மனைவிக்கு அவர்களது குடும்ப சொத்துக்களை நிர்வகிக்க வேண்டிய சூழல் ஏற்படும்போது இருவரும் ஒற்றுமையாக விவாதித்து செயல்படுதல் அவசியம்.

    பட்ஜெட் : வங்கி தவணைகள், வீட்டு செலவுகள், இதர செலவுகள், எரிபொருள், ஷாப்பிங் செலவு, பெற்றோருக்கு தரும் மாதாந்திர பராமரிப்பு தொகை உள்ளிட்ட பலவகை செலவு விபரங்களைத் தெளிவாக கணக்கிட்டு, மாதாந்திர மற்றும் வருடாந்திர பட்ஜெட் தயார் செய்து கொள்வது நல்லது. தம்பதிகள் அவர்களது வருமான வரி சம்பந்தமான கணக்குகளையும் இணைத்துக்கொள்வது பாதுகாப்பானது.

    ஒருங்கிணைப்பு : திருமணத்துக்கு முன்னர் தனிநபராக மேற்கொண்ட நிதி முதலீடுகளை, மணமான பின்னர் ஒருங்கிணைப்பது அவசியம். ஏனென்றால், அவற்றால் நன்மை ஏற்படும் நிலையில், பிரச்சினை ஏதும் இருக்காது. அதற்கு மாறாக முதலீடு பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில், தக்க ஆலோசனைக்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தம்பதியருக்கிடையே மன உளைச்சல் உருவாகக்கூடும். குறிப்பாக, கணவன் அல்லது மனைவிக்கு நிலுவையில் இருந்த முந்தைய கடன் தவணை காரணமாக குடும்பத்தில் நிதிப் பற்றாக்குறை உருவாகாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    எதிர்காலம் : குழந்தைப்பேறு, தொழில் முதலீடு, புதிய கடனுக்கான அவசியம், தனிநபர் காப்பீடு, விபத்து காப்பீடு, பணியிழப்பு போன்ற விஷயங்களில் தம்பதிகள் ஒருமித்த கருத்து கொண்டு, தெளிவாக திட்டமிட வேண்டும். நான்கு மாத வருமானத்தை, எதிர்கால அவசர செலவு நிதியாக 'லிக்விட்டி' முதலீடாக வைத்திருப்பது பாதுகாப்பானது.

    நிதியுதவி : தம்பதியர் கலப்பு மணம் செய்து கொண்டவர்களாக இருந்தால், அவர்களுக்கு அரசின் நிதியுதவி கிடைக்கும். மணமான இரண்டு ஆண்டுகளுக்குள் திருமண பதிவு சான்றிதழின் அடிப்படையில் அரசு திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

    தீர்மானம் : பழைய நண்பர்கள், மணமாபுதுமணத் தம்பதிகளுக்கான நிதி மேலாண்மைன பின்னர் கிடைத்த புது நண்பர்கள் ஆகியோர்களுடன் வார இறுதி விடுமுறை நாட்களில் செலவு செய்வது, கடனாக பணம் தருவது, இருவரது குடும்ப அங்கத்தினர்களுக்கு அவசர கடன் வழங்குவது, பண உதவி செய்வது போன்ற விஷயங்களில் இருவரின் ஒருமித்த முடிவே நல்லது.

    • குடும்பத்தினருடன் வெளி இடங்களுக்கு செல்வது இல்லற வாழ்க்கையை இனிமையாக்கும்.
    • குடும்ப சுற்றுலா மூலம் பல நன்மைகளை அனுபவிக்கலாம்.

    பெற்றோர்கள் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. அன்றாடம் சில நிமிடங்களை கூட குழந்தைகளுடன் செலவிடாமல் தங்கள் வேலைகளில் மூழ்கி கிடக்கும் சுபாவம் அதிகரித்து வருவதுதான் அதற்கு காரணம்.

    அப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் இருப்பவர்கள் விடுமுறை நாட்களில் அவசியம் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டாக வேண்டும். குழந்தைகளிடம் மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுடனும் மனம் விட்டு பேச வேண்டும். அதற்கு குடும்ப சுற்றுலா உறுதுணையாக இருக்கும்.

    அதற்காக வாரந்தோறும் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. மாதம் ஒரு முறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ கூட பயண திட்டத்தை வகுக்கலாம். தொலைதூர இடங்களுக்குத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.

    அருகில் உள்ள இடங்களுக்கு சென்று அங்கு குடும்பத்தினருடன் சில மணி நேரங்களை செலவிட்டாலே போதுமானது. குடும்பத்தினருடன் வெளி இடங்களுக்கு செல்லும் வழக்கத்தை பின் தொடர்ந்து வருவது இல்லற வாழ்க்கையை இனிமையாக்கும். குடும்ப சுற்றுலா மூலம் மேலும் சில நன்மைகளை அனுபவிக்கலாம்.

    குடும்பத்துடன் பிணைப்பை ஏற்படுத்தும்

    குடும்பத்தினருடன் நாம் எந்த அளவுக்கு இணக்கமாக இருக்கிறோம் என்பதை விடுமுறைகள் உணர வைக்கும். மற்ற நாட்களில் அவசரமாக வெளியே செல்லும்போது குடும்பத்தினருடன் பேசுவதற்கு போதிய நேரம் கிடைக்காமல் போகலாம். அந்த குறையை விடுமுறை நாட்களில் போக்கிவிடலாம். வீட்டிற்கு அருகில் உள்ள சுற்றுலா தலத்திற்கோ, கோவிலுக்கோ செல்லலாம். அங்கு குழுவாக அமர்ந்து மனம் விட்டு பேசலாம். வீட்டில் விடுமுறை நாளை செலவிட நேரிட்டால் குடும்பத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றை வாரம்தோறும் பகிரும் வழக்கத்தை கடைப்பிடிக்கலாம். அது கடந்த கால நினைவுகளை மீட்டெடுக்க வழிவகுக்கும். குடும்பத்தினருடனான பிணைப்பை அதிகப்படுத்தும்.

    மன அழுத்தத்தை குறைக்கும்

    பொதுவாக பணி நெருக்கடிதான் குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை குறைத்து விடுகிறது. பணியின்போது ஏற்படும் மன அழுத்தம் குடும்பத்தினருடன் கலகலப்பாக பேச முடியாத நிலைக்கு தள்ளிவிடுகிறது. குடும்பத்துடன் சுற்றுலா செல்வதன் மூலம் பணி சூழலில் இருந்தும், மன நெருக்கடியில் இருந்தும் விடுபட்டு விடலாம்.

    குழந்தைகளுடன் விளையாடுவது, அவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பது என நேரத்தை மகிழ்ச்சியாக கழிக்கலாம். மன நெருக்கடியில் இருக்கும் சமயத்தில் சுற்றுலா செல்வதற்கு திட்டமிடுவதன் மூலமே மன அழுத்தத்தில் இருந்து ஓரளவுக்கு விடுபட்டு விடலாம்.

    உற்சாகத்தை தூண்டும்

    குடும்பத்துடன் சுற்றுலா செல்லும்போது அங்குள்ள திறந்தவெளி பகுதியில் குழுவாக அமர்ந்து ஓய்வு நேரத்தை செலவிடலாம். அப்போது ஒவ்வொருவரும் தங்கள் அனுபவத்தை பகிர்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் வரவழைக்கும் சுவாரசியமான கதைகளை பகிர வேண்டும். தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவத்தை ஒவ்வொருவரும் நினைவு கூருவதற்கு அனுமதிக்க வேண்டும். அது ஒவ்வொருவரின் உணர்வுகளையும் புரிந்து கொள்வதற்கு உதவும்.

    • விவரங்களுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், நாகர்கோவில் என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    போர் மற்றும் போரை யொத்த நடவடிக்கைகளில் உயிரிழந்தோரைச் சார்ந்தோர் (மனைவி, பெற்றோர்) மற்றும் ஊன முற்ற படை வீரர்களுக்கு 23.9.2022 முதல் தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் கருணைத் தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

    அதாவது போர் மற்றும் போரையொத்த நடவடிக்கை களில் உயிரிழந்தோரைச் சார்ந்தோர்(மனைவி, பெற்றோர்) ரூ.1 லட்சத்தில் இருந்து (ஒருமுறை மட்டும்) ரூ.2 லட்சமாக உயர்த்த ப்பட்டு உள்ளது.

    போர் மற்றும் போரை யொத்த நடவடிக்கைகளில் ஊனமுற்ற முன்னாள் படை வீரர்கள் ரூ.50 ஆயிரத்தில் (ஒருமுறை மட்டும) இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்ப ட்டு உள்ளது.

    மேலும் விவரங்க ளுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், நாகர்கோவில் என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 24-ந்தேதி பள்ளி வளாகத்தில் மர்ம நபர் கொடுத்த திராவகம் கலந்த குளிர்பானம் குடித்தார்
    • கடந்த 17-ந்தேதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் மெதுகும்மல் ஊராட்சி, அதங்கோடு, அனந்த நகரை சேர்ந்தவர் 6 - ம் வகுப்பு பயின்று வந்த மாணவன் அஸ்வின். கடந்த 24-ந்தேதி அன்று மதியம் பள்ளி வளாகத்தில் மர்ம நபர் கொடுத்த குளிர்பானத்தை குடித்தார்.

    கடந்த 17-ந்தேதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதனால் பெரும் துயரத்தில் உள்ள மாணவன் அஸ்வின் வீட்டிற்கு கிள்ளியூர் சட்ட மன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. சென்று மாணவனின் தந்தை, தாய் மற்றும் உறவி னர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அப்போது குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • முத்துநகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்திளர்கள் வசித்து வருகின்றனர்.
    • பூங்கா அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.

    சீர்காழி:

    சீர்காழியில் முத்துநகர் உள்ளது.

    இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்திர்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் பூங்கா அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட வருடமாக வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பூங்கா அமைக்க வலியுறுத்தி சீர்காழி ஆர்.டி.ஓ அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, நகராட்சி ஆணையர் (பொ) செல்வபாலாஜி ஆகியோரை நேரில் சந்தித்து முத்துநகர் தலைவர் சி.அமுதராஜன், செயலாளர் முபாரக் அலி, பொருளாளர் சுரேஷ், 1வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நகர் நிர்வாகிகள் மனுக்கள் அளித்தனர்.

    • புரியாத விஷயங்களை துணையிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
    • துணையின் பெற்றோருக்கு எந்த இடத்திலும், மரியாதை கொடுக்கத் தவறக்கூடாது.

    ஆண்-பெண் இருவருக்குமே தனது வாழ்க்கைத் துணையின் பெற்றோருடன் இனிமையான உறவை ஏற்படுத்திக்கொள்வது முக்கியமானது. இதனால் கணவன்-மனைவி உறவில் ஆனந்தம் நிலைக்கும். அதற்கான சில ஆலோசனைகள் இங்கே…

    முதல் சந்திப்பை இனிமையாக்குங்கள்: யாராக இருந்தாலும், முதல் சந்திப்பு நல்ல முறையில் இருந்தால், நம் மீதான அபிப்ராயமும் சரியாக அமையும். துணையின் பெற்றோரை சந்திக்கும்போது, புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள். உங்கள் மீது ஈர்ப்பு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளுங்கள். உங்களை எளிமையாக அறிமுகப்படுத்திக் கொண்டு, இயல்பாக உரையாடுங்கள். அவர்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள முயலுங்கள். அவர்களின் குடும்பம், விருப்பு - வெறுப்பு, பழக்கவழக்கங்கள், பொழுதுபோக்குகள் போன்ற பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசுங்கள். இது இரண்டு தரப்பிலும், இறுக்கமான மனநிலையை மாற்றும்.

    உங்களது பெற்றோராக அணுகுங்கள்: வாழ்க்கைத் துணையின் பெற்றோரை மூன்றாம் நபராகப் பார்க்காமல், உங்களது பெற்றோர்போல் அணுகுவது முக்கியம். குறிப்பாக, துணையின் தாயை, உங்களது தாயைப் போல் நினைத்து பழக வேண்டும். உங்கள் தாயிடம் பேசுவது போல் இயல்பாகவும், நேர்மையான மற்றும் கண்ணியமான அணுகுமுறையுடனும் இருப்பது அவசியம். அவர்களின் இளமைப் பருவம், வாழ்க்கையின் இனிமையான சம்பவங்கள் போன்றவற்றை ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். மகிழ்ச்சியான தருணங்களை ஏற்படுத்த இத்தகைய உரையாடல்கள் உதவும். இதுபோன்று பேசுவதால், எதிர்பார்த்ததைவிட அதிக பிணைப்பை ஏற்படுத்த முடியும்.

    மதிப்பளியுங்கள்: வாழ்க்கைத் துணையின் பெற்றோருடன் இருக்கும் சமயங்களில், அவர்களின் குடும்ப வழக்கங்களை மதிக்க வேண்டும். அவர்களது கலாசாரம், பழக்கவழக்கங்கள் போன்றவற்றை தெரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்துகொள்ளுங்கள். அவை புதிதாக இருந்தாலும், அதைக் குறை கூறாமல் ஏற்றுக்கொள்வது அவசியம். புரியாத விஷயங்களை துணையிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இது அவர்கள் மீதான உங்கள் மரியாதையை வெளிப்படுத்தும். மேலும், அவர்களின் அன்பைப் பெறவும் வழிவகுக்கும். துணையின் பெற்றோருக்கு எந்த இடத்திலும், மரியாதை கொடுக்கத் தவறக்கூடாது. குறிப்பாகப் பிறர் முன்னிலையில் வாழ்க்கைத் துணையின் பெற்றோருக்குத் தகுந்த மரியாதை அளித்தால், அவர்களுக்கு உங்கள் மீதான அன்பும் அதிகரிக்கும்.

    அன்பை வெளிப்படுத்துங்கள்: தங்கள் மகன் அல்லது மகளை அவர்களின் வாழ்க்கைத்துணை அதிகம் நேசிக்க வேண்டும் என்றுதான் பெற்றோர்கள் விரும்புவார்கள். பிள்ளைகள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை அறிய பெற்றோர் விரும்புவது இயல்பு. எனவே, அவர்கள் முன்னிலையில், வாழ்க்கைத் துணையுடன் வாதிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான உறவுக்கு மனம் திறந்த பேச்சு, பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கை ஆகியவை அவசியம். தங்கள் பிள்ளைகளின் நலனில் வாழ்க்கைத்துணை அக்கறை செலுத்துவது பெற்றோருக்குப் புரிந்தால், கட்டாயம் உங்கள் மீதான மதிப்பும், அன்பும் அதிகரிக்கும்.

    • இருவருக்குமிடையேயான நம்பிக்கைத்தான் வாழ்க்கையை நிம்மதியாக்கும்.
    • மூன்றாம் நபரின் தலையீடு உருவாகுவதற்கும் இடம் கொடுத்துவிடக்கூடாது.

    திருமண பந்தத்தில் கணவரின் ஆதிக்கமே தலை தூக்கி நிற்கிறது. அப்படி ஆதிக்கம் செலுத்துவது தம்பதியர் இடையே அன்பை குறைத்துவிடும். மனைவிக்கு போன் செய்யும்போது இணைப்பு பிசியாக இருந்தால் வேறொருவருடன் பேசுவதாக சந்தேகிப்பது, சமூகவலைத்தளங்களில் வேறொருவருடன் அரட்டை அடிப்பதாக சந்தேகிப்பது, நடத்தையில் குறை கூறுவது போன்றவை குடும்பத்தின் நிம்மதியை கெடுத்து விடும்.

    எந்தவொரு சூழலிலும் மனைவி மீது கணவர் சந்தேகம் கொள்ளக்கூடாது. அந்த அளவிற்கு துணை மீது கணவர் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். இருவருக்குமிடையேயான நம்பிக்கைத்தான் வாழ்க்கையை நிம்மதியாக்கும்.

    கணவன்-மனைவி இருவருக்குள் சந்தேக எண்ணம் தலைதூக்கினால் உடனடியாக பேசி தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். இருவருக்கும் தனிப்பட்ட விருப்பங்கள், அபிலாஷைகள் இருக்கும். அவர்களின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு உரிய மதிப்பு கொடுக்க வேண்டும். ஒருவர்மீது ஒருவர் ஆணித்தரமான நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையை எந்தவொரு சூழலிலும் சிதைப்பதற்கு இடம் கொடுத்துவிடவும் கூடாது.

    குடும்ப நலன் குறித்து எந்தவொரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் இருவரும் கலந்து பேச வேண்டும். வெளி இடங்களுக்கு செல்வது, ஆடை அணி வது, விருப்பமான உணவு சாப்பிடுவது, செலவு செய்வது எதுவாக இருந்தாலும் கணவர் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. தன் விருப்பத்தின்படிதான் மனைவி செயல்பட வேண்டும் என்று பிடிவாதம் கொள்ளக்கூடாது.

    வீட்டில் கணவர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துபவராக இருந்தால் அந்த உறவில் நேசமும், பாசமும் குறைவாகத்தான் இருக்கும். அந்த சமயத்தில் மனைவி தன் உணர்வுகளை கணவர் புரிந்துகொள்ளும் படி பக்குவமாக பேச வேண்டியது அவசியம். அதனை கேட்கும் மனநிலையில் கணவர் இல்லாமல் இருந்தால் மன நல நிபுணரின் ஆலோசனையை நாடலாம்.

    கணவர் தொடர்ந்து சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்டாலோ, அதிகாரம் செலுத்தினாலோ, உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தினாலோ அதற்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அதேவேளையில் மூன்றாம் நபரின் தலையீடு உருவாகுவதற்கும் இடம் கொடுத்துவிடக்கூடாது.

    தம்பதியர் ஒருவரையொருவர் எந்த அளவுக்கு புரிந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் தாம்பத்ய பந்தம் வலுவாக இருக்கும். இருவருக்குமிடையே சந்தேக குணமோ, ஈகோ பிரச்சினையோ, சர்வாதிகார மனபாவமோ தோன்றுவதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. அது தாம்பத்ய வாழ்க்கையை சிதைத்துவிடும்.

    • கடன் தொல்லை மற்றும் உடல்நிலை பிரச்சினையால் தற்கொலை
    • அருமனை போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    அருமனை அருகே சிதறால் வெள்ளாங்கோடு வாழை விளாகம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை (வயது 47) கொத்தனார்.

    இவரது மனைவி ராஜே ஸ்வரி (45). இவர்களது மகள் நித்யா (26). ராஜேஸ்வரி கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் கிருஷ்ண பிள்ளை மனம் உடைந்து காணப்பட்டார். மகள் நித்யாவிற்கும் கடன்களை வாங்கி சிரமப்பட்டு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார்.

    ஆனால் நித்யாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக நித்யா கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கிருஷ்ணபிள்ளை, ராஜேஸ்வரி, நித்யா ஆகிய 3 பேரும் படுக்கை அறையில் விஷம் குடித்து பிணமாக கிடந்தனர். இதை பார்த்த கிருஷ்ண பிள்ளையின் தாயார் கதறி அழுதார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.

    பின்னர் அருமனை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    பிணமாக கிடந்த கிருஷ்ணபிள்ளை, ராஜே ஸ்வரி, நித்யா ஆகிய 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலைக்கு முன்னதாக மனைவி, மகளுக்கு கிருஷ்ணபிள்ளை இறுதி சடங்கை நிறை வேற்றியது தெரியவந்தது. மேலும் கிருஷ்ணபிள்ளை எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினார்கள்.

    அந்த கடிதத்தில் தனது மனைவியின் நகைகளை வீட்டின் அருகில் உள்ள ஒரு பெண்மணியின் பெயரில் அடகு வைத்துள்ளதாகவும், அந்த நகைகளை விற்று தங்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்றும் தங்களது உடலை எங்களுக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் எழுதியிருந்தனர்.

    இதற்கிடையே பிரேத பரிசோதனைக்கு பிறகு கிருஷ்ணபிள்ளை, ராஜே ஸ்வரி, நித்யாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படை க்கப்பட்டது. ஒரே இடத்தில் அவர்களது உடல்கள் தகனம் செய்யப்பட்டன.

    தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது கடன் தொல்லை மற்றும் அவரது மனைவி யின் உடல்நிலை பிரச்சினையால் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

    தற்கொலை செய்து கொண்ட கிருஷ்ணபிள்ளையின் மனைவி சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.

    இதனால் மாதத்திற்கு 4 முறை ஆஸ்பத்திரிக்கு சென்று வந்துள்ளனர்.

    தற்கொலைக்கு சில நாட்களுக்கு முன்பும் இவர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தனர். அப்போது அதிக பணம் செலவாகி உள்ளது. நகைகளை அடகு வைத்து பணத்தை செலவு செய்து வந்துள்ளார்.

    மகளும் கணவரை விட்டு பிரிந்து வந்த வருத்தம் கிருஷ்ணபிள்ளைக்கு இருந்து வந்தது. இதனால் 3 பேரும் தற்கொலை செய்ய முடிவு செய்து இந்த விபரீத முடிவை எடுத்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அருமனை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ×