search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போரில் உயிரிழந்த படை வீரர்"

    • விவரங்களுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், நாகர்கோவில் என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    போர் மற்றும் போரை யொத்த நடவடிக்கைகளில் உயிரிழந்தோரைச் சார்ந்தோர் (மனைவி, பெற்றோர்) மற்றும் ஊன முற்ற படை வீரர்களுக்கு 23.9.2022 முதல் தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் கருணைத் தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

    அதாவது போர் மற்றும் போரையொத்த நடவடிக்கை களில் உயிரிழந்தோரைச் சார்ந்தோர்(மனைவி, பெற்றோர்) ரூ.1 லட்சத்தில் இருந்து (ஒருமுறை மட்டும்) ரூ.2 லட்சமாக உயர்த்த ப்பட்டு உள்ளது.

    போர் மற்றும் போரை யொத்த நடவடிக்கைகளில் ஊனமுற்ற முன்னாள் படை வீரர்கள் ரூ.50 ஆயிரத்தில் (ஒருமுறை மட்டும) இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்ப ட்டு உள்ளது.

    மேலும் விவரங்க ளுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், நாகர்கோவில் என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×