search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜேஷ்குமார்"

    • கடந்த 24-ந்தேதி பள்ளி வளாகத்தில் மர்ம நபர் கொடுத்த திராவகம் கலந்த குளிர்பானம் குடித்தார்
    • கடந்த 17-ந்தேதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் மெதுகும்மல் ஊராட்சி, அதங்கோடு, அனந்த நகரை சேர்ந்தவர் 6 - ம் வகுப்பு பயின்று வந்த மாணவன் அஸ்வின். கடந்த 24-ந்தேதி அன்று மதியம் பள்ளி வளாகத்தில் மர்ம நபர் கொடுத்த குளிர்பானத்தை குடித்தார்.

    கடந்த 17-ந்தேதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதனால் பெரும் துயரத்தில் உள்ள மாணவன் அஸ்வின் வீட்டிற்கு கிள்ளியூர் சட்ட மன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. சென்று மாணவனின் தந்தை, தாய் மற்றும் உறவி னர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அப்போது குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    ×