search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீரை சமையல்"

    • முருங்கைக் கீரையில் பொரியல், கூட்டு செய்து இருப்பீங்க.
    • இன்று முருங்கைக் கீரையில் பக்கோடா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    கடலை மாவு - 200 கிராம்

    வெங்காயம் - 50 கிராம்

    முருங்கைக் கீரை - 2 கைப்பிடி அளவு

    நறுக்கிய பச்சை மிளகாய் - 2

    நெய் - ஒரு டீஸ்பூன்

    சோம்பு - ஒரு டீஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    முருங்கைக் கீரையை காம்பு இல்லாமல் இலையை மட்டும் ஆய்ந்து நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் உருக்கிய நெய்யுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக் கீரை, சோம்பு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    பின்பு சிறிது நீர் தெளித்து கையால் நன்றாக கலக்கிக் கொள்ளவும். மாவு உதிரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயக் கலவையை உதிரி உதிரியாகப் போட்டு, பொன்னிறமாக சிவந்து வரும்வரை பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான முருங்கைக் கீரை பக்கோடா ரெடி.

    • பசலைகீரை வாய்ப்புண்ணுக்கு மிக சிறந்த மருந்தாகும்.
    • பசலைக்கீரை ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

    தேவையான பொருட்கள் :

    இட்லி மாவு - 200 கிராம்

    பசலைக்கீரை - அரை கட்டு

    பச்சை மிளகாய் - 2

    பெரிய வெங்காயம் - 1

    தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், பசலைக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய பசலைக் கீரையைப் போட்டு வதக்கி எடுத்து அரைத்து மாவில் சேர்க்கவும்.

    அதே எண்ணெயில் பொடியாய் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அத்துடன் உப்பு சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சத்தான பசலைக்கீரை தோசை ரெடி.

    • பாலக்கீரையில் புரதச்சத்து நிறைந்துள்ளது.
    • ரத்த சோகை நோய் வராமல் தடுக்க உதவுகிறது.
    • பாலக்கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள் :

    பாலக் கீரை - 1 கட்டு

    வேகவைத்த துவரம் பருப்பு - 1 கப்

    சின்ன வெங்காயம் - 10

    தக்காளி - 1

    சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    புளி - 1 எலுமிச்சை அளவு

    பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்

    கொத்துமல்லித்தழை - சிறிது

    உப்பு - சுவைக்கு

    தாளிக்க

    கடுகு - 1 டீஸ்பூன்

    உளுந்து - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    வெந்தயம் - 1 டீஸ்பூன்

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை :

    கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை சிறிது நீரில் கரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சிறிது ஊற்றி கீரையை போட்டு அதனுடன் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

    நன்றாக கீரை வெந்ததும் அதை மத்தால் மசித்து கொள்ளவும்.

    மசித்த கீரையுடன் மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

    பின் அதில் புளி கரைசல், வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து ஐந்து நிமிடம் குறைந்த தீயில் மூடி வைத்து விடவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளித்து கீரை குழம்பில் கொட்டி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

    • தினமும் உணவில் கீரையை சேர்த்து கொள்வது நல்லது.
    • விருப்பமான எந்த கீரையையும் பயன்படுத்தலாம்.

    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 1 கப்

    பாசிப் பருப்பு - அரை கப்

    பெரிய வெங்காயம் - 1

    தக்காளி - 1

    வெந்தயக்கீரை - 1 கட்டு

    இஞ்சி - 1 துண்டு

    கறிவேப்பிலை - சிறிது

    நெய் - 1 தேக்கரண்டி

    பெருங்காயம் - அரை தேக்கரண்டி

    உப்பு-தேவைக்கு ஏற்ப

    தாளிக்க:

    மிளகு - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    பட்டை - துண்டு

    லவங்கம் - 2

    ஏலக்காய் - 1

    நெய் - 2 டேபிள் ஸ்பூன்

    எண்ணெய் - 3 டீஸ்பூன்.

    செய்முறை :

    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசி, பருப்பை ஒன்றாக போட்டு கழுவி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

    ஆறரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து ஊற வைத்த அரிசியில் சேர்த்து சிறு தீயில் நன்கு வேகவிடுங்கள். பாதியளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வேகவிடுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் வெந்தயக்கீரையை சேர்த்து வதக்கவும். (கீரை 5 நிமிடங்கள் வெந்தால் போதுமானது)

    அடுத்து அதில் சிறிது உப்பு, தக்காளி சேர்த்து வதக்கவும்.

    கீரை வெந்ததும் பொங்கலில் சேர்த்து நன்கு கிளறுங்கள்.

    கடைசியாக அதில் சிறிதளவு நெய் சேருங்கள்.

    இப்போது கமகம வெந்தயக்கீரை பொங்கல் தயார்.

    • கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
    • கீரையில் பல்வேறு சத்தான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் : 

    பாசுமதி அரிசி - ஒரு கப்,

    வெந்தயக்கீரை- ஒரு கப்,

    வெங்காயம் - 2,

    தக்காளி - 1,

    உருளைக்கிழங்கு - 2,

    பச்சை மிளகாய் - 3,

    பிரிஞ்சி இலை - 1,

    இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

    நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை: 

    வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து, நெய்யில் ஈரம் போக வறுத்துக் கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை தாளித்த பின்னர் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி-பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து வெந்தயக்-கீரை போட்டு லேசாக வதக்கிய பின்னர் உருளைக்கிழங்கைச் சேர்த்து மேலும் வதக்கி, உப்பு சேர்க்கவும்.

    அடுத்து அதில் அரிசியை சேர்த்துக் கலந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

    இப்போது சூப்பரான கீரை பிரியாணி ரெடி.

    இந்த பிரியாணி செய்ய எந்த கீரையையும் பயன்படுத்தலாம்.

    • கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
    • வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்:

    பாஸ்மதி ரைஸ் - 1/2 கிலோ,

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 4,

    தக்காளி - 4,

    பட்டாணி - ஒரு கைப்பிடி,

    வெந்தயக்கீரை - ஒரு கைப்பிடி

    தேங்காய் பால் - 1 கப்,

    நெய் - 1 டேபிள்ஸ்பூன்,

    சமையல் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க

    பட்டை - 2,

    கிராம்பு - 4,

    சோம்பு - 1/2 டீஸ்பூன்,

    ஏலக்காய் - 2,

    அண்ணாச்சி பூ - 1,

    மராத்தி மொக்கு - 4,

    பிரியாணி இலை - 3,

    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சூடேறியதும் அதில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

    வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் பட்டாணியையும் சேர்த்து வதக்க வேண்டும்.

    பச்சை பட்டாணியாக இருந்தால் புலாவ் செய்வதற்கு ஒரு மணிநேரம் முன்பு நன்கு கழுவி சுத்தம் செய்து சுடு தண்ணீரில் ஊற வைத்தால் போதுமானது. பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள வெந்தயக்கீரையை முழுதாக அப்படியே சேர்க்க வேண்டும்.

    கீரை வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து, லேசாக உப்பு போட்டு வதக்க வேண்டும்.

    இவைகள் அனைத்தும் நன்கு சுருள வதங்கி வந்ததும், பாஸ்மதி ரைஸ் சேர்த்து கிளறி விட வேண்டும்.

    பின்னர் தேங்காய் பால் சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு பங்கு அரிசிக்கு, இரண்டு பங்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். ஆனால் இதில் தேங்காய் பால் சேர்த்து உள்ளதால், ஒன்னே முக்கால் பங்கு தண்ணீர் சேர்த்தால் போதும். உப்பு சரி பார்த்து விட்டு குக்கரை மூடி வைத்து இரண்டே விசில் விட்டால் போதும், அற்புதமான வாசனையில், ஆரோக்கியமான வெந்தயக்கீரை பச்சை பட்டாணி புலாவ் ரெடி ஆகி இருக்கும்.

    இதற்கு காரசாரமான சைடிஷ் அல்லது துவையல் வைத்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

    • முருங்கை கீரையில் பொரியல் செய்வது வழக்கம்.
    • முருங்கை கீரையுடன் வாழைத்தண்டை சேர்த்து பொரியல் செய்தால் அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    முருங்கைக்கீரை - 1 கப்

    வாழைத்தண்டு - சிறிய துண்டு

    வெங்காயம் - 1

    தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்

    பச்சை மிளகாய் - 1

    சிகப்பு மிளகாய் - 1

    கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க

    எண்ணெய் - 2 ஸ்பூன்

    உப்பு - தேவைக்கு

    செய்முறை :

    * முருங்கைக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    * ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வாழைத்தண்டை நாரை எடுத்து விட்டு மெல்லி துண்டுகளாக நீளவாக்கில் வெட்டி மோரில் போட்டு வைக்கவும். இவ்வாறு மோர் கலந்த நீரில் வாழைத்தண்டு துண்டுகளை போட்டு வைப்பதால் நிறம் மாறாமல் இருக்கும்.

    * வாணலியை அடுப்பின் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், ப.மிளகாய் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் சற்று வதங்கியதும் வாழைத்தண்டு சேர்த்து ஒரு முறை கிளறி விடவும்.

    * வாழைத்தண்டு சற்று வெந்ததும் முருங்கைக்கீரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக வைக்கவும்.

    * இரண்டும் வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.

    * சுவையும் சத்தும் நிறைந்த முருங்கைக்கீரை வாழைத்தண்டு பொரியல் தயார்.

    * சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

    • முருங்கைக் கீரை ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.
    • சூப் பிடிக்காதவர்கள் இப்படி ரசம் போன்று செய்து அருந்தலாம்.

    தேவையான பொருட்கள் :

    முருங்கைக் கீரை (ஆய்ந்தது) - கால் கப்,

    எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,

    தக்காளி - ஒன்று,

    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,

    உப்பு - தேவைக்கேற்ப.

    அரைத்துக்கொள்ள:

    வெந்தயம், சீரகம் - தலா அரை டீஸ்பூன்,

    பச்சை மிளகாய் - ஒன்று,

    பூண்டு - 2 பல்,

    கறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன்,

    தனியா - ஒரு டீஸ்பூன்.

    தாளிக்க:

    கடுகு - ஒரு டீஸ்பூன்,

    எண்ணெய் - சிறிதளவு,

    காய்ந்த மிளகாய் - ஒன்று,

    கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு.

    செய்முறை:

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கீரையுடன் அரை கப் நீர் விட்டு வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.

    அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, சிறிதளவு நீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்த பின்னர் அரைத்த விழுது, நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    தக்காளி வதங்கியதும் முருங்கைக் கீரையை வேகவைத்த நீருடன் சேர்த்து கொதிக்கவிடவும் (தண்ணீர் அளவு போதவில்லை என்றால், சேர்த்துக்கொள்ளலாம்).

    இறக்கும்போது எலுமிச்சைச் சாறு பிழிந்து இறக்கவும்.

    சூப்பரான முருங்கைக் கீரை ரசம் ரெடி.

    • வெறும் பாலக்கீரை செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு பிடிக்காது.
    • கீரையில் முட்டை சேர்த்து செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்:

    பாலக்கீரை - 2 கப்

    முட்டை -3

    பெரிய வெங்காயம் - 1

    தக்காளி - 1

    கறிவேப்பில்லை - 1 கொத்து

    பச்சைமிளகாய் - 1

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1/2 - 3/4 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 2 தேக்கரண்டி

    கடுகு - தாளிக்க

    செய்முறை :

    பாலக்கீரையை நீரில் சுத்தமாக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் .

    வெங்காயம் , தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய் , கறிவேப்பில்லை, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியவுடன் நறுக்கிய பாலக்கீரை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை மிதமான தீயில் வதக்கவும்.

    கீரை வதங்கியவுடன் கலக்கி வைத்துள்ள முட்டை சேர்த்து அதனுடன் மிளகாய் தூள் மற்றும் முட்டைக்குத் தேவையான உப்பு சேர்த்து வறுக்கவும்.(உப்பு சேர்க்கும் பொழுது கவனம் தேவை ஏனெனில் ஏற்கனவே கீரைக்கு சேர்த்துள்ளோம் அதை நினைவில் கொள்ளவும்). முட்டை பச்சை வாசனை போய் வாணலியில் ஒட்டாமல் வரும் வரை வதக்கினால் பாலக் முட்டை புர்ஜி தயார் .

    சுவையான பாலக் முட்டை புர்ஜி தயார் !!!!

    • இதர கீரைகளைவிட இதில் அதிகளவு புரதச்சத்தும், மற்ற சத்துகளும் அடங்கியுள்ளன.
    • முருங்கைக் கீரையில் மற்ற தாவர உணவுகளில் இருப்பதைவிட 25 மடங்கு இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

    தேவையான பொருட்கள் :

    முருங்கைக்கீரை - ஒரு கப்,

    பாசிப்பருப்பு - 5 டீஸ்பூன்,

    சீரகம் - அரை டீஸ்பூன்,

    நெய், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,

    வெங்காயம் -1,

    பூண்டு பல் - 4,

    தோல் சீவிய இஞ்சி - சிறிதளவு,

    பச்சை மிளகாய் - 2,

    உப்பு - தேவைக்கு.

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    குக்கரில் பாசிப்பருப்பு, கீரை, சீரகம், வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், இரண்டு கப் தண்ணீர் ஊற்றி மூடி 4 விசில் விட்டு இறக்கவும்.

    விசில் போனவுடன் குக்கரை திறந்து பருப்பு கலவையை நன்கு மசிக்கவும்.

    வாணலியில் நெய் விட்டு உருகியதும் பருப்பு, முருங்கைக்கீரை சாற்றை ஊற்றவும்.

    இதனுடன் ஒரு கப் தண்ணீர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி பருகலாம்.

    சத்தான முருங்கைக் கீரை சூப் ரெடி.

    • வாரத்தில் இரண்டு முறையேனும் கீரை சேர்த்துக் கொள்வது நல்லது.
    • இதனை சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    பாலக்கீரை - 2 கப்

    முட்டை -2-3

    பெரிய வெங்காயம் - 1

    தக்காளி - 1

    கறிவேப்பில்லை - 1 கொத்து

    பச்சைமிளகாய் - 1

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1/2 - 3/4 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 2 தேக்கரண்டி

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாலக்கீரையை நீரில் சுத்தமாக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பில்லை சேர்த்து தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியவுடன் நறுக்கிய பாலக்கீரை, மஞ்சள் தூள், கீரைக்குத் தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை மிதமான தீயில் வதக்கவும்.

    கீரை 5 நிமிடங்கள் வதங்கினால் போதுமானது. கீரை வதங்கியவுடன் கலக்கி வைத்துள்ள முட்டை சேர்த்து அதனுடன் மிளகாய் தூள் மற்றும் முட்டைக்குத் தேவையான உப்பு சேர்த்து வறுக்கவும்.

    முட்டை பச்சை வாசனை போய் வாணலியில் ஒட்டாமல் உதிரியாக வரும் வரை வதக்கினால் பாலக் முட்டை புர்ஜி தயார்.

    • பாலக்கீரையை தினமும் சாப்பிட்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
    • இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க பாலக்கீரை உதவுகிறது.

    தேவையான பொருட்கள்

    புழுங்கல் அரிசி, பச்சரிசி - தலா ஒரு கப்

    உளுத்தம்பருப்பு - கால் கப்

    பாலக் கீரை - ஒரு கப்

    பச்சை மிளகாய் (விழுதாக அரைக்கவும்) - 3

    சீரகம் - ஒரு டீஸ்பூன்,

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    முதலில் இரண்டு வகை அரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தனித்தனியாக ஊற வைத்து, தனித்தனியாக அரைத்து, ஒன்றாக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.

    பாலக்கீரையை ஆய்ந்து, சுடு தண்ணீரில் 5 நிமிடம் வேக வைத்து அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த கீரை, சீரகம், பச்சை மிளகாய் எல்லாவற்றையும், அரைத்த மாவுடன் சேர்க்கவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தேய்த்து, மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுத்தால் சூப்பரான சத்தான பாலக்கீரை தோசை தயார்.

    ஊறுகாயுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்!

    ×