search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    இரும்புச்சத்து நிறைந்த பாலக்கீரையில் சாம்பார் செய்யலாமா?
    X

    இரும்புச்சத்து நிறைந்த பாலக்கீரையில் சாம்பார் செய்யலாமா?

    • பாலக்கீரையில் புரதச்சத்து நிறைந்துள்ளது.
    • ரத்த சோகை நோய் வராமல் தடுக்க உதவுகிறது.
    • பாலக்கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள் :

    பாலக் கீரை - 1 கட்டு

    வேகவைத்த துவரம் பருப்பு - 1 கப்

    சின்ன வெங்காயம் - 10

    தக்காளி - 1

    சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    புளி - 1 எலுமிச்சை அளவு

    பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்

    கொத்துமல்லித்தழை - சிறிது

    உப்பு - சுவைக்கு

    தாளிக்க

    கடுகு - 1 டீஸ்பூன்

    உளுந்து - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    வெந்தயம் - 1 டீஸ்பூன்

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை :

    கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை சிறிது நீரில் கரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சிறிது ஊற்றி கீரையை போட்டு அதனுடன் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

    நன்றாக கீரை வெந்ததும் அதை மத்தால் மசித்து கொள்ளவும்.

    மசித்த கீரையுடன் மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

    பின் அதில் புளி கரைசல், வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து ஐந்து நிமிடம் குறைந்த தீயில் மூடி வைத்து விடவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளித்து கீரை குழம்பில் கொட்டி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

    Next Story
    ×