search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்பந்து"

    • கால்பந்து அகாடமியை தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
    • கல்வி பள்ளியின் விளையாட்டு ஆலோசகர் விக்னேஷ் நன்றி கூறினார்.

    சோழவந்தான்

    தமிழக அளவில் முதன்முறையாக இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பைசுங் பூட்டியா கால்பந்து பள்ளியுடன் இணைந்து கல்வி சர்வதேச பள்ளி கால்பந்து அகாடமியை தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் திட்டுள்ளது. சோழவந்தான் கல்வி சர்வதேச பள்ளி வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். விளையாட்டுத் துறை இயக்குநர் சங்கிலிகாளை முன்னிலை வகித்தார். விளையாட்டு மேனேஜர் விவீதா வரவேற்றார். லதா விழாவை தொகுத்து வழங்கினார். பைசுங் பூட்டியா கால்பந்து பயிற்சிப் பள்ளியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராகேஷ் ராதாகிருஷ்ணன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மாணவர்களுக்கு கால்பந்து துறையின் வளர்ச்சி மற்றும் நுணுக்கங்கள் குறித்து விளக்கினார்.

    அவர் கூறுகையில், மதுரையில் உள்ள இளம் கால்பந்து ஆர்வலர்கள் கால்பந்தில் திறமைகளை கற்றுக் கொள்வதற்கும், வளர்ப்பதற்கும் ஒரு வாய்ப்பாக இந்த அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிகளின் மூலம் மாணவர்கள் மாவட்ட மற்றும் தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் திறம்பட செயலாற்றி பரிசுகள் பெற முடியும் என்றார். கல்வி பள்ளியின் விளையாட்டு ஆலோசகர் விக்னேஷ் நன்றி கூறினார்.

    • வழக்கமாக சேலை அணிவது சவுகரியமாக இருக்காது என்பது பலரின் எண்ணம்.
    • சேலை அணிந்த படி பெண்கள் பந்தை அடித்து உதைக்கும் காட்சிகளும், கோல் அடிப்பதும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    ஆண்களுக்கு பெண்கள் இளைத்தவர்கள் இல்லை என்று அனைத்து துறைகளிலும் பெண்கள் போட்டியிட்டு அசத்தி வருகிறார்கள்.

    இப்போது பெண்கள் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதுபோல மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் கால்பந்து போட்டி நடந்துள்ளது.

    இதில் விசேஷம் என்னவென்றால் போட்டியில் பங்கேற்ற பெண்கள் அனைவருமே சேலையில் விளையாடியதுதான்.

    வழக்கமாக சேலை அணிவது சவுகரியமாக இருக்காது என்பது பலரின் எண்ணம். அந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கும் வண்ணம் குவாலியரில் நடந்த கால்பந்து போட்டியில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் சேலை அணிந்து கால்பந்து விளையாடினர்.

    குவாலியரை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று பள்ளி, கல்லூரி ஆசிரியைகள் மற்றும் சுய உதவி குழு பெண்களை இணைத்து கடந்த ஆண்டு கால்பந்து போட்டி நடத்தியது.

    அப்போது 4 அணிகள் கலந்து கொண்டனர். 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் போட்டிகள் நடைபெற்றது. இதில் 8 அணிகள் பங்கேற்றனர். அனைத்து அணிகளிலும் சுமார் 20 முதல் 72 வயதான பெண்கள் கலந்து கொண்டனர்.

    அனைவருமே சேலை அணிந்தே கலந்து கொண்டனர். இந்த உடையில் எந்த அசவுகரியமும் இல்லை என கால்பந்து விளையாடிய பெண்கள் கூறினர்.

    சேலை அணிந்த படி அவர்கள் பந்தை அடித்து உதைக்கும் காட்சிகளும், கோல் அடிப்பதும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இதுபற்றி போட்டியில் பங்கேற்ற பெண்கள் கூறும்போது, சேலை நமது பாரம்பரிய உடை. அதனை அணிவதால் எந்த அசவுகரியமும் இல்லை. இதனை அணிந்து கொண்டு கால்பந்து கூட விளையாடலாம் என்பதை அனைவருக்கும் உணர்த்தவே இந்த போட்டியில் பங்கேற்றோம். அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியில் இன்னும் அதிக அணிகள் பங்கேற்கும் என்று நம்புகிறோம் என்றனர்.

    • எச்எப்சி நண்பர்கள் குழு நடத்தும் ஐந்து வீரர்கள் பங்கு கொள்ளும் ஒரு நாள் கால்பந்து போட்டி நடைபெற்றது
    • பல்வேறு பகுதிகளில் இருந்து13 போட்டியாளர்கள் கொண்ட குழுவினர் பங்கு கொண்டனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய நாலூர் ஊராட்சி இந்துஜா நகரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து எச்எப்சி நண்பர்கள் குழு நடத்தும் ஐந்து வீரர்கள் பங்கு கொள்ளும் ஒரு நாள் கால்பந்து போட்டி நடைபெற்றது.

    இப்போட்டியினை எச்எப்சி குழுவின் நண்பர்கள் தலைமை வகித்து நடத்தினர். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து13 போட்டியாளர்கள் கொண்ட குழுவினர் பங்கு கொண்டனர். ஆட்டத்தின் முடிவில் டொகோமோ குழுவினர் வெற்றி பெற்று வின்னர் ஆகினர். ரணராக மேலூர் செலக்ட் குழுவினர் இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றனர்.

    இவர்களுக்கு பரிசு தொகையாக முதல் பரிசு அரை சவரன் தங்கநாணயம். இரண்டாம்பரிசு கால் சவரன் தங்க நாணயமும் மற்றும் கோப்பைகளையும் பிஎஸ்பி கட்சியின் பொறுப்பாளர்களான பொன்னேரி சட்டமன்ற தொகுதி தலைவர் நாலூர் மா. ஏசுதாஸ், தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஜோதிராமலிங்கம், தொகுதி அமைப்பாளர் அமரன். சுரேஷ், தொகுதி இளைஞரணி அமைப்பாளர் சத்யா, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் காமேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வழங்கினார்.

    • கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரி கால்பந்து அணி மாநில போட்டிக்கு தகுதி பெற்றது.
    • 24, 25 ஆகிய தேதிகளில் திருச்செங்கோட்டில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    கீழக்கரை

    மதுரை மண்டல பாலிடெக்னிக் கல்லூரிகள் அளவிலான கால்பந்து போட்டி விருதுநகரில் நடந்தது. இதில் மண்டல அளவில் 10 கல்லூரிகளை சேர்ந்த அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். இறுதி ஆட்டத்தில் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் அணியும், அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி அணியும் மோதின. இதில் பெனால்டி கிக்கில் 3-2 என்ற கோல் கணக்கில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி அணி முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் திருச்செங்கோட்டில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், உடற்கல்வி இயக்குநர் மருதாசல மூர்த்தி மற்றும் பயிற்றுநரை, கல்லூரி சேர்மன் யூசுப் சாகிப், இயக்குநர் ஹமீது இபுராஹிம், முதல்வர் அலாவுதீன், துணை முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • போர்ச்சுகல் பயிற்சியாளராக இருந்த பெர்னாண்டோ சான்டோஸ் ராஜினாமா செய்தார்.
    • புதிய பயிற்சியாளர் ராபர்ட்டோ மார்ட்டினஸ் பெல்ஜியம் அணியின் பயிற்சியாளராக இருந்தார்.

    கத்தாரில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணி, காலிறுதியில் எதிர்பாராதவிதமாக மொராக்கோவிடம் தோல்வியடைந்து வெளியேறியது. இதையடுத்து போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளராக இருந்த பெர்னாண்டோ சான்டோஸ், தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில் ஸ்பெயினை சேர்ந்த ராபர்ட்டோ மார்ட்டினஸ் (வயது 49), போர்ச்சுகல் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்பு பெல்ஜியம் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்தார். கத்தார் உலகக்கோப்பை போட்டியில் குரூப் சுற்றில் பெல்ஜியம் அணி வெளியேறியதைத் தொடர்ந்து, மார்ட்டினஸ் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    போர்ச்சுகல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து பேசிய ராபர்ட்டோ, "உலகின் மிகவும் திறமையான அணிகளில் ஒன்றான போர்ச்சுகல் அணியில் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறினார்.

    • இளைஞர்‌ காங்கிரஸ் சார்பில் மாநில கால்பந்து போட்டி நடந்தது.
    • 4-க்கு 3 என்ற கோல் கணக்கில் திருச்சி யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை பயணத்தை முன்னிட்டு மாநில அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.

    இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் செங்கை.எஸ்.விக்னேசுவரன் ஏற்பாட்டில் ராஜா பள்ளி மைதானத்தில் இந்த போட்டி நடந்தது. இதில்பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 22 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

    திருச்சி அணியும், சென்னை அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. பரபரப்பாக நடந்த இறுதி ஆட்டத்தில் பெனால்டி கிக்கில் 4-க்கு 3 என்ற கோல் கணக்கில் திருச்சி யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.

    இதன் பரிசளிப்பு விழாவில் கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர். செல்லக்குமார், ராமநாதபுரம் ராஜா நாகேந்திர சேதுபதி ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினர். மாநில ஆராய்ச்சி குழு தலைவர் மாணிக்கவாசகம், மாவட்ட பொறுப்பு குழு தலைவர் மலேசியா பாண்டியன், மாவட்ட பொறுப்பாளர்கள், நகர் மன்ற உறுப்பினர் ராஜாராம் பாண்டியன், ரமேஷ்பாபு, தெய்வேந்திரன், கோட்டை முத்து, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வேலுச்சாமி, சோ.பா. ரங்கநாதன், ஆனந்தகுமார், ஜோதி பாலன், துல்கிப், கிருஷ்ணராஜ், வட்டார தலைவர்கள் சேதுபாண்டியன், காருகுடி சேகர், செல்லச்சாமி, அன்வர், அல்அமின், ஒன்றிய கவுன்சிலர் திருமுருகன், கபிர், வாணி செய்யது இப்ராகிம் ஆகியோர் கலந்து கொண்டனர். நகர் தலைவர் கோபி நன்றி கூறினார்.

    முன்னதாக மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா படத்திற்கு டாக்டர். செல்லக்குமார் எம்.பி. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) 21.12.2022 முதல் 3.1.2023 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
    • பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டணமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் 'விளையாடு இந்தியா' திட்ட நிதி உதவியில் துவக்க நிலை கால்பந்து பயிற்சிக்கான 'விளையாடு இந்தியா மாவட்ட மையம்' கன் னியாகுமரி மாவட்டம் அறிஞர் அண்ணா விளை யாட்டரங்கத்தில் அமைக் கப்பட உள்ளது.

    இம்மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர் வீராங்கனைகள் சேர்க்கப் பட்டு அவர்களுக்கு தின சரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட, தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்குட்பட்ட கால்பந்து வீரர்/வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுகளா கவும், தற்போது கன்னியா குமரி மாவட்டத்தில் வசிப் பவராகவும் இருக்க வேண் டும்.

    சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவி லான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங் களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேசப் போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும். தேர்ந் தெடுக்கப்படும். பயிற்சி யாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டண மாக ரூ.18 ஆயிரம் வழங் கப்படும்.

    இது நிரந்தரப்பணி அல்ல. முற்றிலும் தற்கா லிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப் பணியோ கோர இயலாது. இதற்குரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) 21.12.2022 முதல் 3.1.2023 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். பிற வழிகளில் வரும் விண் ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நாகர்கோ வில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும்.

    உடற்தகுதி, விளை யாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகிய வற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தேர்வு தேதி மற்றும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

    இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • மாற்றுத் திறனாளி களுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி, சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
    • இதில், 1-0 என்ற கோல் கணக்கில், தேனி அணி வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது. 2-ம் இடம் பிடித்த சேலம் அணிக்கு வெள்ளி பதக்கமும், 3-ம் இடம் பிடித்த தஞ்சாவூர் அணிக்கு வெண்கல பதக்கமும் வழங்கப்பட்டது.

    சேலம்:

    உலக மாற்றுத்திற னாளிகள் தினத்தை முன்னிட்டு, செரிபரல் பால்சி ஸ்போர்ட்ஸ் அசோ

    சியேஷன் ஆப் தமிழ்நாடு சார்பில், மாற்றுத் திறனாளி களுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி, சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சேர்மன் உமாராணி தலைமை வகித்தார். தலைவர் பரணிதரன், செயலாளர் சித்தேஸ்வரன், பொருளாளர் காருண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், சேலம், தர்மபுரி, சென்னை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், மதுரை உள்பட 15 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடின. அணிக்கு 7 பேர் அடிப்படையில் லீக் சுற்று போட்டிகளாக நடத்தப்பட்டது. இறுதிப் போட்டியில் சேலம்-தேனி அணிகள் மோதின.

    இதில், 1-0 என்ற கோல் கணக்கில், தேனி அணி வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது. 2-ம் இடம் பிடித்த சேலம் அணிக்கு வெள்ளி பதக்கமும், 3-ம் இடம் பிடித்த தஞ்சாவூர் அணிக்கு வெண்கல பதக்கமும் வழங்கப்பட்டது.

    வெற்றி பெற்ற வீரர்களுக்கு அஸ்தம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமிப்பிரியா, பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    • பாடல்களுக்கும் கிடைக்காத சிறப்பு நம் தமிழர்கள் உருவாக்கிய இந்த பாடலுக்கு கிடைத்திருப்பது கத்தார் வாழ் தமிழர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
    • தீம் பாடல் மட்டுமில்லாமல் கத்தாரில் வசிக்கும் பல்வேறு நாட்டை சேர்ந்த ரசிகர்களும் தங்கள் சார்பாக தீம் பாடல்களை வெளியிட்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சம்சூதீன்சாதிக்பாஷா தலைமையில் சாம்ஜோசப் பாடலை எழுதி இசை அமைத்து உலக அளவில் நல் வரவேற்பை பெற்றுள்ளது. மத்திய கிழக்கு நாடான கத்தார் உலகளாவிய கால் பந்து போட்டியை மிக நேர்த்தியாகவும் அனைவரும் பிரமிக்கும் அளவிலும் நடத்திக்கொண்டு வருகிறது.

    உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் கத்தார் தோகாவை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.கத்தாரில் அனைத்து நாட்டின் மக்களும் வசித்துவரிக்கின்றனர், பெரும்பான்மையாக தமிழர்களும், மலையா ளிகளும் உள்ளனர். அவர்கள் கால்பந்து போட்டியை மிக விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

    கால்பந்து போட்டிக்கான பீபா அங்கீகரிக்கப்பட்ட தீம் பாடல் மட்டுமில்லாமல் கத்தாரில் வசிக்கும் பல்வேறு நாட்டை சேர்ந்த ரசிகர்களும் தங்கள் சார்பாக தீம் பாடல்களை வெளியிட்டனர்.

    கத்தார்-உலக கால் பந்து போட்டி க்காக கத்தார் தமிழர்கள் கலாச்சார பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குன் ஷாகிரான் என்ற ஆங்கில தீம் பாடலை கத்தார் அரசு ஆதரித்து இசைவெளிட்டு விழா நடைபெற்றது.

    அனைத்து நாட்டை சேர்ந்தவர்களும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. அனைத்து பாடல்களுக்கும் கிடைக்காத சிறப்பு நம் தமிழர்கள் உருவாக்கிய இந்த பாடலுக்கு கிடைத்திருப்பது கத்தார் வாழ் தமிழர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இந்தப்பாடலை தமிழ் மகன் அவார்ட்ஸ்-ன் நிறுவனர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த சாதிக் பாட்ஷா இயக்கி உள்ளார். சாம் ஜோசப் இசை அமைக்க, பாடகர்.ஆனந்த் அரவிந்தாக்சன் பாடலுக்கு உயிரோட்டம் கொடுத்துள்ளார்.

    தமிழர்கள் உருவாக்கிய குன் ஷாகிரான் பாடலை அங்கீகரிக்கும் விதமாக கத்தார் மீடியா கார்பரேஷன் கத்தார் நாட்டின் பெருமைக்குரிய தேசிய கத்தார் தொலைக்காட்சி மற்றும் பிரெஞ்சு, ஆங்கில, ஸ்பானிஷ் மற்றும் உருது மொழி வானொலிகளிலும் ஒளிபரப்பி வருவது தமிழர்களை பெருமை படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

    • பிபா விளையாட்டுக்காக விளையாட்டு சார்ந்த உடைகள் கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
    • திருப்பூரில் இருந்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு 75 சதவீத ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    திருப்பூர் : 

    கத்தார் நாட்டில் பிபா உலகக்கோப்பை- 2022 தொடர் கடந்த 20ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 32 அணிகள் 8 வெவ்வேறு பிரிவுகளில் பங்கேற்று விளையாடி வருகின்றன. வளைகுடா நாடுகளில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெறுவது இதுவே முதல்முறை.

    இதன்மூலம் கத்தார் நாட்டின் வர்த்தகம், சுற்றுலா, பொருளாதாரம் எனப் பல்வேறு விஷயங்கள் வளர்ச்சி அடையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இம்முறை இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

    இந்நிலையில், பிபா உலகக்கோப்பை போட்டிக்காக கத்தாருக்கு விளையாட்டு சார் உடைகளை ஏற்றுமதி செய்து திருப்பூர் உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும் வருமானம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் அது சார்ந்த சாயமிடுதல், பிரின்டிங்க், எம்ராய்டரி, நூல் மில்கள் உள்ளிட்ட உப தொழில்கள்,ஜாப் ஒர்க் நிறுவனங்களில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடி வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

    மேலும் தொழிலாளர் கள் சார்ந்து ஏராளமானோர் மறைமுக வேலை யினையும் பலர் பெற்று வருகின்றனர். திருப்பூரில் இருந்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு 75 சதவீத ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் சுமார் 35 ஆயிரம் கோடி அளவுக்கு அந்நிய செலாவணி ஈட்டித்தரும் நகராக திருப்பூர் உள்ளது.

    ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிலில் சர்வதேச அளவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ள திருப்பூரில் இருந்து பிபா விளையாட்டுக்காக விளையாட்டு சார்ந்த உடைகள் கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதற்காக திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள் கொச்சின் விமான நிலையம் வாயிலாக கத்தார் தலைநகர் தோஹாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

    திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்ட விளையாட்டு சார்ந்த உடைகள் சுமார் 17 சரக்கு தொகுப்புகள் கொச்சி விமான நிலையம் வாயிலாக கத்தாருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திருப்பூரை சேர்ந்த ஜவுளி நிறுவனங்கள் நல்ல வருமானம் ஈட்டியுள்ளதாகவும் தெரிகிறது.

    இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் வாயிலாக ஆர்டர்களை பெற்று ஏற்றுமதி வழி வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை கைப்பற்றுவதற்கு அரசும் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே திருப்பூர் ஜவுளித் துறையினரின் கோரிக்கையாக உள்ளது.

    • சென்னையின் அணி அக்டோபர் 10-ந் தேதி மோகன் பகானை எதிர்கொள்கிறது.
    • இந்த போட்டித் தொடரில் புதிதாக பிளே-ஆப் சுற்று அறிமுகப்படுத்தப்படுகிறது.

    கொச்சி:

    11 அணிகள் கலந்து கொள்ளும் 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கொச்சியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதி தொடங்குகிறது. 

    தொடக்க ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஈஸ்ட் பெங்கால் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 10-ந்தேதி மோகன் பகானை கொல்கத்தாவில் எதிர்கொள்கிறது.

    அதே சமயம் சென்னை அணிக்குரிய முதல் உள்ளூர் ஆட்டம் (பெங்களூரு அணிக்கு எதிராக) நேரு ஸ்டேடியத்தில் 14-ந்தேதி நடக்கிறது. 2 வருடங்களுக்கு பிறகு இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

    அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெறும் இந்த போட்டிக்கான அட்டவணையில் புதிதாக 'பிளே-ஆப்' சுற்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறும்.

    புள்ளி பட்டியலில் 3-வது முதல் 6-வது வரை இடம் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றில் விளையாடும். இவற்றில் இருந்து மேலும் இரு 2 அணிகள் அரைஇறுதிக்கு தேர்வாகும்.

    வாழப்பாடியில் ஐவர் அணி கால்பந்து போட்டி நடைபெற்றது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் என்.ஜி.ஆர்., 149 கபடி குழு மற்றும் அண்ணாமலை ஜூவல்லர்ஸ் சார்பில் ஐவர் அணி கால்பந்து போட்டி 2 நாட்கள் நடைபெற்றது.

    தொடக்க விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கலைஞர்புகழ் தலைமை வகித்து, போட்டியை தொடங்கி வைத்தார்.

    பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் எம்ஜிஆர் பழனிசாமி, சாய்பாபா அறக்கட்டளை தலைவர் ஜவஹர் ஆகியோர் வீரர்களை வரவேற்றனர். போட்டியில், சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 25 அணிகள் பங்கேற்றன.

    இதில் சேலம் அவரஞ்சிஅம்மா அணி முதல் பரிசும், 149 அணி 2-ம் பரிசும், வாழப்பாடி கருடன் 3-ம் பரிசும், வித்யா மெமோரியல் அணி 4-ம் பரிசும் பெற்றன.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோப்பைகள், ரொக்கப்பரிசு மற்றும் சிறந்த வீரர்களுக்கு பதக்கங்களை பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் எம்.கோபிநாத், ஆர்.குணாளன், கால்பந்து குழு நிர்வாகிகள் ராம், உதயகுமார், நித்தீஸ் ஆகியோர் வழங்கி பாராட்டினர்.

    ×