search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞர்‌ காங்கிரஸ்"

    • இளைஞர்‌ காங்கிரஸ் சார்பில் மாநில கால்பந்து போட்டி நடந்தது.
    • 4-க்கு 3 என்ற கோல் கணக்கில் திருச்சி யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை பயணத்தை முன்னிட்டு மாநில அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.

    இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் செங்கை.எஸ்.விக்னேசுவரன் ஏற்பாட்டில் ராஜா பள்ளி மைதானத்தில் இந்த போட்டி நடந்தது. இதில்பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 22 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

    திருச்சி அணியும், சென்னை அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. பரபரப்பாக நடந்த இறுதி ஆட்டத்தில் பெனால்டி கிக்கில் 4-க்கு 3 என்ற கோல் கணக்கில் திருச்சி யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.

    இதன் பரிசளிப்பு விழாவில் கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர். செல்லக்குமார், ராமநாதபுரம் ராஜா நாகேந்திர சேதுபதி ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினர். மாநில ஆராய்ச்சி குழு தலைவர் மாணிக்கவாசகம், மாவட்ட பொறுப்பு குழு தலைவர் மலேசியா பாண்டியன், மாவட்ட பொறுப்பாளர்கள், நகர் மன்ற உறுப்பினர் ராஜாராம் பாண்டியன், ரமேஷ்பாபு, தெய்வேந்திரன், கோட்டை முத்து, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வேலுச்சாமி, சோ.பா. ரங்கநாதன், ஆனந்தகுமார், ஜோதி பாலன், துல்கிப், கிருஷ்ணராஜ், வட்டார தலைவர்கள் சேதுபாண்டியன், காருகுடி சேகர், செல்லச்சாமி, அன்வர், அல்அமின், ஒன்றிய கவுன்சிலர் திருமுருகன், கபிர், வாணி செய்யது இப்ராகிம் ஆகியோர் கலந்து கொண்டனர். நகர் தலைவர் கோபி நன்றி கூறினார்.

    முன்னதாக மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா படத்திற்கு டாக்டர். செல்லக்குமார் எம்.பி. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    ×