search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்பந்து"

    • மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான கால்பந்து போட்டிகள் நேற்று நடைபெற்றது.
    • அதியமான் கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத் தொடங்கி வைத்து, வீரர், வீராங்கனையரை வாழ்த்தினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அதியமான் பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில், மாவட்ட கால்பந்து கழகம் சார்பில், மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான கால்பந்து போட்டிகள் நேற்று நடைபெற்றது.

    இந்த போட்டிகளை, அதியமான் கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத் தொடங்கி வைத்து, வீரர், வீராங்கனையரை வாழ்த்தினார்.

    மேலும் இதில், மாவட்ட கால் பந்து கழக தலைவர் சையத் அமீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிகளில், 8 முதல் 18 வயது வரையிலான 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு விளையாடினர்.

    • இன்டர்கான்டினென்டல் கோப்பை போட்டியை நடத்துவது பெருமைக்குரிய விஷயம் என நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
    • ஒடிசா அரசுக்கு, அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சவுபே நன்றி தெரிவித்தார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு மைதானத்தில் ஹீரோ இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது. நேற்று இரவு நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி லெபனானை வீழ்த்தியது. ஆட்டத்தின் சிறப்பான அம்சமாக கேப்டன் சுனில் சேத்ரியின் 87வது சர்வதேச கோல் மூலமாகவும், லாலியன்சுவாலா சாங்டேவின் ஸ்டிரைக் மூலமாகவும் லெபனானை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இன்டர்கான்டினென்டல் கோப்பையை வென்றது.

    இந்நிலையில், ஹீரோ இன்டர்கான்டினென்டல் கோப்பையை வென்ற, இந்திய ஆண்கள் கால்பந்து அணிக்கு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    "இந்த மதிப்புமிக்க இன்டர்கான்டினென்டல் கோப்பை போட்டியை நமது மாநிலம் நடத்துவது பெருமைக்குரிய விஷயம். கடுமையான போட்டியை எதிர்கொண்டு இந்தியா வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். ஒடிசாவில் இன்னும் பல கால்பந்து நிகழ்வுகளை ஒடிசா மற்றும் இந்தியாவில் நடத்தி இந்த விளையாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்." என்று நிறைவு விழாவின் போது பட்நாயக் கூறினார்.

    போட்டியை வெற்றிகரமாக நடத்திய ஒடிசா அரசுக்கு, அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சவுபே நன்றி தெரிவித்தார்.

    "இதை விட ஒரு சிறப்பான ஹீரோ இன்டர்கான்டினென்டல் கோப்பையை நாங்கள் சிறப்பாக நடத்தியிருக்க முடியாது. பங்கேற்கும் அணிகளுக்கு அனைத்து ஆதரவையும் விருந்தோம்பலையும் வழங்கியதற்காகவும், ஒரு அற்புதமான போட்டியை நடத்தியதற்காகவும் ஒடிசா அரசுக்கு நன்றி," என்று அவர் கூறினார்.

    • இரு அணிகளும் முதல் பாதி ஆட்டத்தில் கோல்கள் அடிக்கவில்லை.
    • 68வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி வீரர் ரோட்ரி அபாரமான கோல் அடித்தார்.

    இஸ்தான்புல்:

    ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎஃப்ஏ) சார்பில் ஆண்டுதோறும் கிளப் அணிகளுக்கிடையிலான சாம்பியன்ஸ் லீக் போட்டி நடத்தப்படுகிறது. ஐரோப்பிய சாம்பியன்ஷிப் மற்றும் ஃபிஃபா உலகக் கோப்பையைத் தொடர்ந்து இந்த சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக ஆதரவு உள்ளது.

    அவ்வகையில், இந்த ஆண்டின் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இஸ்தான்புல் நகரில் உள்ள அட்டாடர்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில், மான்செஸ்டர் சிட்டி, இன்டர் மிலன் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடின. இரு அணிகளுமே எதிரணியின் தடுப்பாட்டத்தை முறியடித்து கோல் அடிக்க முயன்றன. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் கோல்கள் அடிக்கப்படவில்லை. 

    இந்நிலையில், இரண்டாவது பாதி ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி முன்னேறியது. 68வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி வீரர் ரோட்ரி, எதிரணியின் தடுப்பாட்டத்தை முறியடித்து அபாரமான கோல் அடித்தார். இதன்மூலம் மான்செஸ்டர் சிட்டி 1-0 என முன்னிலை பெற்றது. அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. அதன்பின்னர் இன்டர் சிட்டி அணி பதிலடி கொடுக்க முயன்றும் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் மான்செஸ்டர் சிட்டி 1-0 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. அத்துடன் கிளப் தொடங்கிய 143 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ளது.

    • 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் சுமார் 25 அணிகளாக கலந்து கொண்டனர்.
    • முதலிடம் பிடித்த அணியினருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் கால்பந்து கழகம், சிட்டி யூனியன் வங்கி ஆகியவை இணைந்து நடத்திய மாநில அளவிலான எழுவர் கால்பந்தாட்ட போட்டி கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 3 நாட்களாக நடைபெற்றது. கும்பகோணம் மாநகர தி.மு.க. செயலாளர் சு.ப.தமிழழகன், துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் தஞ்சாவூர், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் சுமார் 25 அணிகளாக கலந்து கொண்டு விளையாடினர்.

    போட்டியின் நிறைவு நாளில் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பொறியாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கல்யாணசுந்தரம் எம்.பி., கும்பகோணம் மாநகர தி.மு.க. செயலாளர் சு.ப.தமிழழகன் ஆகியோர் கலந்து கொண்டு முதலிடம் பிடித்த சென்னை எண்ணூர் நடராஜ் மெமோரியல் கிளப் அணியினருக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பை, 2-ம் இடம் பிடித்த கும்பகோணம் முரட்டு சிங்கிள் புட்பால் கிளப் அணியினருக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் கோப்பை, 3-ம் இடம் பிடித்த தஞ்சாவூர் அத்லெடிக்ஸ் புல்ஸ் அணியினருக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பை, 4-ம் இடம் பிடித்த பாண்டிச்சேரி செலக்டேடு செவன்ஸ் அணியினருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வழங்கி வெற்றி பெற்றவர்களை பாராட்டினர்.

    விழாவில் ஓய்வு பெற்ற வருமான வரித்துறை ஊழியர் அசோக்குமார், தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பாபு, லியோன் சேவியர், சென்னை போக்குவரத்து உதவி ஆய்வாளர் மூர்த்தி, தீயணைப்புத்துறை இளங்கோவன், நகர மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர்கள் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன்,

    கண்ணன், பரமகுரு, தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், சங்கர் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பாலகுரு போட்டியை தொகுத்து வழங்கினார்.

    முடிவில் உதயகுமார் நன்றி கூறினார்.

    • கோடைகால கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.
    • இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

    கடலூர்:

    கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கோடைகால கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து 15-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

    இதற்கு வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமை தாங்கி பரிசுகளை வழங்குகிறார். நிகழ்ச்சியில் ஆய்வாளர் குருமூர்த்தி மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    • கால்பந்து அகாடமியை தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
    • கல்வி பள்ளியின் விளையாட்டு ஆலோசகர் விக்னேஷ் நன்றி கூறினார்.

    சோழவந்தான்

    தமிழக அளவில் முதன்முறையாக இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பைசுங் பூட்டியா கால்பந்து பள்ளியுடன் இணைந்து கல்வி சர்வதேச பள்ளி கால்பந்து அகாடமியை தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் திட்டுள்ளது. சோழவந்தான் கல்வி சர்வதேச பள்ளி வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். விளையாட்டுத் துறை இயக்குநர் சங்கிலிகாளை முன்னிலை வகித்தார். விளையாட்டு மேனேஜர் விவீதா வரவேற்றார். லதா விழாவை தொகுத்து வழங்கினார். பைசுங் பூட்டியா கால்பந்து பயிற்சிப் பள்ளியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராகேஷ் ராதாகிருஷ்ணன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மாணவர்களுக்கு கால்பந்து துறையின் வளர்ச்சி மற்றும் நுணுக்கங்கள் குறித்து விளக்கினார்.

    அவர் கூறுகையில், மதுரையில் உள்ள இளம் கால்பந்து ஆர்வலர்கள் கால்பந்தில் திறமைகளை கற்றுக் கொள்வதற்கும், வளர்ப்பதற்கும் ஒரு வாய்ப்பாக இந்த அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிகளின் மூலம் மாணவர்கள் மாவட்ட மற்றும் தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் திறம்பட செயலாற்றி பரிசுகள் பெற முடியும் என்றார். கல்வி பள்ளியின் விளையாட்டு ஆலோசகர் விக்னேஷ் நன்றி கூறினார்.

    • வழக்கமாக சேலை அணிவது சவுகரியமாக இருக்காது என்பது பலரின் எண்ணம்.
    • சேலை அணிந்த படி பெண்கள் பந்தை அடித்து உதைக்கும் காட்சிகளும், கோல் அடிப்பதும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    ஆண்களுக்கு பெண்கள் இளைத்தவர்கள் இல்லை என்று அனைத்து துறைகளிலும் பெண்கள் போட்டியிட்டு அசத்தி வருகிறார்கள்.

    இப்போது பெண்கள் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதுபோல மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் கால்பந்து போட்டி நடந்துள்ளது.

    இதில் விசேஷம் என்னவென்றால் போட்டியில் பங்கேற்ற பெண்கள் அனைவருமே சேலையில் விளையாடியதுதான்.

    வழக்கமாக சேலை அணிவது சவுகரியமாக இருக்காது என்பது பலரின் எண்ணம். அந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கும் வண்ணம் குவாலியரில் நடந்த கால்பந்து போட்டியில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் சேலை அணிந்து கால்பந்து விளையாடினர்.

    குவாலியரை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று பள்ளி, கல்லூரி ஆசிரியைகள் மற்றும் சுய உதவி குழு பெண்களை இணைத்து கடந்த ஆண்டு கால்பந்து போட்டி நடத்தியது.

    அப்போது 4 அணிகள் கலந்து கொண்டனர். 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் போட்டிகள் நடைபெற்றது. இதில் 8 அணிகள் பங்கேற்றனர். அனைத்து அணிகளிலும் சுமார் 20 முதல் 72 வயதான பெண்கள் கலந்து கொண்டனர்.

    அனைவருமே சேலை அணிந்தே கலந்து கொண்டனர். இந்த உடையில் எந்த அசவுகரியமும் இல்லை என கால்பந்து விளையாடிய பெண்கள் கூறினர்.

    சேலை அணிந்த படி அவர்கள் பந்தை அடித்து உதைக்கும் காட்சிகளும், கோல் அடிப்பதும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இதுபற்றி போட்டியில் பங்கேற்ற பெண்கள் கூறும்போது, சேலை நமது பாரம்பரிய உடை. அதனை அணிவதால் எந்த அசவுகரியமும் இல்லை. இதனை அணிந்து கொண்டு கால்பந்து கூட விளையாடலாம் என்பதை அனைவருக்கும் உணர்த்தவே இந்த போட்டியில் பங்கேற்றோம். அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியில் இன்னும் அதிக அணிகள் பங்கேற்கும் என்று நம்புகிறோம் என்றனர்.

    • எச்எப்சி நண்பர்கள் குழு நடத்தும் ஐந்து வீரர்கள் பங்கு கொள்ளும் ஒரு நாள் கால்பந்து போட்டி நடைபெற்றது
    • பல்வேறு பகுதிகளில் இருந்து13 போட்டியாளர்கள் கொண்ட குழுவினர் பங்கு கொண்டனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய நாலூர் ஊராட்சி இந்துஜா நகரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து எச்எப்சி நண்பர்கள் குழு நடத்தும் ஐந்து வீரர்கள் பங்கு கொள்ளும் ஒரு நாள் கால்பந்து போட்டி நடைபெற்றது.

    இப்போட்டியினை எச்எப்சி குழுவின் நண்பர்கள் தலைமை வகித்து நடத்தினர். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து13 போட்டியாளர்கள் கொண்ட குழுவினர் பங்கு கொண்டனர். ஆட்டத்தின் முடிவில் டொகோமோ குழுவினர் வெற்றி பெற்று வின்னர் ஆகினர். ரணராக மேலூர் செலக்ட் குழுவினர் இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றனர்.

    இவர்களுக்கு பரிசு தொகையாக முதல் பரிசு அரை சவரன் தங்கநாணயம். இரண்டாம்பரிசு கால் சவரன் தங்க நாணயமும் மற்றும் கோப்பைகளையும் பிஎஸ்பி கட்சியின் பொறுப்பாளர்களான பொன்னேரி சட்டமன்ற தொகுதி தலைவர் நாலூர் மா. ஏசுதாஸ், தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஜோதிராமலிங்கம், தொகுதி அமைப்பாளர் அமரன். சுரேஷ், தொகுதி இளைஞரணி அமைப்பாளர் சத்யா, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் காமேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வழங்கினார்.

    • கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரி கால்பந்து அணி மாநில போட்டிக்கு தகுதி பெற்றது.
    • 24, 25 ஆகிய தேதிகளில் திருச்செங்கோட்டில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    கீழக்கரை

    மதுரை மண்டல பாலிடெக்னிக் கல்லூரிகள் அளவிலான கால்பந்து போட்டி விருதுநகரில் நடந்தது. இதில் மண்டல அளவில் 10 கல்லூரிகளை சேர்ந்த அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். இறுதி ஆட்டத்தில் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் அணியும், அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி அணியும் மோதின. இதில் பெனால்டி கிக்கில் 3-2 என்ற கோல் கணக்கில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி அணி முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் திருச்செங்கோட்டில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், உடற்கல்வி இயக்குநர் மருதாசல மூர்த்தி மற்றும் பயிற்றுநரை, கல்லூரி சேர்மன் யூசுப் சாகிப், இயக்குநர் ஹமீது இபுராஹிம், முதல்வர் அலாவுதீன், துணை முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • போர்ச்சுகல் பயிற்சியாளராக இருந்த பெர்னாண்டோ சான்டோஸ் ராஜினாமா செய்தார்.
    • புதிய பயிற்சியாளர் ராபர்ட்டோ மார்ட்டினஸ் பெல்ஜியம் அணியின் பயிற்சியாளராக இருந்தார்.

    கத்தாரில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணி, காலிறுதியில் எதிர்பாராதவிதமாக மொராக்கோவிடம் தோல்வியடைந்து வெளியேறியது. இதையடுத்து போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளராக இருந்த பெர்னாண்டோ சான்டோஸ், தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில் ஸ்பெயினை சேர்ந்த ராபர்ட்டோ மார்ட்டினஸ் (வயது 49), போர்ச்சுகல் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்பு பெல்ஜியம் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்தார். கத்தார் உலகக்கோப்பை போட்டியில் குரூப் சுற்றில் பெல்ஜியம் அணி வெளியேறியதைத் தொடர்ந்து, மார்ட்டினஸ் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    போர்ச்சுகல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து பேசிய ராபர்ட்டோ, "உலகின் மிகவும் திறமையான அணிகளில் ஒன்றான போர்ச்சுகல் அணியில் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறினார்.

    • இளைஞர்‌ காங்கிரஸ் சார்பில் மாநில கால்பந்து போட்டி நடந்தது.
    • 4-க்கு 3 என்ற கோல் கணக்கில் திருச்சி யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை பயணத்தை முன்னிட்டு மாநில அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.

    இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் செங்கை.எஸ்.விக்னேசுவரன் ஏற்பாட்டில் ராஜா பள்ளி மைதானத்தில் இந்த போட்டி நடந்தது. இதில்பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 22 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

    திருச்சி அணியும், சென்னை அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. பரபரப்பாக நடந்த இறுதி ஆட்டத்தில் பெனால்டி கிக்கில் 4-க்கு 3 என்ற கோல் கணக்கில் திருச்சி யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.

    இதன் பரிசளிப்பு விழாவில் கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர். செல்லக்குமார், ராமநாதபுரம் ராஜா நாகேந்திர சேதுபதி ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினர். மாநில ஆராய்ச்சி குழு தலைவர் மாணிக்கவாசகம், மாவட்ட பொறுப்பு குழு தலைவர் மலேசியா பாண்டியன், மாவட்ட பொறுப்பாளர்கள், நகர் மன்ற உறுப்பினர் ராஜாராம் பாண்டியன், ரமேஷ்பாபு, தெய்வேந்திரன், கோட்டை முத்து, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வேலுச்சாமி, சோ.பா. ரங்கநாதன், ஆனந்தகுமார், ஜோதி பாலன், துல்கிப், கிருஷ்ணராஜ், வட்டார தலைவர்கள் சேதுபாண்டியன், காருகுடி சேகர், செல்லச்சாமி, அன்வர், அல்அமின், ஒன்றிய கவுன்சிலர் திருமுருகன், கபிர், வாணி செய்யது இப்ராகிம் ஆகியோர் கலந்து கொண்டனர். நகர் தலைவர் கோபி நன்றி கூறினார்.

    முன்னதாக மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா படத்திற்கு டாக்டர். செல்லக்குமார் எம்.பி. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) 21.12.2022 முதல் 3.1.2023 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
    • பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டணமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் 'விளையாடு இந்தியா' திட்ட நிதி உதவியில் துவக்க நிலை கால்பந்து பயிற்சிக்கான 'விளையாடு இந்தியா மாவட்ட மையம்' கன் னியாகுமரி மாவட்டம் அறிஞர் அண்ணா விளை யாட்டரங்கத்தில் அமைக் கப்பட உள்ளது.

    இம்மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர் வீராங்கனைகள் சேர்க்கப் பட்டு அவர்களுக்கு தின சரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட, தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்குட்பட்ட கால்பந்து வீரர்/வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுகளா கவும், தற்போது கன்னியா குமரி மாவட்டத்தில் வசிப் பவராகவும் இருக்க வேண் டும்.

    சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவி லான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங் களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேசப் போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும். தேர்ந் தெடுக்கப்படும். பயிற்சி யாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டண மாக ரூ.18 ஆயிரம் வழங் கப்படும்.

    இது நிரந்தரப்பணி அல்ல. முற்றிலும் தற்கா லிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப் பணியோ கோர இயலாது. இதற்குரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) 21.12.2022 முதல் 3.1.2023 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். பிற வழிகளில் வரும் விண் ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நாகர்கோ வில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும்.

    உடற்தகுதி, விளை யாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகிய வற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தேர்வு தேதி மற்றும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

    இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    ×