search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    இன்டர்கான்டினென்டல் கோப்பை வென்ற இந்திய கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி பரிசு- ஒடிசா முதல்வர் அறிவிப்பு
    X

    இன்டர்கான்டினென்டல் கோப்பை வென்ற இந்திய கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி பரிசு- ஒடிசா முதல்வர் அறிவிப்பு

    • இன்டர்கான்டினென்டல் கோப்பை போட்டியை நடத்துவது பெருமைக்குரிய விஷயம் என நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
    • ஒடிசா அரசுக்கு, அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சவுபே நன்றி தெரிவித்தார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு மைதானத்தில் ஹீரோ இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது. நேற்று இரவு நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி லெபனானை வீழ்த்தியது. ஆட்டத்தின் சிறப்பான அம்சமாக கேப்டன் சுனில் சேத்ரியின் 87வது சர்வதேச கோல் மூலமாகவும், லாலியன்சுவாலா சாங்டேவின் ஸ்டிரைக் மூலமாகவும் லெபனானை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இன்டர்கான்டினென்டல் கோப்பையை வென்றது.

    இந்நிலையில், ஹீரோ இன்டர்கான்டினென்டல் கோப்பையை வென்ற, இந்திய ஆண்கள் கால்பந்து அணிக்கு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    "இந்த மதிப்புமிக்க இன்டர்கான்டினென்டல் கோப்பை போட்டியை நமது மாநிலம் நடத்துவது பெருமைக்குரிய விஷயம். கடுமையான போட்டியை எதிர்கொண்டு இந்தியா வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். ஒடிசாவில் இன்னும் பல கால்பந்து நிகழ்வுகளை ஒடிசா மற்றும் இந்தியாவில் நடத்தி இந்த விளையாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்." என்று நிறைவு விழாவின் போது பட்நாயக் கூறினார்.

    போட்டியை வெற்றிகரமாக நடத்திய ஒடிசா அரசுக்கு, அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சவுபே நன்றி தெரிவித்தார்.

    "இதை விட ஒரு சிறப்பான ஹீரோ இன்டர்கான்டினென்டல் கோப்பையை நாங்கள் சிறப்பாக நடத்தியிருக்க முடியாது. பங்கேற்கும் அணிகளுக்கு அனைத்து ஆதரவையும் விருந்தோம்பலையும் வழங்கியதற்காகவும், ஒரு அற்புதமான போட்டியை நடத்தியதற்காகவும் ஒடிசா அரசுக்கு நன்றி," என்று அவர் கூறினார்.

    Next Story
    ×