search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "intercontinental cup"

    • இன்டர்கான்டினென்டல் கோப்பை போட்டியை நடத்துவது பெருமைக்குரிய விஷயம் என நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
    • ஒடிசா அரசுக்கு, அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சவுபே நன்றி தெரிவித்தார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு மைதானத்தில் ஹீரோ இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது. நேற்று இரவு நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி லெபனானை வீழ்த்தியது. ஆட்டத்தின் சிறப்பான அம்சமாக கேப்டன் சுனில் சேத்ரியின் 87வது சர்வதேச கோல் மூலமாகவும், லாலியன்சுவாலா சாங்டேவின் ஸ்டிரைக் மூலமாகவும் லெபனானை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இன்டர்கான்டினென்டல் கோப்பையை வென்றது.

    இந்நிலையில், ஹீரோ இன்டர்கான்டினென்டல் கோப்பையை வென்ற, இந்திய ஆண்கள் கால்பந்து அணிக்கு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    "இந்த மதிப்புமிக்க இன்டர்கான்டினென்டல் கோப்பை போட்டியை நமது மாநிலம் நடத்துவது பெருமைக்குரிய விஷயம். கடுமையான போட்டியை எதிர்கொண்டு இந்தியா வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். ஒடிசாவில் இன்னும் பல கால்பந்து நிகழ்வுகளை ஒடிசா மற்றும் இந்தியாவில் நடத்தி இந்த விளையாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்." என்று நிறைவு விழாவின் போது பட்நாயக் கூறினார்.

    போட்டியை வெற்றிகரமாக நடத்திய ஒடிசா அரசுக்கு, அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சவுபே நன்றி தெரிவித்தார்.

    "இதை விட ஒரு சிறப்பான ஹீரோ இன்டர்கான்டினென்டல் கோப்பையை நாங்கள் சிறப்பாக நடத்தியிருக்க முடியாது. பங்கேற்கும் அணிகளுக்கு அனைத்து ஆதரவையும் விருந்தோம்பலையும் வழங்கியதற்காகவும், ஒரு அற்புதமான போட்டியை நடத்தியதற்காகவும் ஒடிசா அரசுக்கு நன்றி," என்று அவர் கூறினார்.

    இண்டர்காண்டினெண்டல் கால்பந்து கோப்பையில் 2 கோல்கள் அடித்ததன் மூலம் மெஸ்சி சாதனையை சமன் செய்துள்ளார் சுனில் சேத்ரி. #SunilChhetri #Messi
    மும்பை:

    கண்டங்களுக்கிடையேயான கால்பந்து கோப்பை போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா, நியூசிலந்து, கென்யா, சீனா தைபே ஆகிய அணிகள் மோதின. தொடரின் புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா - கென்யா அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. 

    இந்த போட்டியில் இந்தியா 2--0 என்ற கோல்கணக்கில் வென்று காண்டினெண்டல் கால்பந்து கோப்பையை வென்றது. 
    கேப்டன் சுனில் சேத்ரி 2 கோல்களை அடித்து இந்திய வெற்றிக்கு வித்திட்டார்.

    இந்த 2 கோல்களுடன் சேர்ந்து சுனில் சேத்ரி கால்பந்து போட்டிகளில் மொத்தம் 64 கோல்களை அடித்துள்ளார். இதன்மூலம் அர்ஜெண்டினாவுக்காக ஆடிய மெஸ்சியின் 64 கோல்கள் என்ற மைல்கல்லை சமன் செய்துள்ளார்.

    போர்ச்சுக்கலை சேர்ந்த ரொனால்டோ 81 கோல்கள் அடித்து  முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #SunilChhetri #Messi
    இண்டர்காண்டினெண்டல் கோப்பை கால்பந்து இறுதி போட்டியில், இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் கென்யாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. #INDvKEN #IntercontinentalCup
    மும்பை:

    கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து தொடர் மும்பையில் நடந்து வருகிறது. 4 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலை வகித்தன.

    இதையடுத்து கோல் வித்தியாசம் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, கென்யா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    மும்பையில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-கென்யா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.



    ஆட்டத்தின் தொடக்கத்தில் 8வது நிமிடத்தில் இந்திய வீரர் சுனில் சேத்ரி முதல் கோல் அடித்தார். தொடர்ந்து, 29-வது நிமிடத்தில் சுனில் சேத்ரி 2வது கோலையும் அடித்தார். இதையடுத்து, இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.



    அதன்பின், தொடர்ந்து ஆடிய கென்யா அணி இறுதி வரை கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து, இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி கென்யாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. #INDvKEN #IntercontinentalCup
    இந்திய அணியுடனான கால்பந்து போட்டியில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. #INDvNZL #WeAreIndia #BackTheBlue #IntercontinentalCup

    புதுடெல்லி:

    இந்தியா, கென்யா, சீன தைபே, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் கால்பந்து அணிகள் பங்குபெறும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை மும்பையில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் வருகிற 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் கென்யாவை 3-0 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 47-வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் சுனில் செத்ரி கோல் அடித்தார். இது அவரின் 62-வது சர்வதேச கோலாகும். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. 



    அதைத்தொடர்ந்து 49-வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் டி ஜாங் கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 86-வது நிமிடத்தில் டயர் நியூசிலாந்து அணிக்காக இரண்டாவது கோல் அடித்தார். அதன்பின் இந்திய அணியினர் எவ்வளவு முயன்றும் இறுதிவரை மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. #INDvNZL #WeAreIndia #BackTheBlue #IntercontinentalCup 
    மும்பையில் நேற்று நடைபெற்ற கென்யா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு மக்கள் கொடுத்த ஆதரவுக்கு கேப்டன் சுனில் செத்ரி நன்றி தெரிவித்துள்ளார். #SunilChhetri #Chhetri100 #WeAreIndia #BackTheBlue #AsianDream #IntercontinentalCup

    மும்பை: 

    மும்பையில் நடைபெற்று வரும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை கால்பந்து தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் இந்தியா - கென்யா அணிகள் நேற்று மோதின. இது இந்திய அணியின் கேப்டன் சுனில் செத்ரியின் 100-வது சர்வதேச போட்டியாகும். இந்த போட்டியில் செத்ரிக்கு ஆதரவளிக்க ஏராளமான ரசிகர்கள் போட்டியை காண வந்தனர். இந்த போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்து விட்டது.

    இப்போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதில் 100வது சர்வதேச போட்டியில் களமிறங்கிய சுனில் செத்ரி இரண்டு கோல்களும், ஜேஜே ஒரு கோலும் அடித்தனர். 

    இந்த போட்டிக்கு மக்கள் கொடுத்த ஆதரவுக்கு இந்திய அணியின் 
    கேப்டன் சுனில் செத்ரி நன்றி தெரிவித்துள்ளார். 



    இதுகுறித்து டுவிட்டரில் சுனில் செத்ரி கூறியிருப்பதாவது:-

    இன்றைய போட்டியில் கிடைத்த ஆதரவு நாட்டிற்காக விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் கிடைத்தால், மைதானத்தில் எங்கள் உயிரையும் கொடுப்போம் என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். இந்தியா, இந்த இரவு சிறப்பானது, ஏனெனில் நாம் இன்று ஒன்றாக இருந்தோம். மைதானத்திற்கு வந்து ஆரவாரம் செய்தும், வீட்டில் இருந்தும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #SunilChhetri #Chhetri100 #WeAreIndia #BackTheBlue #AsianDream #IntercontinentalCup 
    கென்யா அணியுடனான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், 100வது போட்டியில் இரு கோல்கள் அடித்து அசத்திய சுனில் செத்ரிக்கும் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். #SachinTendulkar #SunilChhetri #Chhetri100 #INDvKEN #WeAreIndia #BackTheBlue #AsianDream #IntercontinentalCup

    மும்பை:

    இந்தியா, கென்யா, சீன தைபே, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் கால்பந்து அணிகள் பங்குபெறும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை மும்பையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் இந்தியா - கென்யா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி கேப்டன் சுனில் செத்ரி 2 கோல்களும், ஜேஜே ஒரு கோலும் அடித்தனர். 

    இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கால்பந்து அணிக்கும், 100வது போட்டியில் இரு கோல்கள் அடித்து அசத்திய சுனில் செத்ரிக்கும் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “தேவைப்பட்ட சிறப்பான வெற்றி இது. நன்றாக விளையாடினீர்கள், இந்தியா. 100-வது போட்டி, இரு கோல்கள் என்பது சிறந்த சாதனை, சுனில் செத்ரி”, என சச்சின் கூறியுள்ளார்.



    ஏற்கனவே சுனில் செத்ரி போட்டியை காண வருமாறு ரசிகர்களுக்கு விடுத்த கோரிக்கைக்கு சச்சின் ஆதரவாக பதிவு செய்திருந்தார். நேற்றைய போட்டியை காண 8 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    கென்யா அணியுடனான கால்பந்து போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. #Chhetri100 #INDvKEN #WeAreIndia #BackTheBlue #AsianDream #IntercontinentalCup

    புதுடெல்லி:

    இந்தியா, கென்யா, சீன தைபே, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் கால்பந்து அணிகள் பங்குபெறும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை மும்பையில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் வருகிற 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

    இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் இந்தியா - கென்யா அணிகள் மோதின. இது இந்திய அணியின் கேப்டன் சுனில் செத்ரியின் 100-வது சர்வதேச போட்டியாகும். இந்த போட்டியில் செத்ரிக்கு ஆதரவளிக்க ஏராளமான ரசிகர்கள் போட்டியை காண வந்தனர். இந்த போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்து விட்டது.

    இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டட்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் கேப்டன் சுனில் செத்ரி கோல் அடித்தார். இது அவரின் 60-வது சர்வதேச கோலாகும். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. 



    அதைத்தொடர்ந்து 71-வது நிமிடத்தில் ஜேஜே ஒரு கோல் அடித்தார். அதன்பின் கூடுதலாக அளிக்கப்பட்ட நேரத்தில் சுனில் செத்ரி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இறுதியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

    இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 7-ம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. #Chhetri100 #INDvKEN #WeAreIndia #BackTheBlue #AsianDream #IntercontinentalCup 
    இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ரசிகர்களுக்கு விடுத்த உருக்கமான கோரிக்கைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் ஆதரவளித்துள்ளார். #SunilChhetri #ViratKohli #SachinTendulkar #IntercontinentalCup

    மும்பை:

    இந்தியாவை பொருத்தவரை கிரிக்கெட் விளையாட்டிற்கு உள்ள ரசிகர்கள் வேறு எந்த விளையாட்டிற்கும் இல்லை. மற்ற போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல சாதனைகள் புரிந்துள்ள போதிலும் அவர்கள் வெகுவாக கவனிக்கப்படுவதோ, ஆதரவளிக்கப்படுவதோ இல்லை.

    பிபா தரவரிசையில் தற்போது 97-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. 97-வது இடம்தான என சாதாரமாக கடந்து செல்ல வேண்டாம். 130-வது இடத்தில் இருந்து இந்தியா 100-க்குள் வந்துள்ளது. தற்போது கேப்டனாக இருக்கும் சுனில் சேத்ரியின் தலைமையில் இந்த முன்னேற்றம் சாத்தியமானது.

    தற்போது நான்கு நாடுகள் மோதும் கால்பந்து தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சீன தைபே அணியுடன் மோதிய இந்தியா 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்தார். இது அவரது மூன்றாவது சர்வதேச ஹாட்ரிக் கோலாகும்.



    ஆனால் அவரது இந்த சாதனையை மைதானத்தில் இருந்து பார்த்தது வெறும் 2 ஆயிரத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே. இதனால், மிகுந்த வருத்தமடைந்த சுனில் சேத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், நாங்கள் உங்களது நேரத்தை பயணக்கும் விதமாக எங்களால் முடிந்தவற்றை செய்கிறோம். இந்திய கால்பந்தின் மீது கடைசி நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அல்லது நம்பிக்கையே இல்லாதவர்கள் மைதானத்தில் வந்து எங்களை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார். மேலும் மைதானத்துக்கு வந்து எங்களை கிண்டல் செய்யுங்கள், விமர்சியுங்கள், உற்சாகப்படுத்துங்கள். இந்திய கால்பந்து அணிக்கு நீங்கள் தேவை எனவும் அவர் கூறினார்.

    சுனில் சேத்ரியின் கோரிக்கைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் ஆதரவு அளித்தார். இதுகுறித்து கோலியும் ஒரு வீடியோவை பதிவு செய்திருந்தார். அந்த பதிவில் தயவு செய்து இந்திய கால்பந்து அணி கேப்டனின் வீடியோவை பார்த்து எதாவது செய்யுங்கள் என கூறியிருந்தார்,

    இந்நிலையில், கிரிக்கெட் உலகின் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரும் சுனில் செத்ரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சச்சினும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் பதிவு செய்திருந்ததாவது, நமது அணி எப்போது, எங்கு விளையாடினாலும் மைதானத்தை நிரப்பி ஆதரவளிப்போம், என அவர் கூறியுள்ளார்.



    இந்திய கால்பந்து அணி நாளை நடைபெறும் போட்டியில் கென்யாவை எதிர்கொள்கிறது. சச்சின் மற்றும் கோலியின் இந்த பதிவுகளால் நாளை இந்திய அணி விளையாடும் போட்டிக்கு ஆதரவு அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது. இந்த போட்டி சுனில் சேத்ரிக்கு 100-வது சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. #SunilChhetri #ViratKohli #SachinTendulkar #IntercontinentalCup
    நியூசிலாந்து உடனான இண்டர்காண்டினெண்டல் கோப்பை கால்பந்து போட்டியில் கென்யா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. #KENvNZL #IntercontinentalCup

    மும்பை:

    இந்தியா, கென்யா, சீன தைபே, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் கால்பந்து அணிகள் பங்குபெறும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை மும்பையில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகள் வருகிற 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் தென்னாபிரிக்கா கலந்துகொள்வதாக இருந்தது. இருப்பினும் அந்த அணி கலந்துகொள்ள முடியாத காரணத்தினால் கென்யா அணி சேர்க்கப்பட்டது.

    நேற்று நடைபெற்ற அறிமுக ஆட்டத்தில் சுனில் செத்ரியின் ஹாட்ரிக் கோலினால் இந்தியா, 5-0 என சீன தைபே அணியை வீழ்த்தியது. இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் கென்யா - நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியின் 42-வது நிமிடத்தில் நியூசிலாந்து அணியின் சர்பிரீத் சிங் கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 45-வது நிமிடத்தில் கென்யா அணியின் கிளிப்டன் மிஹெசோ அயிசி கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டம் 1-1 என சமனானது.



    இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் கென்யா அணியின் மைக்கெல் ஒவெல்லா ஒரு கோல் அடித்தார். நியூசிலாந்து அணியினர் இறுதி வரை முயன்றும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. இதனால் கென்யா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நாளை மறுநாள் நடைபெறும் போட்டியில் கென்யா - இந்தியா அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #KENvNZL #IntercontinentalCup
    சீன தைபே உடனான இண்டர்காண்டினெண்டல் கோப்பை கால்பந்து போட்டியில் சுனில் செத்ரியின் ஹாட்ரிக் கோலால் இந்திய அணி 5-0 என அபாரமாக வெற்றி பெற்றது. #BackTheBlue #INDvTPE #IntercontinentalCup

    புதுடெல்லி:

    இந்தியா, கென்யா, சீன தைபே, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் கால்பந்து அணிகள் பங்குபெறும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை மும்பையில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகள் வருகிற 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் தென்னாபிரிக்கா கலந்துகொள்வதாக இருந்தது. இருப்பினும் அந்த அணி கலந்துகொள்ள முடியாத காரணத்தினால் கென்யா அணி சேர்க்கப்பட்டது.

    நேற்று நடைபெற்ற அறிமுக ஆட்டத்தில் இந்தியா - சீன தைபே அணிகள் மோதின. போட்டி தொடங்கிய 14-வது நிமிடத்தில் இந்திய அணியின் சுனில் செத்ரி கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 34-வது நிமிடத்தில் செத்ரி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் இந்திய அணியின் உதாந்தா சிங் ஒரு கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 62-வது நிமிடத்தில் சுனில் செத்ரி தனது மூன்றாவது கோல் அடித்தார். இது அவரது ஹாட்ரிக் கோல் ஆகும். 78-வது நிமிடத்தில் புரொனாய் ஹேல்டர் கோல் அடித்தார்.



    சீன தைபே அணியினர் இறுதி வரை முயன்றும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று நடைபெறும் போட்டியில் கென்யா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #BackTheBlue #INDvTPE #IntercontinentalCup
    ×