search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இண்டர்காண்டினெண்டல் கோப்பை - சுனில் செத்ரியின் ஹாட்ரிக் கோலால் இந்திய அணி அபார வெற்றி
    X

    இண்டர்காண்டினெண்டல் கோப்பை - சுனில் செத்ரியின் ஹாட்ரிக் கோலால் இந்திய அணி அபார வெற்றி

    சீன தைபே உடனான இண்டர்காண்டினெண்டல் கோப்பை கால்பந்து போட்டியில் சுனில் செத்ரியின் ஹாட்ரிக் கோலால் இந்திய அணி 5-0 என அபாரமாக வெற்றி பெற்றது. #BackTheBlue #INDvTPE #IntercontinentalCup

    புதுடெல்லி:

    இந்தியா, கென்யா, சீன தைபே, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் கால்பந்து அணிகள் பங்குபெறும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை மும்பையில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகள் வருகிற 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் தென்னாபிரிக்கா கலந்துகொள்வதாக இருந்தது. இருப்பினும் அந்த அணி கலந்துகொள்ள முடியாத காரணத்தினால் கென்யா அணி சேர்க்கப்பட்டது.

    நேற்று நடைபெற்ற அறிமுக ஆட்டத்தில் இந்தியா - சீன தைபே அணிகள் மோதின. போட்டி தொடங்கிய 14-வது நிமிடத்தில் இந்திய அணியின் சுனில் செத்ரி கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 34-வது நிமிடத்தில் செத்ரி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் இந்திய அணியின் உதாந்தா சிங் ஒரு கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 62-வது நிமிடத்தில் சுனில் செத்ரி தனது மூன்றாவது கோல் அடித்தார். இது அவரது ஹாட்ரிக் கோல் ஆகும். 78-வது நிமிடத்தில் புரொனாய் ஹேல்டர் கோல் அடித்தார்.



    சீன தைபே அணியினர் இறுதி வரை முயன்றும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று நடைபெறும் போட்டியில் கென்யா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #BackTheBlue #INDvTPE #IntercontinentalCup
    Next Story
    ×