என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இண்டர்காண்டினெண்டல் கால்பந்து கோப்பை - கென்யாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா
Byமாலை மலர்10 Jun 2018 4:50 PM GMT (Updated: 10 Jun 2018 5:57 PM GMT)
இண்டர்காண்டினெண்டல் கோப்பை கால்பந்து இறுதி போட்டியில், இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் கென்யாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. #INDvKEN #IntercontinentalCup
மும்பை:
கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து தொடர் மும்பையில் நடந்து வருகிறது. 4 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலை வகித்தன.
இதையடுத்து கோல் வித்தியாசம் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, கென்யா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
மும்பையில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-கென்யா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஆட்டத்தின் தொடக்கத்தில் 8வது நிமிடத்தில் இந்திய வீரர் சுனில் சேத்ரி முதல் கோல் அடித்தார். தொடர்ந்து, 29-வது நிமிடத்தில் சுனில் சேத்ரி 2வது கோலையும் அடித்தார். இதையடுத்து, இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
அதன்பின், தொடர்ந்து ஆடிய கென்யா அணி இறுதி வரை கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து, இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி கென்யாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. #INDvKEN #IntercontinentalCup
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X