search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cup"

    • இறுதிப்போட்டி வருகிற 15-ந் தேதி மாலை நடைபெறுகிறது.
    • வெற்றி பெறும் அணிக்கு சேம்பியன் கோப்பை வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    அகில இந்திய கால்பந்து கழகம் அறிவுறுத்தல் படி தமிழ்நாடு கால்பந்து கழக வழிகாட்டுதலின் பேரில் தஞ்சாவூர் கால்பந்து சங்கம் சார்பில் இன்று தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான மாவட்டங்களுக்கு இடை யேயான 20 வயதிற்கு உட்பட்ட இளைஞர் கால்பந்து போட்டி தொடங்கியது.

    பல ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கிய இந்த கால்பந்து போட்டி வரும் 15-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, தஞ்சாவூர், சிவகங்கை, நீலகிரி உள்பட 27 மாவட்டங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று நடந்த முதல் போட்டியில் தஞ்சாவூர் கால்பந்து சங்கம் மாவட்ட அணியும், கரூர் கால்பந்து சங்கம் மாவட்ட அணியும் மோதின.

    இந்த போட்டியை தஞ்சை மாவட்ட விளையா ட்டு அலுவலர் டேவிட் டேனியல் தொடங்கி வைத்தார்.

    மாவட்ட உடற்கல்வி அலுவலர் கற்பகம், தமிழக கால்பந்து கழகத் துணைத் தலைவரும் தஞ்சை மாவட்ட கால்பந்து சங்கம் தலைவருமான சிவானந்தம், செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கால்பந்து போட்டியில் நடுவர்களாக 12 பேர் பணியாற்றுகின்றனர். இறுதிப்போட்டி வருகிற 15ஆம் தேதி மாலையில் நடைபெறுகிறது.

    இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சேம்பியன் கோப்பை வழங்கப்படும்.

    இந்த போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை தேர்வு குழுவினர் கண்கா ணித்து அதிலிருந்து சுமார் 40 வீரர்களை தேர்வு தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு முறையாக பயிற்சி அளித்து அதிலிருந்து 22 பேர் தேர்வு செய்யப்படுவர்.

    அவர்கள் தமிழ்நாடு அணிக்கு தேர்ந்தெ டுக்கப்படுவர்.

    அதனை தொடர்ந்து தேசிய அளவிலான மாநில ங்களுக்கு இடையேயான போட்டியில் கலந்து கொண்டு விளையாடுவர்.

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 28 அணிகள் கலந்து கொண்டன.
    • 3-ம் இடத்தை டெல்டா வடுவூர் அணியும் பிடித்தது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அடுத்த பயங்காடு கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி 3 நாட்கள் நடைபெற்றது.

    போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 28 அணிகள் கலந்து கொண்டன. போட்டியின் இறுதி ஆட்டமானது நேற்று நடை பெற்றது.

    இதில் சென்னை சாய் கபடி அணி முதல் இடத்தை பிடித்து, ரூ.40 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பை வென்றது.

    தொடர்ந்து, 2-ம் இடத்தை தமிழ்நாடு வனத்துறை காவல்துறை அணியும், 3-ம் இடத்தை டெல்டா வடுவூர் அணியும் பிடித்தது.

    போட்டியை காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • கடந்த 28-ந் தேதி முதல் 3 நாட்கள் போட்டிகள் நடைபெற்றது.
    • முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்கம் கொடுக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணையம் சாய் விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான 9-வது ஆடவர் கால்பந்தாட்ட போட்டி மூன்று நாட்கள் நடைபெற்றது.

    சக்தி நினைவு கால்பந்து கழகம் மற்றும் மயிலை கால்பந்து கழகம் இணைந்து நடத்திய போட்டியில் மயிலாடுதுறை சென்னை கோயம்புத்தூர் திருச்சி மதுரை, சேலம் காரைக்கால் மற்றும் கேரளாவில் இருந்து ஒரு அணி என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

    கடந்த 28ஆம் தேதி முதல் 3 தினங்கள் நடைபெற்ற போட்டியில் இறுதிப்போட்டிக்கு மயிலாடுதுறை மயிலை கால்பந்து கழக அணியும் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அணியும் தகுதி பெற்றன. இறுதிப்போட்டி நேற்று பரபரப்பாக நடைபெற்றது. இதில் மயிலை கால்பந்து கழகம் 3 க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    முதலிடம் பிடித்த மயிலாடுதுறை அணிக்கு வெற்றிகோப்பை 30 ஆயிரம் ரொக்க தொகையும், 2ம் இடம் பெற்ற திருச்சி செயின்ட்ஜோசப் அணிக்கு வெற்றிகோப்பை மற்றும் 25 ஆயிரம் ரொக்கதொகை வழங்கப்பட்டன.

    மேலும் அரையிறுதி போட்டியில் விளையாடி 3ம் இடம்பிடித்த காரைக்கால் அணி, 4ம் இடம் பிடித்த சென்னை சிடானி எஃப்சி அணிக்கு கோப்பை களும் ரொக்கபரிசும் வழங்கப்பட்டன.

    இதில் அனைவரையும் பாராட்டி தமிழ்ச் சங்கத் தலைவர் பவுல்ராஜ் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

    • மாவட்ட அளவிலான கைப்பந்து, கால்பந்து என பலவகையான போட்டிகள் அன்னை சத்யா மைதானத்தில் நடந்தது.
    • தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து மொத்தம் 65 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் தடகளம், நீச்சல், கூடைப்பந்து, கபடி, சிலம்பம், இறகுபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கையுந்துபந்து, மேசைப்பந்து ஆகிய போட்டிகள் இருபாலருக்கும் கடந்த ஜனவரி 31-ந் தேதி முதல் பிப்ரவரி 25-ந் தேதி வரை தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடந்து முடிந்தது. பள்ளி மாணவ, மாணவியர்கள், கல்லூரி மாணவ, மாணவி யர்கள், பொதுப்பிரிவி னர்கள், மாற்றுத்திற னாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட்டது.

    மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா கடந்த 18-ந் தேதி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், கரிகாற்சோ ழன் கலையரங்க த்தில் நடைப்பெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு த்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று சென்னையில் தொடங்கியது. இந்த போட்டியானது அடுத்த மாதம் 25ஆம் தேதி வரை நடை பெறவுள்ளது. இப்போட்டிகளில் தஞ்சாவூர் மாவட்டத்தினை சேர்ந்த மாணவ- மாணவிகள், வீரர், வீராங்கனைகள் மொத்தம் 694 பேர் கலந்து கொள்கி ன்றனர். முதலாவதாக இன்று முதல் அடுத்த மாதம் 4-ம் தேதி வரை பள்ளி மாணவ, மாணவிகள் கபடி, வாலிபால் மற்றும் பள்ளி, கல்லூரியைச் சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கான சிலம்பம் விளையாட்டுப் போட்டிக ளிலும் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து மொத்தம் 65 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

    இவர்கள் அனைவருக்கும் அன்னை சத்யா விளையாட்டரங்கில் இருந்து அரசு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. போட்டியில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்க னைகள் நேற்று இரவு தஞ்சையில் இருந்து அரசு பஸ்களில் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்களுடன் உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரிய- ஆசிரியைகள், மாவட்ட பயிற்றுனர்கள் ஆகியோரும் சென்றனர்.

    சென்னை செல்லும் பஸ்களை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடி அசைத்து வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். மேலும் சீருடையும் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட்டேனியல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.
    • மதுரையை சேர்்ந்த மாணவ-மாணவிகள் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

    மதுரை

    மதுரையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக முதல்-அமைச்சர் பதக்க விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டு போட்டியில் 1970-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் 45 பரிசுகளில் மூன்றில் ஒரு பங்கு பரிசை இந்தியன் சிலம்பப்பள்ளி மாணவ-மாணவிகள் வென்றனர். இவர்கள் தங்கம், வெள்ளி, வெண்கல பரிசுகளை வென்று சாதனை படைத்தனர். கல்லூரி மாணவர் விஜய ராஜன் சுருள்வாள், ஒற்றைக் கம்பு விளையாட்டில் தங்கமும் வெள்ளி பதக்க மும், ஜெயக்குமார் அலங்காரவீச்சில் தங்கப்பதக்கம் வென்றார்.

    அஜீதா இரட்டைக் கம்பு விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றார். பள்ளிகள் அளவில் நடந்த சிலம்பாட்ட போட்டியில் பாலமுருகன் வெள்ளி பதக்கத்தையும், ஜாலினி வெள்ளிப்பதக்கமும், பொது பிரிவில் மாணவி ஏஞ்சலின் ஜெனிபர் வெண்கல பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தார். இவர்களில் நான்கு பேர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். பரிசு பெற்ற மாணவ மாணவிகளை தலைமை பயிற்சியாளர் மாமல்லன் எஸ்.எம்.மணி, பயிற்சியாளர் வடிவேல், சந்திரா, ஒருங்கி ணைப்பாளர் நிஜாமுதீன், பயிற்சியாளர்கள் கராத்தே கண்ணன், கனிராஜ் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி னர்.

    • அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
    • தி.மு.க. பகுதி கழக செயலாளர் மியாமி ஐயப்பன் தலைமை தாங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்டம் 42 வது வட்ட தி.மு.க. சார்பில் அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.விழாவில் 200 பள்ளி குழந்தைகளுக்கு சாப்பிடும் தட்டு, டம்ளர்கள் வழங்கப்பட்டது.

    விழாவிற்கு தி.மு.க. பகுதி கழக செயலாளர் மியாமி ஐயப்பன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் எஸ்.ஆர்.ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாரபாளையம் சிவா, மாநகர வர்த்தக அணி பார்த்திபன், போஸ் சரவணன், ஜோதிமணி, பிரதிநிதி செல்ல குட்டி, அவைத்தலைவர் மும்மூர்த்தி, அலுவலக பொறுப்பாளர்கள் முனியாண்டி, ராமராஜ், ஆறுமுகம், இளைஞர் அணி கார்த்திகேயன்,கௌதம்,சசிக்குமார், கனகலட்சுமி, செல்லம் நகர் முத்து ,செல்லம் நகர் தேவராஜ், ஜிம் கார்த்தி, வி.எம். விக்கி, லட்சுமி அம்மாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் சுமார் 25 அணிகளாக கலந்து கொண்டனர்.
    • முதலிடம் பிடித்த அணியினருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் கால்பந்து கழகம், சிட்டி யூனியன் வங்கி ஆகியவை இணைந்து நடத்திய மாநில அளவிலான எழுவர் கால்பந்தாட்ட போட்டி கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 3 நாட்களாக நடைபெற்றது. கும்பகோணம் மாநகர தி.மு.க. செயலாளர் சு.ப.தமிழழகன், துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் தஞ்சாவூர், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் சுமார் 25 அணிகளாக கலந்து கொண்டு விளையாடினர்.

    போட்டியின் நிறைவு நாளில் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பொறியாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கல்யாணசுந்தரம் எம்.பி., கும்பகோணம் மாநகர தி.மு.க. செயலாளர் சு.ப.தமிழழகன் ஆகியோர் கலந்து கொண்டு முதலிடம் பிடித்த சென்னை எண்ணூர் நடராஜ் மெமோரியல் கிளப் அணியினருக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பை, 2-ம் இடம் பிடித்த கும்பகோணம் முரட்டு சிங்கிள் புட்பால் கிளப் அணியினருக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் கோப்பை, 3-ம் இடம் பிடித்த தஞ்சாவூர் அத்லெடிக்ஸ் புல்ஸ் அணியினருக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பை, 4-ம் இடம் பிடித்த பாண்டிச்சேரி செலக்டேடு செவன்ஸ் அணியினருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வழங்கி வெற்றி பெற்றவர்களை பாராட்டினர்.

    விழாவில் ஓய்வு பெற்ற வருமான வரித்துறை ஊழியர் அசோக்குமார், தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பாபு, லியோன் சேவியர், சென்னை போக்குவரத்து உதவி ஆய்வாளர் மூர்த்தி, தீயணைப்புத்துறை இளங்கோவன், நகர மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர்கள் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன்,

    கண்ணன், பரமகுரு, தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், சங்கர் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பாலகுரு போட்டியை தொகுத்து வழங்கினார்.

    முடிவில் உதயகுமார் நன்றி கூறினார்.

    • ராமநாதபுரத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.
    • இதனை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் விளை யாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:-

    விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    அத்தகைய போட்டிகள் நடைபெறும்போது விளை யாட்டு வீரர்கள் அதிக ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் திறமைக்கு ஏற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டியிலும் மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற்று சிறந்த வீரர்களாக திகழ்ந்திட வேண்டும்.

    அந்த வகையில் தற்போது இறகுப்பந்து, மேசைப்பந்து, கையுந்து பந்து, கால்பந்து, கபாடி, ஆக்கி, கூடைப்பந்து, நீச்சல் போட்டி, டென்னிஸ், கிரிக்கெட் ஆகிய போட்டிகள் வருகிற 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இப்போட்டியில் அதிகளவு ஆர்வமுடன் பங்கேற்று பயன் பெற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதன் பிறகு 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து ெதாடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை, சான்றிதழ், ரொக்கம் வழங்கல்.

    பாபநாசம்:

    பாபநாசம் ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சை மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து நடத்தும் 10-ம் ஆண்டு சிவஞான முதலியார் நினைவு மாநில அளவிலான சதுரங்க போட்டி கபிஸ்தலத்தில் நடைபெற்றது. பாபநாசம் ரோட்டரி சங்க தலைவர் அறிவழகன் தலைமை தாங்கினார்.

    தஞ்சை மாவட்ட சதுரங்க கழக துணை தலைவர் செந்தில்குமரன் பழனிவேல், இணை செயலாளர் பண்டாரவாடை நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.

    போட்டியை முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநர் பாலாஜி தொடக்கி வைத்தார். போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றி பெற்ற 80 பேருக்கு தஞ்சை மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் பரிசு கோப்பை, சான்றிதழ், ரொக்கம் ஆகியவை வழங்கி பாராட்டினார்.

    பாபநாசம்அரசு வழக்க றிஞர் வெற்றிச்செல்வன், கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன், துணை தலைவர்கள் செந்தில்நாதன், சீனிவாசன், சிவராஜ், ஜாகீர் உசேன், இணை செயலாளர் சிவக்குமார், பொருளாளர் வினோத், செயலாளர் சந்தோஷ், திருச்சி மாவட்ட செயலாளர் தினகரன், நாகை மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் கணேசன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் வெற்றி வேந்தன் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பாராட்டினர்.

    விழாவில் சதுரங்க வீரர்கள், பெற்றோர்கள், மாவட்ட, தாலுகா பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தஞ்சை மாவட்ட சதுரங்க கழக செயலாளர் சிலம்பரசன் நன்றி கூறினார்.

    • போட்டிகளில் 5 மாவட்டங்களிலிருந்து 1300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • அரசு பள்ளிக்கான போட்டியில் சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி கோப்பையை வென்றது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 75 வது சுதந்திர தின அமுத பெருவிழாவோடு IQAC, தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல் மற்றும் காட்சி தொடர்பியல் துறைகள் இணைந்து நடத்தும் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான நுண்க லைகள் திறன் போட்டிகள் நடைபெற்றன.

    இவ்விழா விற்கு அன்னை கல்வி குழும தலைவர் டாக்டர் அன்வர் கபீர் தலைமையேற்றார்.

    அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மாணிக்கவாசுகி முன்னிலை வகித்தார். அன்னை கல்வி குழும செயலர் ஹிமாயூன் கபீர் வாழ்த்துரை வழங்கினார்.

    துணை முதல்வர்கள் பேராசிரியர் இள ஞ்செழியன், பேராசிரியர் ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    உள்தர உத்தரவாத மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் லதா கல்லூரியின் அறிமுக உரையாற்றினார்.

    கும்பகோணம் அரசினர் கல்லூரி மேனாள் தமிழ்த்துறை தலைவரும், அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேனாள் முதல்வர் மணி சிறப்புரையாற்றினார்.

    மேலும், திருவிடை மருதூர் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் மற்றும் திருப்பனந்தாள் கயிலை தேசிக கயிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதோடு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

    அன்னை கல்விக்குழும செயல் அலுவலர் முனைவர் ராஜ்குமார், நிர்வாக இயக்குநர் ரவி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

    துணை முதல்வர்கள் பேராசிரியர் இளஞ்செழியன், பேராசி ரியர் ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    போட்டிகளில் 5 மாவட்டங்களில் இருந்து 1300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    அரசு பள்ளி க்கான போட்டியில் சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியும் மெட்ரிக்பள்ளிக்கான போட்டிகளில் கபிஸ்தலம் ஜாக் அண்ட் ஜில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும் கோப்பையை வென்றது.

    நிகழ்ச்சியின் முதலாவதாக முனைவர் லொயோலா பீரிஸ் வரவேற்றார்.

    இறுதியாக பேராசிரியர் சுபாஷினி நன்றி உரையாற்றினார். இதில், பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

    ×